செய்திகள்

தமிழக அரசு நடுநிலையோடு இருக்க வேண்டும் - கருணாஸ் கைதுக்கு விஜயகாந்த் கண்டனம்

Published On 2018-09-23 09:13 GMT   |   Update On 2018-09-23 09:13 GMT
தங்களுக்கு வேண்டியவர்கள் தவறு செய்தால் கண்டுகொள்ளாமல் இருப்பது மற்றொரு பக்கம் அச்சுறுத்தல் செய்வதற்காக கைது நடவடிக்கையை எடுப்பது கண்டிக்கத்தக்கது என விஜயகாந்த் தெரிவித்துள்ளார். #Karunas #Vijayakant
சென்னை:

முதல்வர் மற்றும் காவல்துறையை அவதூறாக பேசிய வழக்கில் எம்.எல்.ஏ கருணாஸ் இன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரது கைதுக்கு பல அரசியல் கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-

நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் அவர்களை கைது செய்ததை கண்டிக்கிறேன். தமிழக அரசு நடுநிலையாக  இருக்கவேண்டும்.  தங்களுக்கு வேண்டியவர்கள் தவறு செய்தால் கண்டுகொள்ளாமல் இருப்பது, மற்றொரு பக்கம் அச்சுறுத்தல் செய்வதற்காக இதுபோன்ற கைது நடவடிக்கை எடுப்பது கண்டிக்கத்தக்கது! 

என விஜய காந்த் பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News