செய்திகள்

நெகமம் அருகே இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2018-08-22 16:18 GMT   |   Update On 2018-08-22 16:18 GMT
நெகமம் அருகே தனிக்குடித்தனத்துக்கு கணவர் வர மறுத்ததால் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பொள்ளாச்சி:

கோவை மாவட்டம் நெகமம் அருகே உள்ள தேவனாம்பாளையத்தை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பிரவினா (24). இவர்களுக்கு திருமணமாகி 5 வருடம் ஆகிறது. 3 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. சண்முகசுந்தரம் தனது தாயுடன் கூட்டு குடும்பமாக வசித்து வருகிறார்.

நேற்று சண்முக சுந்தரம் வேலைக்கு சென்று விட்டார். இந்த நிலையில் பிரவினா தனது அறையில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மகன் அருகில் அழுது கொண்டிருந்தான். இந்த சத்தம் கேட்டு பக்கத்து அறையில் இருந்த பிரவினாவின் மாமியார் ஓடி வந்தார். அப்போது பிரவினா அறை உள் பக்கம் பூட்டப்பட்டு இருந்தது.

இது குறித்து வேலைக்கு சென்று இருந்த தனது மகன் சண்முக சுந்தரத்துக்கு தகவல் கொடுத்தார். அவர் விரைந்து வந்தார். கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது பிரவினா தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து பொள்ளாச் சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மகளிர் போலீசார் விரைந்து வந்து பிரவினா உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

பிரவினா தனது கணவரிடம் தனிக்குடித்தனம் செல்லலாம் என கூறி அதற்கான பொருட்களையும் வாங்கியதாக கூறப்படுகிறது. இதற்கு கணவர் சண்முக சுந்தரம் மறுப்பு தெரிவித்துள்ளார். இதில் ஏற்பட்ட மன வேதனையில் பிரவினா தற்கொலை செய்தாரா? அல்லது வேறு காரணம் உள்ளதா? என மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமான 5 வருடத்தில் இளம் பெண் தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற்று வருகிறது.
Tags:    

Similar News