கிரிக்கெட்

புரோ கபடி லீக்: புனே-உ.பி. அணிகள் இன்று மோதல்

Published On 2024-02-21 09:03 GMT   |   Update On 2024-02-21 09:03 GMT
  • புரோ கபடி போட்டியின் லீக் ஆட்டங்கள் இன்றுடன் முடிவடைகிறது.
  • எலிமினேட்டர் ஆட்டங்கள் 26-ந் தேதி நடக்கிறது.

பஞ்ச்குலா:

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது புரோ கபடி லீக் போட்டியின் 12-வது மற்றும் இறுதிக்கட்ட லீக் ஆட்டங்கள் அரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் நடைபெற்று வருகிறது.

ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், புனேரி பல்தான், தபாங் டெல்லி, குஜராத் ஜெய்ன்ட்ஸ், ஸ்ட்லர்ஸ், பாட்னா பைரேட்ஸ் ஆகிய 6 அணிகள் ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி விட்டன. பெங்கால் வாரியர்ஸ், தமிழ் தலைவாஸ், பெங்களூரு புல்ஸ், யு மும்பா, உ.பி. யோதாஸ், தெலுங்கு டைட்டன்ஸ் ஆகிய அணிகள் ஏற்கனவே வாய்ப்பை இழந்துவிட்டன.

புரோ கபடி போட்டியின் லீக் ஆட்டங்கள் இன்றுடன் முடிவடைகிறது. இரவு 8 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் புனே-உ.பி. அணிகளும், இரவு 9 மணிக்கு நடைபெறும் 2-வது போட்டியில் அரியானா-பெங்களூரு அணிகளும் மோதுகின்றன.

4 நாட்கள் ஓய்வுக்கு பிறகு பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் வருகிற 26-ந் தேதி ஐதராபாத்தில் தொடங்குகிறது. ஜெய்ப்பூர், புனே அணிகள் நேரடியாக அரை இறுதியில் விளையாடும். இன்றைய ஆட்டத்தில் உ.பி. அணியை வீழ்த்துவதன் மூலம் புனே அணி முதல் இடத்தை பிடிக்கும்.

புள்ளிகள் பட்டியலில் 3-வது இடத்தை பிடித்த அணியும், 6-வது இடத்தை பிடித்த அணியும் 'எலிமினேட்டர்' ஆட்டத்தில் விளையாடும். இதனபடி டெல்லி-பாட்னா அணிகள் மோதுகின்றன.

எலிமினேட்டர் 2 போட்டியில் அரியானா குஜராத் அணிகள் மோதுகின்றன. எலிமினேட்டர் ஆட்டங்கள் 26-ந் தேதி நடக்கிறது.

டெல்லி-பாட்னா இடையேயான ஆட்டத்தில் வெற்றிபெறும் அணி முதல் அரைஇறுதியில் விளையாடும். புனே அணியுடன் மோத வாய்ப்பு உள்ளது.

அரியானா-குஜராத் இடையேயான ஆட்டத்தில் வெற்றிபெறும் அணி 2-வது அரை இறுதியில் விளையாடும். ஜெய்ப்பூர் அணியுடன் மோதும் வாய்ப்பு இருக்கிறது. வருகிற 28-ந் தேதி அரை இறுதி ஆட்டங்கள் நடக்கிறது. மார்ச் 1-ந் தேதி இறுதிப் போட்டி நடக்கிறது.

Tags:    

Similar News