செய்திகள்

சிவகங்கை அருகே கார் மோதி குழந்தை பலி

Published On 2018-10-08 15:54 GMT   |   Update On 2018-10-08 15:54 GMT
சிவகங்கை அருகே விளையாடி கொண்டு இருந்த குழந்தை மீது கார் மோதிய விபத்தில் குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாமக உயிரிழந்தது.
சிவகங்கை:

சிவகங்கை ஆக்ஸ்போர்டு நகரை சேர்ந்தவர் வெங்கடேசன். இவருடைய மனைவி பாண்டி செல்வி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். வெங்கடேசன் வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு தற்போது ஊருக்கு வந்துள்ளார். பாண்டி செல்வி சிவகங்கையை அடுத்த காஞ்சிரங்காலில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார்.

இவர்களுடைய 2- வது மகள் தீபிகாஸ்ரீ(வயது3) வீட்டுவாசலில் விளையாடி கொண்டு இருந்தாள். அப்போது அருகில் வசிக்கும் சங்கீதா (32) என்ற பெண் தன்னுடைய காரை பின்னோக்கி ஓட்டியபோது எதிர்பாராதவிதமாக தீபிகாஸ்ரீ மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் சிவகங்கை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகர் வழக்குப்பதிவு செய்துவிசாரணை செய்து வருகிறார்.
Tags:    

Similar News