கிரிக்கெட்

இப்படி ஒரு பிட்சை என் வாழ்க்கையில் நான் பார்த்தது இல்லை- ராஞ்சி குறித்து பென் ஸ்டோக்ஸ் அதிர்ச்சி

Published On 2024-02-22 15:48 GMT   |   Update On 2024-02-22 15:48 GMT
  • இரு அணிகளுக்கும் இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி நாளை ராஞ்சியில் நடைபெறவுள்ளது.
  • ராஞ்சி கிரிக்கெட் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள பிட்ச் போல் இதுவரை என் வாழ்க்கையில் எங்குமே நான் பார்த்தது கிடையாது.

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 3 போட்டிகள் முடிவில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

இரு அணிகளுக்கும் இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி நாளை ராஞ்சியில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் நான் இப்படி ஒரு பிட்சை பார்த்ததில்லை என ராஞ்சி மைதானம் குறித்து இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

ராஞ்சி கிரிக்கெட் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள பிட்ச் போல் இதுவரை என் வாழ்க்கையில் எங்குமே நான் பார்த்தது கிடையாது. இந்த மைதானத்தில் என்ன நடக்கும் என்பதை கணிக்க முடியவில்லை.

ஏனென்றால் பிட்சின் ஒரு பக்கத்திற்கும் மற்றொரு பக்கத்திற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. இதற்கு முன் இந்தியாவில் எங்குமே நான் இப்படி ஒரு பிச்ட்சை பார்த்ததில்லை. ஏனெனில் ஓய்வறையில் இருந்து பார்த்த போது, இந்த பிட்சின் ஒரு பக்கம் அதிகளவிலான புற்களுடன் இருப்பது போன்றும், சற்று வெளியே வந்து பார்த்தால் சுழலுக்கு சாதகமானதாகவும் இருப்பது போன்று உள்ளது.

என ஸ்டோக்ஸ் கூறினார்.

Tags:    

Similar News