லைஃப்ஸ்டைல்
பிள்ளைகள் கற்றலில் ஆர்வம் காட்ட வேண்டும்
கல்வியின் அவசியத்தை உணர்ந்து மாணவர்கள் படிக்க வேண்டும். அப்படி இல்லா விட்டால் மாணவ பருவத்தில் பல்வேறு தவறுகள் நேர்ந்து விடக்கூடும்.
நடப்பு ஆண்டு எல்லோருக்கும் நன்மையும், மகிழ்ச்சியும் அளிப்பதாக அமைய வேண்டும். குறிப்பாக மாணவர்களிடம் மகிழ்ச்சிக்கும், உற்சாகத்திற்கும் குறைவு இருக்காது. அவர்களுக்கு எது குறித்தும் கவலை கொள்ள அவசியம் இல்லை. ஆனால் படிப்பில் மட்டும் மாணவர்கள் அக்கறை கொள்ள வேண்டும். அதற்கு தங்களிடம் உள்ள குறைகளை அறிந்து திருத்திக் கொள்ள முன்வர வேண்டும். மாணவர்கள் மீதும் யாரும் எதையும் திணித்து விட முடியாது. அவர்களாக விரும்பினால் மட்டுமே எந்த செயலையும் செய்ய வைக்க வேண்டும். அதற்கு முதலில் அவர்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டியது அவசியம். கல்வியின் அவசியத்தை உணர்ந்து மாணவர்கள் படிக்க வேண்டும். அப்படி இல்லா விட்டால் மாணவ பருவத்தில் பல்வேறு தவறுகள் நேர்ந்து விடக்கூடும்.
ஆனால் அதே நேரத்தில் மாணவர் களுக்கு படிப்பு என்பது சுமையாக மாறி விடக்கூடாது. அவர்களின் மனதில் ஒரு அழுத்தத்தை ஏற்படுத்த கூடாது. புத்தகப்பை அவர்களுக்கு பாரமாக மாறி விடக் கூடாது என்றும் கல்வியாளர்கள் கருதினார்கள். அதனால் தான் விளையாட்டுடன் கலந்து கல்வி இருக்க வேண்டும்.
இந்த நிலையில் தான் குழந்தைகள் இலவச, கட்டாய கல்வி உரிமை சட்டம் கடந்த 2009-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்த சட்டம் 8-ம் வகுப்புவரை எந்த மாணவரையும் ‘பெயில்’ ஆக்குவதற்கு தடை விதிக்கிறது. எனவே 8-ம் வகுப்புவரை அனைத்து மாணவர்களும் கட்டாய தேர்ச்சி (ஆல் பாஸ்) செய்யப்பட்டு வருகிறார்கள். இதனால், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்தது.
இதையடுத்து, கட்டாய தேர்ச்சி முறையை ரத்து செய்யும்வகையில், இந்த சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. அந்த மசோதா, நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை ரத்து செய்யப்பட்டு விட்டது. இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், இந்த திருத்த மசோதாவின்படி, 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு ஆண்டு இறுதியில் வழக்கமான தேர்வு நடைபெறும். அதில் தேர்ச்சி அடையாத மாணவர் களுக்கு மறுதேர்வு நடத்தப்படும். அதிலும் தேர்ச்சி அடையாத மாணவர்களை ‘பெயில்’ ஆக்கி, அதே வகுப்பில் மீண்டும் படிக்க செய்ய சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் அனுமதி வழங்க லாம். இதில், மாநில அரசுகளே இறுதி முடிவு எடுக்கலாம். போட்டி உணர்வை உருவாக்குவதே சட்டத்தின் நோக்கம். எந்த மாணவரும் இடைநீக்கம் செய்யப்பட மாட்டார்கள் என்று விளக்கம் அளித்தார்.
