சிங்காநல்லூர் அருகே பால் வியாபாரி வீட்டில் 15 பவுன் நகைகள்-பணம் கொள்ளை
- பீரோவில் இருந்த நகைகள் கொள்ளை போயிருந்தது.
- பால்வியாபாரி வீட்டின் கதவை திறந்து கொள்ளையடித்து சென்ற மர்மநபரை தேடி வருகிறார்கள்.
கோவை,
கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள மசக்காளிபாளையத்தை சேர்ந்தவர் சதாசிவம் (வயது 60). ஆவின் பால் வியாபாரி.
சம்பவத்தன்று இவரது மகன், வீட்டின் கதவை பூட்டி விட்டு சாவியை வெளியே உள்ள பகுதியில் மறைத்து வைத்து விட்டு வெளியே சென்றார். இதனை நோட்டமிட்ட யாரோ மர்மநபர் சாவியை எடுத்தார்.
பின்னர் வீட்டின் கதவை திறந்து மர்மநபர் உள்ளே சென்றார். மர்மநபர் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின், கம்மல், மோதிரம், டாலர் உள்பட 15 பவுன் தங்க நகைகள், ரூ.5 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றார்.
வீட்டிற்கு திரும்பிய சதாசிவம் பீரோவில் இருந்த நகைகள் கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பால்வியாபாரி வீட்டின் கதவை திறந்து 15 பவுன் தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபரை தேடி வருகிறார்கள்.
கோவை,
கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள மசக்காளிபாளையத்தை சேர்ந்தவர் சதாசிவம் (வயது 60). ஆவின் பால் வியாபாரி.
சம்பவத்தன்று இவரது மகன், வீட்டின் கதவை பூட்டி விட்டு சாவியை வெளியே உள்ள பகுதியில் மறைத்து வைத்து விட்டு வெளியே சென்றார். இதனை நோட்டமிட்ட யாரோ மர்மநபர் சாவியை எடுத்தார்.
பின்னர் வீட்டின் கதவை திறந்து மர்மநபர் உள்ளே சென்றார். மர்மநபர் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின், கம்மல், மோதிரம், டாலர் உள்பட 15 பவுன் தங்க நகைகள், ரூ.5 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றார்.
வீட்டிற்கு திரும்பிய சதாசிவம் பீரோவில் இருந்த நகைகள் கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பால்வியாபாரி வீட்டின் கதவை திறந்து 15 பவுன் தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபரை தேடி வருகிறார்கள்.