செய்திகள்

ஆலங்குடி அருகே மரத்தில் கார் மோதி டிரைவர் உட்பட 5 பேர் காயம்

Published On 2017-11-08 12:46 GMT   |   Update On 2017-11-08 12:46 GMT
ஆலங்குடி அருகே புளிய மரத்தில் கார் மோதிய விபத்தில் டிரைவர் உட்பட 5 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
திருவரங்குளம்:

கொத்தமங்கலத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 33), இவர் அதே பகுதியில் ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். இவரது தந்தைக்கு கடந்த சில நாட்களாக உடல் நிலை சரியில்லை. இதனால் தஞ்சையில் உள்ள ஒரு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது தந்தையை பார்ப்பதற்காக கொத்தமங்கலத்தில் இருந்து, தனது கடையில் பணிபுரியும் நடராஜன் (45), உறவினர்கள் விஜயகுமார் (45), வடகாடு சக்கரவர்த்தி (55) ஆகியோருடன் ஒரு காரில் கிளம்பினார்.  காரை டிரைவர் செல்வக்குமார் (27) ஓட்டி சென்றார். தஞ்சை சென்றுவிட்டு பின்னர் அங்கிருந்து இரவு நள்ளிரவில்  திரும்பினர்.

கார் திருவரங்குளம் அருகே ஆலங்குடி புதுக் கோட்டை சாலையில் வந்த போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தறிகெட்டு ஓடியது. பின்னர் சாலையின் ஓரத்தில் இருந்த புளியமரத்தில் மோதி நின்றது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த நடராஜன், சக்கரவர்த்தி உட்பட அனைவருக்கும் காயம் ஏற்பட்டது.  

பின்னர் அனைவரும் அருகில் உள்ள மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இது குறித்து ஆலங்குடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News