நவராத்திரி ஸ்பெஷல்

Navratri Special: நவராத்திரியை கொண்டாடும் போற்றி பாடல்கள்: 9-ம் நாள் இன்று..!

Published On 2025-09-30 07:52 IST   |   Update On 2025-09-30 07:52:00 IST
  • முதலில் பிள்ளையாருக்கு 16 போற்றிகளை சொல்லவும்.
  • ஒவ்வொரு நாளும் இப்படி தொடங்கி 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது.

நவம் என்றால் ஒன்பது. ராத்திரி என்றால் இரவு நேரம். முன்னிரவில் சக்தியை முறையோடு ஆராதித்து மகிழ்விப்பதே நவராத்திரி. பொதுவாக இப்பண்டிகையை புரட்டாசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் தொடங்கி ஒன்பது நாட்களும் 10-வது நாள் விஜயதசமி என்றும் கொண்டாட வேண்டும். இது பொதுவான விதியாக இருக்கிறது.

முதலில் நமது விருப்பப்படி வீட்டில் உள்ள கொலு பொம்மைகளை வரிசைப்படுத்தி கொலு வைத்துவிட வேண்டும்.

பின்னர், அம்மனை எழுந்தருளச் செய்து விட்டு, விக்னங்கள் இன்றி இந்தப் பூஜை நிறைவு பெற ஒன்பது நாட்களும் எந்த விதமான இடையூறும் வராமல் இருக்க விநாயக வணக்கம் சொல்ல வேண்டும்.

விநாயகரை நினைத்து நமஸ்காரம் செய்யவும். அம்மன் எழுந்தருளல் முடிந்த உடன் நவராத்திரிக்கு உரிய பூஜையைத் தொடங்க வேண்டும்.

முதலில் பிள்ளையாருக்கு 16 போற்றிகளை சொல்லவும். ஒவ்வொரு நாளும் இப்படி தொடங்கி 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது. 9 நாட்களுக்குரிய போற்றி பாடல்களில் ஒன்பதாவது நாளான இன்றைய போற்றி பாடலை பார்ப்போம்..

ஒன்பதாம் நாள் போற்றி

ஓம் ஓங்காரத்துப் பொருளே போற்றி

ஓம் ஊனாகி நின்ற உத்தமியே போற்றி

ஓம் படைத்தோன் பாகம் பிரியாய் போற்றி

ஓம் அடியவர்க்கு மங்களம் அருள்வாய் போற்றி

ஓம் முக்கோணத்துள் உள்ள மூர்த்தமே போற்றி

ஓம் ரீங்காரம் தன்னில் இருப்பவளே போற்றி

ஓம் நாற்பத்து முக்கோண நாயகியே போற்றி

ஓம் சொற்பொருள் சுவைதனைத் தந்தாய் போற்றி

ஓம் ஆறாது தத்துவம் அருளினாய் போற்றி

ஓம் பளிங்கு ஒளியாய் நின்ற பரமே போற்றி

ஓம் ஓசை விந்துநாத உட்பொருளாய் போற்றி

ஓம் அகண்ட பூரணி அம்மா போற்றி

ஓம் உண்ணும் சிவயோக உத்தமியே போற்றி

ஓம் பண் மறைவேதப் பாசறையே போற்றி

ஓம் மாகேஸ்வரியே மங்கள உருவே போற்றி

ஓம் சாம்பவி சங்கரித் தேவியே போற்றி! போற்றி..!!

Tags:    

Similar News