செய்திகள்

கரியாப்பட்டினம் அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

Published On 2018-08-13 16:14 GMT   |   Update On 2018-08-13 16:14 GMT
கரியாப்பட்டினம் அருகே வேலை இல்லாயில்லாத விரக்தியில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
வேதாரண்யம்:

வேதாரண்யத்தை அடுத்த கரியாப்பட்டினம் அருகே உள்ள உம்பளச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ் (வயது 30). இவருடைய மனைவி அனுசுயா (28). திருப்பூரில் உள்ள தனியார் கம்பெனியில் அனுசுயா வேலை பார்த்து வருகிறார். இதனால் சதீஷ், அவரது பெற்றோருடன் வசித்து வந்தார்.

இவர் வேலை இல்லாமல் வீட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த அவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்தார். உடனே அவரை சிகிச்சைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சதீஷ் இறந்தார். இதுகுறித்து சதீசின், தாயார் குணசுந்தரி அளித்த புகாரின் பேரில் கரியாப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

Similar News