கிரிக்கெட்

டோனி சாதனையை முறியடித்த ஜடேஜா

Published On 2024-05-05 15:31 GMT   |   Update On 2024-05-05 15:31 GMT
  • பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஜடேஜா 43 ரன்கள் விளாசினார்.
  • இந்த போட்டியில் சென்னை அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் அடித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜடேஜா 43 ரன்கள் அடித்தார். பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக ராகுல் சஹார், ஹர்ஷல் படேல் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினர்.

இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி சென்னை பந்து வீச்சாளர்களின் அபார பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. முடிவில் பஞ்சாப் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 139 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் சென்னை 28 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

அந்த அணியில் அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 30 ரன்கள் அடித்தார். சென்னை தரப்பில் அபாரமாக பந்து வீசிய ஜடேஜா 3 விக்கெட்டுகளும், தேஷ்பாண்டே, சிமர்ஜீத் சிங் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.

இந்த போட்டியில் ஆட்டநாயகனாக ஜடேஜா தேர்வு செய்யப்பட்டார். இதன்மூலம் சிஎஸ்கே அணிக்காக அதிகமுறை ஆட்டநாயகன் விருதை வென்ற டோனி சாதனையை ஜடேஜா முறியடித்துள்ளார். டோனி 15 முறை ஆட்டநாயகன் விருதை வென்று முதல் இடத்தில் இருந்தார். தற்போது அதனை முறியடித்து ஜடேஜா (16 முறை) முதல் இடத்தை பிடித்துள்ளார்.

இவர்களுக்கு அடுத்தப்படியாக ரெய்னா 12 முறையும் ருதுராஜ் 11 முறையும் ஆட்டநாயகன் விருதை பெற்றுள்ளனர்.

Tags:    

Similar News