செய்திகள்

வேளாங்கண்ணியில் புகையிலை பொருட்கள் விற்ற 4 பேர் கைது

Published On 2018-10-01 16:29 GMT   |   Update On 2018-10-01 16:29 GMT
வேளாங்கண்ணியில் புகையிலை பொருட் களை விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
வேளாங்கண்ணி:

நாகை மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவிட்டார். அதன்பேரில் நாகை மாவட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன், இன்ஸ்பெக்டர் சுவாமிநாதன், சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் வேளாங்கண்ணியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த வேளாங்கண்ணி கீழத்தெருவை சேர்ந்த மணிகண்டன் (வயது32), ஆரியநாட்டு தெருவை சேர்ந்த சகாயராஜ் (33), கத்தரிப்புலம் பனையடி குத்தகையை சேர்ந்த குமரவேல் (38) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் வேளாங் கண்ணி பஸ் நிலையம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை வழிமறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் நாகை வெளிப்பாளையம் மறைமலைநகரை சேர்ந்த தாஜிதீன் (36) என்பதும், மோட்டார்சைக்கிளில் புகையிலை பொருட்களை விற்பனைக்காக எடுத்து சென்றதும் தெரியவந்தது. அவரிடம் இருந்து ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட் களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தாஜிதீனை கைது செய்தனர். 
Tags:    

Similar News