விளையாட்டு

இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: காலிறுதியிதில் சிந்து, லக்ஷயா சென் தோல்வி

Published On 2026-01-23 18:28 IST   |   Update On 2026-01-23 18:28:00 IST
  • பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து சீனாவின் சென் யூபி உடன் மோதினார்.
  • இந்த ஆட்டத்தில் 21-13, 21-17 என்ற கணக்கில் சிந்து தோல்வியடைந்தார்.

ஜகார்த்தா:

இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் இந்தோனேசியாவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து சீனாவின் சென் யூபி உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் 21-13, 21-17 என்ற கணக்கில் சீனா வீராங்கனை சென் யூபி வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

இதேபோல், ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் லக்ஷயா சென் மற்றும் தாய்லாந்தை சேர்ந்த பக்கபோன் தீரரட்சகுல் ஆகியோர் மோதினர்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் தீரரட்சகுல் 21-18, 22-20 செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

Tags:    

Similar News