செய்திகள்

அரியலூரில் புதுப்பெண் கொலை?

Published On 2018-06-06 11:34 GMT   |   Update On 2018-06-06 11:34 GMT
அரியலூரில் புதுப்பெண் இறந்தது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அரியலூர்:

அரியலூர் எருத்துகாரன் பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன். அரியலூர் மாவட்ட தே.மு.தி.க. ஒன்றிய செயலாளராக உள்ளார். இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த பெரியசாமி என்பரது மகள் வெற்றி செல்விக்கும் (வயது23)பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கத்தைதொடர்ந்து வெற்றி செல்வி மணிகண்டனிடம் ரூ1.20 லட்சம் கடனாக பெற்றார். ஆனால் வாங்கிய கடனை வெற்றி செல்வி திருப்பி கொடுக்க வில்லை.

மணிகண்டன் பணத்தை திருப்பி கேட்ட போது வெற்றி செல்வி மற்றும் அவரது தந்தை பெரியசாமி, தாய் தமிழரசி ஆகிய 3 பேரும் மணிகண்டனுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து மணிகண்டன் கயர்லாபாத் போலீசில் புகார் செய்தார். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்க வில்லை என்று கூறப்படுகிறது. 

இதைத் தொடர்ந்து மணிகண்டன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். பின்னர் கோர்ட்டின் உத்திரவு படி கயர்லாபாத் போலீசார் வெற்றிசெல்வி, பெரியசாமி, தமிழரசி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந் நிலையில் கடந்த 29-5-18 அன்று வெற்றி செல்வியை மணிகண்டன் கடத்தி சென்று திருமணம் செய்தார். இருவரும் எருத்து காரன்பட்டியில் குடும்பம் நடத்தி வந்தனர். இந் நிலையில் வெற்றிசெல்வி வீட்டில் தூக்கு மாட்டிய நிலையில் பிணமாக தொங்கினார்.

இது குறித்து தகவல் அறிந்தும் அரியலூர் போலீசார் விரைந்து சென்று வெற்றி செல்வி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வெற்றி செல்வியின் தந்தை பெரியசாமி அரியலூர் போலீசில் எனது மகளை மணிகண்டன் மற்றும் அவரது உறவினர்கள் சேகர் அவரது மனைவி பரிமளா, மாரிமுத்து அவரது மனைவி வேவுகரசி ஆகிய 5 பேர் சேர்ந்து அடித்து கொன்றுள்ளார்கள் என கூறியுள்ளார்.

இது குறித்து ஆர்.டி.ஓ. சத்திய நாராணன், இன்ஸ் பெக்டர் பழனியப்பன், சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். வெற்றி செல்வி அடித்து கொலை செய்யப்பட்டரா? அல்லது தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டாரா என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News