செய்திகள்

புதுக்கோட்டை அருகே கார் கவிழ்ந்த விபத்தில் ஆசிரியை பலி

Published On 2018-05-23 23:43 IST   |   Update On 2018-05-23 23:43:00 IST
புதுக்கோட்டை அருகே கார் கவிழ்ந்த விபத்தில் காரின் இடிபாடுகளில் சிக்கிய ஆசிரியை ஷீலாவதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
புதுக்கோட்டை:

நாமக்கல் மாவட்டம் அரூரை அடுத்த நத்தம்மேடு பகுதியை சேர்ந்தவர் மகேஷ்(வயது 36). இவர் நாமக்கல் மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஷீலாவதி(31). இவர் தஞ்சை மாவட்டம், பேராவூரணி பகுதியில் அரசுப்பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு இனேஷ்(4), என்ற மகனும், விஷ்மிதா என்ற 10 மாத பெண் குழந்தையும் உள்ளனர்.

ஆசிரியை ஷீலாவதி பணி புரியும் வகையில் பேராவூரணியில் வீடு ஒன்று பார்த்து ஏற்பாடு செய்து விட்டு அனைவரும் காரில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். காரை மகேஷ் ஓட்டி வந்துள்ளார். புதுக்கோட்டை கட்டியாவயல் பகுதியில் வந்தபோது காரின் முன்பக்க டயர் வெடித்தது. இதனால் தாறுமாறாக ஓடிய கார் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் காரின் இடிபாடுகளில் சிக்கிய ஆசிரியை ஷீலாவதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

காரை ஓட்டிவந்த மகேஷ் மற்றும் 2 குழந்தைகளும் காயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருக்கோகர்ணம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் காயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் ஷீலா வதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

Similar News