செய்திகள்

வேலைக்கு செல்லாததால் பெற்றோர் கண்டிப்பு: விஷம் தின்று தொழிலாளி தற்கொலை

Published On 2018-06-17 17:27 GMT   |   Update On 2018-06-17 17:27 GMT
வேலைக்கு செல்லாததற்கு பெற்றோர் கண்டித்ததால் அரளி விதையை அரைத்து தின்று தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
திட்டச்சேரி:

நாகை மாவட்டம் திட்டச்சேரி போலீஸ் சரகம் குத்தாலம் கீழத்தெருவை சேர்ந்தவர் சேகர் மகன் ராஜ்குமார் (வயது20). தொழிலாளி. இவர் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அவரது பெற்றோர் கண்டித்தனர். இதனால் மனவேதனை அடைந்த அவர் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அரளி விதையை (விஷம்) அரைத்து தின்றார். உடனே அவரை சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜ்குமார் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது அண்ணன் அருண்குமார் கொடுத்த புகாரின்பேரில் திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரக்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

Similar News