செய்திகள்

மதுராந்தகத்தில் மதுபோதை தகராறில் வாலிபர் கொலை: நண்பர் கைது

Published On 2017-08-07 07:28 GMT   |   Update On 2017-08-07 07:28 GMT
மதுராந்தகத்தில் மதுபோதை தகராறில் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்.
மதுராந்தகம்:

மதுராந்தகத்தை அடுத்த ஜமீன்எண்டத்தூரை சேர்ந்தவர் தனசேகர் (வயது 37). கூலித் தொழிலாளி. மதுராந்தகம் பஸ் நிலையத்தில் வேலை பார்த்து வந்தார்.

இவரும் அதே பகுதியில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வரும் குமாரும் நண்பர்கள்.

கடந்த 4-ந் தேதி இருவரும் மதுராந்தகம் பஸ் நிலையம் அருகே மது அருந்தினர். அப்போது அவர்களுக்கிடையே திடீரென தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த குமார் அருகில் கிடந்த கட்டையால் தனசேகரை தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த அவருக்கு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி தனசேகர் பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து மதுராந்தகம் போலீசார் கொலை வழக்குபதிவு செய்து குமாரை கைது செய்தனர். கொலைக்கான காரணம் குறித்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
Tags:    

Similar News