உள்ளூர் செய்திகள்

பண்ருட்டியில் மது விற்ற பெண் உள்பட 3 பேர் கைது

Published On 2023-05-27 07:38 GMT   |   Update On 2023-05-27 07:38 GMT
  • பண்ருட்டியில் மது விற்ற பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • 20 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

கடலூர்:

பண்ருட்டி புதுப்பேட்டை பகுதியில் டி.எஸ்.பி சபியு ல்லா உத்தரவி ன்பேரில் இன்ஸ்பெக்டர்(பொ)நந்தகுமார் தலைமையில் போலீசார் நேற்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சின்ன எலந்தம்பட்டி ரோட்டு தெருவை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 65), இவரது மகன் பாண்டியன் (31) ஆகியோர் மது, சாரா யம் விற்பனை செய்தது தெரியவந்தது. இதனைதொடர்ந்து இவர்கள் 2 பேரையும் போலீசார் பிடித்து கைது செய்தனர். மேலும் இவர்களிடமிருந்து 20 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதேபோன்று புதுப்பே ட்டை பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மனைவி கலா(55) வீட்டுதோட்டத்தில் வைத்து சாராயம் விற்பனை செய்து வந்தார். இதை பார்த்த அப்பகுதியில் ரோந்து சென்ற பண்ருட்டி போலீசார் கலாவை கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து 20 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்ய ப்பட்டது.

Tags:    

Similar News