செய்திகள்

ஆண்டிப்பட்டி அருகே தனியாக இருந்த பெண்ணிடம் அத்து மீறிய வாலிபர் கைது

Published On 2018-08-25 17:15 IST   |   Update On 2018-08-25 17:15:00 IST
ஆண்டிப்பட்டி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தேனி:

ஆண்டிப்பட்டி அருகே உள்ள கடமலைக்குண்டு சிரைப்பாறை பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் குபேந்திரன். லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சித்ரா (வயது 27). சம்பவத்தன்று இவர் வீட்டில் தனது குழந்தையுடன் தனியாக உறங்கிக் கொண்டு இருந்தார். இதனை நோட்டமிட்ட அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (36) என்பவர் வீட்டின் கதவை தட்டினார். வெளியே வந்த சித்ராவின் கையை பிடித்து இழுந்து தவறாக நடக்க முயன்றார். அவர் சத்தம் போட்டு வெளியேறும் படி கூறினார்.

அந்த நேரத்தில் குபேந்திரன் வந்து விடவே சுரேசை தட்டிக் கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த அவர் குபேந்திரனை தாக்கி கொலை மிட்டல் விடுத்தார். இது குறித்து சித்ரா கடமலைக்குண்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேசை கைது செய்தனர்.

Tags:    

Similar News