நவராத்திரி ஸ்பெஷல்
null

நவராத்திரி முதல் நாள் செய்ய வேண்டிய பிரசாதம்..!

Published On 2025-09-22 07:00 IST   |   Update On 2025-09-22 14:19:00 IST
  • ஒன்பது நாட்களிலும் துர்கை அம்மனை ஒன்பது வடிவங்களாக பாவித்து வணங்குவர்.
  • ஒன்பது நவராத்திரிக்கும் நைவேத்தியங்கள் தெய்வங்களுக்கு படைக்கப்படுகிறது.

மஹாளய அமாவாசைக்குப் பிறகு தொடங்கும் நவராத்திரி ஒன்பது நாட்களுக்கு கொண்டாப்படுகிறது. இந்த ஒன்பது நாட்களிலும் துர்கை அம்மனை ஒன்பது வடிவங்களாக பாவித்து வணங்குவர்.

நவராத்திரியின் முதல் நாளில் கொலு வைத்து, துர்கை அம்மனுக்கும் அலங்காரம் செய்து பூஜைகளும், மந்திரங்களாலும் வணங்கப்படுகிறது. 

அதுபோல், ஒன்பது நவராத்திரிக்கும் நைவேத்தியங்களும், பிரசாதங்களும் தெய்வங்களுக்கு படைக்கப்படுகிறது. அதன்படி, நவராத்திரியின் முதல் நாளான இன்று பிரசாதமாக கொண்டைக்கடலை சுண்டல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்...

தேவையான பொருட்கள்:

வெள்ளை அல்லது கருப்பு கொண்டைக்கடலை

தேங்காய் துருவல்

வெங்காயம் (விருப்பப்பட்டால்)

மிளகாய் (விருப்பப்பட்டால்)

கடுகு

உளுத்தம் பருப்பு

கறிவேப்பிலை

எண்ணெய்

உப்பு.

 

செய்முறை:

கொண்டைக்கடலை சுண்டல் செய்ய, முதலில் கொண்டைக்கடலையை இரவு முழுவதும் ஊறவைக்கவும்.

பின்னர், ஊறவைத்த கொண்டைக்கடலையை தேவையான உப்பு சேர்த்து நன்றாக வேகவைக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்து, கறிவேப்பிலை மற்றும் நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும்.

வெங்காயம் வதங்கியதும், வேகவைத்த கொண்டைக்கடலையை சேர்த்து நன்கு கிளறவும்.

பின்னர் துருவிய தேங்காய் சேர்த்து, கலவையை நன்கு கிளறி, உப்பு சரிபார்த்து இறக்கவும். கொண்டைக்கடலை சுண்டல் தயார்.

வெண்ணெய் தயிர் சாதம்

தேவையான பொருட்கள்:

அரிசி

தயிர்

பால்

வெண்ணெய்

தாளிக்க :

கடுகு

உளுத்தம் பருப்பு

கறிவேப்பிலை

பெருங்காயம்

பச்சை மிளகாய்

இஞ்சி

கேரட் (துருவியது)

கொத்தமல்லி தழை

எண்ணெய் அல்லது நெய்

 

செய்முறை

அரிசியை நன்கு கழுவி, போதுமான தண்ணீருடன் குக்கரில் 3-4 விசில் வரும் வரை வேகவைக்கவும்.

பின்னர், வேகவைத்த சாதத்தை சற்று ஆறவிட்டு, வெண்ணெய் சேர்த்து நன்கு மசிக்கவும்.

மசித்த சாதத்துடன் பால் சேர்த்து கிளறி, சற்று க்ரீமியாகவும், மிருதுவாகவும் ஆக்கவும். பின், தயிரையும் சேர்த்து நன்கு கலக்கவும்.

ஒரு கடாயில் சிறிது எண்ணெய் அல்லது நெய் ஊற்றி சூடாக்கவும். கடுகு போட்டு வெடித்ததும் உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து வதக்கவும்.

பின் பச்சை மிளகாய், துருவிய கேரட் மற்றும் இஞ்சி சேர்த்து சிறிது நேரம் வதக்கி, கொத்தமல்லி தழையை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.

இந்த தாளிப்பை தயிர் சாத கலவையில் சேர்த்து, நன்கு கலக்கவும்.

இனிப்பு: தேங்காய் பர்பி

தேவையான பொருட்கள்:

துருவிய தேங்காய் - 2 கப்

சர்க்கரை அல்லது வெல்லம் - 1 கப்

நெய் - 2 டேபிள்ஸ்பூன்

ஏலக்காய் தூள் - ½ டீஸ்பூன்

தண்ணீர் - தேவைப்பட்டால்.

 

செய்முறை:

ஒரு தட்டில் நெய் தடவி தயாராக வைத்துக் கொள்ளவும்.

ஒரு கடாயில் சர்க்கரை மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். சர்க்கரை முழுவதுமாக கரையும் வரை காத்திருக்கவும்.

சர்க்கரைப் பாகுடன் துருவிய தேங்காயை சேர்த்து, நீர் வற்றி கெட்டியாகும் வரை மிதமான தீயில் கிளறவும்.

கலவை கெட்டியானதும், ஏலக்காய் தூளை சேர்த்து நன்கு கலக்கவும்.

கலவையை நெய் தடவிய தட்டில் கொட்டி, பரப்பி சமன் செய்யவும். கலவை சற்று ஆறியதும், உங்களுக்குப் பிடித்த வடிவத்தில் துண்டுகளாக வெட்டவும்.

முழுமையாக ஆறியதும், பர்பியை தட்டில் இருந்து எடுத்து பரிமாறவும். முந்திரி, பாதாம் போன்றவற்றை சேர்த்து, மேலும் சுவையான பர்பி செய்யலாம்.

Tags:    

Similar News