செய்திகள்

ஜெயங்கொண்டத்தில் மனைவியின் சேலையால் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

Published On 2018-09-29 22:42 IST   |   Update On 2018-09-29 22:42:00 IST
ஜெயங்கொண்டத்தில் மனைவியின் சேலையால் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வேலாயுத நகர் 7-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் வில்வராஜா(வயது 30). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி கயல்விழி. இவர், கல்லூரி படிப்பு சம்பந்தமான தேர்வு எழுதுவதற்காக பெங்களூரு சென்றுள்ளார்.

இதையடுத்து அவரும், வில்வராஜாவும் செல்போனில் பேசியுள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் மன உளைச்சலில் இருந்த வில்வராஜா, நேற்று காலை வீட்டில் மனைவியின் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீசார் அங்கு சென்று, வில்வராஜாவின் உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

Similar News