கிரிக்கெட்

ஐபிஎல் 2023: ஆர்சிபி அணியுடன் இணைந்த கிங் கோலி

Published On 2023-03-25 10:01 GMT   |   Update On 2023-03-25 10:01 GMT
  • விராட் கோலி இன்று பெங்களூரு அணியுடன் இணைந்துள்ளார்.
  • இது தொடர்பான புகைப்படத்தை அணி நிர்வாகம் தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

சென்னை:

இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடர் வருகிற 31-ந் தேதி கோலாகலமாக தொடங்குகிறது. இந்த தொடரின் முதல் போட்டியாக குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகிறது. இந்த தொடருக்காக தற்போது அனைத்து அணிகளை சேர்ந்த வீரர்களும் தயாராகி வருகின்றனர்.


இந்தியா - ஆஸ்திரேலியா தொடர் முடிவடைந்த நிலையில் விராட் கோலி இன்று பெங்களூரு அணியுடன் இணைந்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை அணி நிர்வாகம் தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

இந்த புகைப்படத்தை ஆர்சிபி ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News