கிரிக்கெட் (Cricket)

டி20 போட்டி: 50 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வெற்றி கொண்ட நியூசிலாந்து

Published On 2026-01-28 22:43 IST   |   Update On 2026-01-28 22:43:00 IST
  • முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 7 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் குவித்தது.
  • அபிஷேக் சர்மா டக் அவுட் ஆகி வெளியேறினார்.

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது.

முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 7 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் குவித்தது. இதனால் 216 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது.

அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். அபிஷேக் சர்மா டக் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து சூர்யகுமாயர் யாதவ் வந்த வேகத்தில் 8 ரன்னில் வெளியேறினார்.

3-வது விக்கெட்டுக்கு சஞ்சு சாம்சன் உடன் ரிங்கு சிங் ஜோடி சேர்ந்தார். சஞ்சு சாம்சன் 15 பந்தில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

18.4 ஓவர்களில் 165 ரன்கள் மட்டுமே இந்தியாவால் எடுக்க முடிந்தது. இதன்மூலம் 50 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை நியூசிலாந்து வெற்றி கொண்டது.

Tags:    

Similar News