செய்திகள்

செந்துறை அருகே கள்ளக்காதலனுடன் ஏற்பட்ட தகராறில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2018-09-20 15:48 GMT   |   Update On 2018-09-20 15:48 GMT
செந்துறை அருகே கள்ளக்காதலனுடன் ஏற்பட்ட தகராறில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
செந்துறை:

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள இலைக் கடம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் குமரவேல் (வயது 46). அரசு பஸ் டிரைவர். இவர் தனது குடும்பத்துடன் விருத்தாசலம் புதுக்குப்பத்தில் வசித்து வருகிறார். இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சண்முகம் மனைவி ஆனந்தவள்ளி (36) என்பவருக்கும் கடந்த பல ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரண்டு பேரும் இலைக்கடம்பூர் கிராமத்தில் உள்ள பழைய வீட்டிற்கு வந்து உள்ளனர். அப்போது இரவு நேரத்தில் ஆனந்த வள்ளிக்கு செல்போன் மூலம் மற்றொரு நபரிடம் இருந்து அழைப்பு வந்து உள்ளது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் மனமுடைந்த ஆனந்தவள்ளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த செந்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆனந்தவள்ளி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

Similar News