உள்ளூர் செய்திகள்

கோவையில் எலக்ட்ரீசியன் வீடு உள்பட 2 வீடுகளில் 20 பவுன் நகைகள் கொள்ளை

Published On 2023-11-02 14:44 IST   |   Update On 2023-11-02 14:44:00 IST
  • செந்தில்குமார் வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர்.
  • செந்தில்குமார் சுந்தராபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

கோவை,

கோவை சுந்தராபுரம் அருகே உள்ள ஆறுமுக கவுண்டர் வீதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 44). எலக்ட்ரிசீயன். சம்ப வத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கோவிலுக்கு சென்றார்.

அப்போது செந்தில்குமார் வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின், நெக்லஸ், கம்மல், மோதிரம் உள்பட 16 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

வீட்டிற்கு திரும்பிய செந்தில்குமார் கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த தங்க நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து தப்பிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அவர் சுந்தராபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் சம்பவஇடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த மர்மநபர்களின் கை ரேகைகளை பதிவு செய்தனர்.

இதனை வைத்து சுந்தராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து எலக்ட்ரிசீயன் வீட்டில் 16 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

சரவணம்பட்டி காளப்பட்டி ரோட்டை சேர்ந்தவர் கார்த்திக் (39). ஐ.டி. ஊழியர். இவர் வீட்டை பூட்டி விட்டு சொந்த ஊரான சேலத்துக்கு சென்றார்.

அப்போது இவரது வீட்டின் பின் பக்க கதவை உடைத்து உள்ளே சென்ற மர்மநபர்கள் பீரோவில் இருந்த 4 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News