செய்திகள்

பேரையூர் அருகே விபத்தில் டிரைவர் பலி

Published On 2018-06-08 16:30 IST   |   Update On 2018-06-08 16:30:00 IST
திருமங்கலம் அருகே பேரையூர் அருகே லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பேரையூர்:

விருதுநகர் மாவட்டம், வத்ராயிருப்பைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் பிரபாகரன் (வயது 26). இவர் சொந்தமாக மினி லாரி வைத்து இயக்கி வருகிறார். நேற்று திண்டுக்கல்லில் சரக்குகளை இறக்கி விட்டு ஊருக்கு புறப்பட்டார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பேரையூரை அடுத்துள்ள பாறை பட்டி 4 வழிச்சாலையில் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி நேருக்கு நேர் மோதியது.

இதில் மினிலாரியின் உள்பகுதி பலத்த சேதமடைந்தது. உள்ளே இருந்த பிரபாகரன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

மற்றொரு லாரியில் வந்த விருதுநகர் மாங்குடி மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த அருள்ஜீவா (29) படுகாயம் அடைந்தார்.

விபத்து குறித்து தகவல் அறிந்த பேரையூர் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். 1 மணி நேரம் போராடி மினி லாரியில் இறந்த பிரபாகரின் உடலை மீட்டனர். அருள் ஜீவா மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #Tamilnews
Tags:    

Similar News