செய்திகள்
மாமல்லபுரம் அருகே வேன் மோதி அரசு ஊழியர் பலி
மாமல்லபுரம் அருகே சுற்றுலா வேன் மோதிய விபத்தில் அரசு ஊழியர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாமல்லபுரம்:
சென்னை பெரம்பூரை சேர்ந்தவர் விக்னேஷ்வரன் (வயது 34). கடலூரில் கூட்டுறவு சங்கத்தின் பதிவாளராக வேலை பார்த்து வந்தார்.
நேற்று இரவு அவர் கோயம்பேட்டில் இருந்து கடலூருக்கு பஸ்சில் புறப்பட்டார். எதிர்பாராமல் பூஞ்சேரியில் இறங்கி விட்டார்.
பின்னர் வழிதெரியாமல் கடம்பாடி நோக்கி கிழக்கு கடற்கரை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது பாண்டிச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வந்த சுற்றுலா வேன் திடீரென விக்னேஷ்வரன் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை பெரம்பூரை சேர்ந்தவர் விக்னேஷ்வரன் (வயது 34). கடலூரில் கூட்டுறவு சங்கத்தின் பதிவாளராக வேலை பார்த்து வந்தார்.
நேற்று இரவு அவர் கோயம்பேட்டில் இருந்து கடலூருக்கு பஸ்சில் புறப்பட்டார். எதிர்பாராமல் பூஞ்சேரியில் இறங்கி விட்டார்.
பின்னர் வழிதெரியாமல் கடம்பாடி நோக்கி கிழக்கு கடற்கரை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது பாண்டிச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வந்த சுற்றுலா வேன் திடீரென விக்னேஷ்வரன் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.