கிரிக்கெட்

அவசரமாக நாடு திரும்பிய கோலி: தொடரில் இருந்து விலகிய ருதுராஜ்

Published On 2023-12-22 09:27 GMT   |   Update On 2023-12-22 09:27 GMT
  • இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வருகிற 26-ந் தேதி தொடங்குகிறது.
  • ரோகித் தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது.

இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. அதை தொடர்ந்து நடந்த ஒருநாள் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

இதனையடுத்து வருகிற 26-ந் தேதி இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. இதில் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது.

இந்நிலையில் இந்த தொடரில் இடம்பெற்றிருந்த விராட் கோலி குடும்ப சூழ்நிலை காரணங்களுக்காக சொந்த நாடு திரும்புகிறார். அவர் முதல் டெஸ்ட் போட்டிக்கு கலந்து கொள்ளும் வகையில் திரும்புவார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. 

மற்றொரு வீரரான ருதுராஜ் கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக தென் ஆப்பிரிக்கா தொடரில் இருந்து விலகி உள்ளார்.

டெஸ்ட் அணியில் இடம் பிடித்த வீரர்கள் விவரம்:-

ரோகித் சர்மா, சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், முகமது. சிராஜ், முகேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, கேஎஸ் பாரத். 

Tags:    

Similar News