கிரிக்கெட்

இந்த முறை சிறந்த பீல்டர் விருதை அறிவித்த மைதான ஊழியர்கள்- வைரல் வீடியோ

Published On 2023-11-13 09:37 GMT   |   Update On 2023-11-13 09:37 GMT
  • ஒவ்வொரு ஆட்டத்திலும் சிறப்பாக பீல்டிங் செய்யும் இந்திய வீரருக்கு பீல்டிங் பயிற்சியாளர் தங்கப்பதக்கம் வழங்கி வருகிறார்.
  • சிறந்த பீல்டருக்கு ஜடேஜா, கேஎல் ராகுல், சூர்யகுமார் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டனர்.

50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் நெதர்லாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. லீக் சுற்று ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

இந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் ஒவ்வொரு ஆட்டத்திலும் சிறப்பாக பீல்டிங் செய்யும் இந்திய வீரருக்கு பீல்டிங் பயிற்சியாளர் தங்கப்பதக்கம் வழங்கி வருகிறார்.

அதன்படி நேற்று நடைபெற்ற நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் சிறந்த பீல்டருக்கான விருதுக்கு 3 பேர் பரிந்துரைக்கப்பட்டனர். அதில் ஜடேஜா, கேஎல் ராகுல், சூர்யகுமார் ஆகியோர் இருந்தனர்.

 

இந்த விருதை மைதான ஊழியர்கள் மூலம் அறிவித்தார். அவர்கள் சூர்யா என்ற பெயர் பலகையை வைத்து வித்தியாசமாக தெரிவித்தனர். இந்த விருதை பெற்ற சூர்யகுமார் மைதான ஊழியர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டார்.

Tags:    

Similar News