இந்த சட்டத்தால், படிப்பை பாதியில் கைவிடும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று பல்வேறு தரப்பினரும் கருதுகிறார்கள். ஆனால் படிக்காமலேயே தேர்ச்சி என்பது மாணவர்களிடம் படிப்பு குறித்த ஆர்வத்தை குறைத்து விடும். எந்த தேர்வுக்கும் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற மனநிலையில் இருந்து மாற்றி விடும். எனவே மாணவர்களிடம் போட்டி உணர்வை உருவாக்கும் நோக்கத்தில் தான் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது என்பதை மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். அதே நேரத்தில் மாணவர்கள் தேர்ச்சி பெற ஆசிரியர்கள் பெரிதும் துணை நிற்க வேண்டும். அதற்கு முதல்கட்டமாக மாணவர்களிடம் கற்றல் குறித்த ஆர்வத்தை வளர்த் தெடுப்பதே மிகவும் முக்கிமானது.
ஆனால் அதே நேரத்தில் மாணவர் களுக்கு படிப்பு என்பது சுமையாக மாறி விடக்கூடாது. அவர்களின் மனதில் ஒரு அழுத்தத்தை ஏற்படுத்த கூடாது. புத்தகப்பை அவர்களுக்கு பாரமாக மாறி விடக் கூடாது என்றும் கல்வியாளர்கள் கருதினார்கள். அதனால் தான் விளையாட்டுடன் கலந்து கல்வி இருக்க வேண்டும்.
இந்த நிலையில் தான் குழந்தைகள் இலவச, கட்டாய கல்வி உரிமை சட்டம் கடந்த 2009-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்த சட்டம் 8-ம் வகுப்புவரை எந்த மாணவரையும் ‘பெயில்’ ஆக்குவதற்கு தடை விதிக்கிறது. எனவே 8-ம் வகுப்புவரை அனைத்து மாணவர்களும் கட்டாய தேர்ச்சி (ஆல் பாஸ்) செய்யப்பட்டு வருகிறார்கள். இதனால், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்தது.
இதையடுத்து, கட்டாய தேர்ச்சி முறையை ரத்து செய்யும்வகையில், இந்த சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. அந்த மசோதா, நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை ரத்து செய்யப்பட்டு விட்டது. இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், இந்த திருத்த மசோதாவின்படி, 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு ஆண்டு இறுதியில் வழக்கமான தேர்வு நடைபெறும். அதில் தேர்ச்சி அடையாத மாணவர் களுக்கு மறுதேர்வு நடத்தப்படும். அதிலும் தேர்ச்சி அடையாத மாணவர்களை ‘பெயில்’ ஆக்கி, அதே வகுப்பில் மீண்டும் படிக்க செய்ய சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் அனுமதி வழங்க லாம். இதில், மாநில அரசுகளே இறுதி முடிவு எடுக்கலாம். போட்டி உணர்வை உருவாக்குவதே சட்டத்தின் நோக்கம். எந்த மாணவரும் இடைநீக்கம் செய்யப்பட மாட்டார்கள் என்று விளக்கம் அளித்தார்.
இந்த சட்டத்தால், படிப்பை பாதியில் கைவிடும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று பல்வேறு தரப்பினரும் கருதுகிறார்கள். ஆனால் படிக்காமலேயே தேர்ச்சி என்பது மாணவர்களிடம் படிப்பு குறித்த ஆர்வத்தை குறைத்து விடும். எந்த தேர்வுக்கும் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற மனநிலையில் இருந்து மாற்றி விடும். எனவே மாணவர்களிடம் போட்டி உணர்வை உருவாக்கும் நோக்கத்தில் தான் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது என்பதை மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். அதே நேரத்தில் மாணவர்கள் தேர்ச்சி பெற ஆசிரியர்கள் பெரிதும் துணை நிற்க வேண்டும். அதற்கு முதல்கட்டமாக மாணவர்களிடம் கற்றல் குறித்த ஆர்வத்தை வளர்த் தெடுப்பதே மிகவும் முக்கிமானது.