செய்திகள்
ஆசிட்டை குடித்து கிராம நிர்வாக அதிகாரி தற்கொலை
புதுக்கோட்டையில் குடும்ப தகராறில் ஆசிட்டை குடித்து கிராம நிர்வாக அதிகாரி தற்கொலை செய்து கொண்டார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை பெரியார் நகரை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 30). இவர் அன்னவாசல் அருகே உள்ள பரம்பூரில் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்தார். நேற்று முனதினம் காலை அருண்குமார் வேலைக்கு சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்ப வில்லை.
இந்தநிலையில் அருண்குமார் புல்வயல் பகுதியில் உள்ள காட்டு பகுதிக்குள் ஆசிட் குடித்த நிலையில் உயிருக்கு போராடுவதாக அவரது நண்பர்களுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவரது நண்பர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அருண்குமாரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அருண்குமார் பரிதாபமாக இறந்தார்.
அவர் குடும்ப தகராறு காரணமாக ஆசிட் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் பணிச்சுமையால் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்றும் அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அருண்குமாருக்கு திருமணமாகி மீனாட்சி என்ற மனைவியும், 10 மாத ஆண் குழந்தையும் உள்ளது.