செய்திகள்

ஆளுநர் விஷயத்தில் தமிழக மக்களை ஏமாற்றுகிறது எடப்பாடி அரசு- காங். குற்றச்சாட்டு

Published On 2018-06-27 12:36 IST   |   Update On 2018-06-27 12:41:00 IST
தமிழக ஆளுநரின் ஆய்வுப் பணிகள் விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மக்களை ஏமாற்றுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது. #TNAssembly #CongressAttacksCM
சென்னை:

தமிழக ஆளுநரின் ஆய்வுப் பணிகள் குறித்து சட்டமன்றத்தில் முதல்வர் விளக்கம் அளிக்காததால் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இன்று வெளிநடப்பு செய்தனர். பின்னர் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் ராமசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சட்டசபையில் இன்று நேரமில்லா நேரத்தில் ஆளுநரின் சுற்றுப்பயணம் பற்றி முழு விவரத்தை முதலமைச்சர் வாயிலாக தெரிந்துகொள்ள நாங்கள் விரும்பினோம்.

ஆளுநர் அலுவலக செய்தியின்படி, முதன்மைச் செயலாளரிடம் எல்லாதவிதமான தகவல்களையும் சொல்லிவிட்டுதான் ஆளுநர் சுற்றுப்பயணம் செய்வதாக சொல்லியிருக்கிறார்.



இது முதலமைச்சருக்கு தெரியுமா? என்று கேட்பதற்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. இதனால் வெளிநடப்பு செய்தோம்.

தமிழகத்தில் அரசு செயல்படுகிறதா? அல்லது ஆளுநர் செயல்படுகிறாரா? என்பது தெரியவில்லை. ஆளுநரின் சுற்றுப்பயணத்திற்கு இந்த அரசு அனுமதி கொடுக்கிறது என்றால் தமிழக மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறது என்றுதான் பொருள்.

இவ்வாறு அவர் கூறினார். #TNAssembly #CongressAttacksCM
Tags:    

Similar News