உள்ளூர் செய்திகள்

காரமடை பகுதியில் ஒரே நாளில் 2 பேர் விஷம் குடித்து தற்கொலை

Published On 2023-08-06 09:16 GMT   |   Update On 2023-08-06 09:16 GMT
  • சம்பவத்தன்று இரவு வீட்டில் இருந்த களைக் கொல்லி பூச்சி மருந்தினை குடித்து சம்பத்குமார் தற்கொலைக்கு முயன்றார்.
  • சம்பத்குமாரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

மேட்டுப்பாளையம்,

காரமடையை அடுத்துள்ள மருதூர் ஊராட்சிக்கு உட்பட்ட சாலையூர் துரைசாமி கவுண்டர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் அய்யாசாமி(60).இவரது மனைவி ஜெயமணி(56).

இந்த தம்பதிக்கு விமலா(36) என்ற மகளும், சம்பத்குமார்(34) என்ற மகனும் உள்ளனர்.

சம்பத் குமாருக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த விபத்து காரணமாக வலிப்பு நோய் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது.

சம்பவத்தன்று இரவு வீட்டில் இருந்த களைக் கொல்லி பூச்சி மருந்தினை குடித்து சம்பத்குமார் தற்கொலைக்கு முயன்றார்.

இதனையடுத்து அவரை மீட்ட ஜெயமணி 108 ஆம்புலன்ஸ் மூலமாக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதேபோல் காரமடை ஆர்.வி.நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ்(48). இவரது மனைவி சுபிதா(37).பிரகாஷ் காரமடையை அடுத்த பெட்டதாபுரம் தண்ணீர் பந்தல் பகுதியில் சிப்ஸ் கடை வைத்து நடத்தி வந்தார்.

சிப்ஸ் கடை மூலமாக போதிய வருமானம் கிடைக்காததால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக தெரி கிறது. இதனால் விரக்தி யடைந்து நேற்று காலை விஷம் குடித்து தற்கொ லைக்கு முயன்றார்.

அவரை மீட்ட மனைவி சுபிதா மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோ தித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

2 தற்கொலை சம்ப வங்கள் தொடர்பாக கார மடை இன்ஸ்பெக்டர் ராஜ சேகரன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News