செய்திகள்

சேலத்தில் சிறுமி கடத்தல்

Published On 2018-05-30 13:13 GMT   |   Update On 2018-05-30 13:13 GMT
கடையில் வேலை பார்த்த சிறுமி கடத்தப்பட்டது குறித்து அவரது பெற்றோர் போலீசில் புகார் தெரிவித்தனர். போலீசார் சிறுமியை தேடி வருகிறார்கள்.

சேலம்:

சேலம், திருவாக வுண்டனூர் பைபாஸ் சாலையை சேர்ந்த 15 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் 10-ம் வகுப்பு படித்து முடித்து விட்டு ஒரு கடையில் வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு திடீரென மாயமானார். 

இந்த சம்பவம் குறித்து அவரது பெற்றோர் சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் வசந்தகுமார் என்பவருக்கும், அந்த பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் அந்த பெண்ணை வசந்தகுமார் கடத்தி சென்றிருப்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் இருவரையும் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News