கிரிக்கெட்

ஐபிஎல்-ல் இருந்து ஓய்வு அறிவித்தார் தினேஷ் கார்த்திக்

Published On 2024-05-23 01:41 GMT   |   Update On 2024-05-23 01:41 GMT
  • ஆர்சிபி எணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வென்றது.
  • 2வது தகுதிச்சுற்று போட்டியில் ராஜஸ்தான்- ஐதராபாத் அணிகள் நாளை மோதுகின்றன.

ஐபிஎல்-ன் நேற்றைய எலிமினேட்டர் போட்டியில் ஆர்சிபி எணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வென்றது.

இதைதொடர்ந்து, 2வது தகுதிச்சுற்று போட்டியில் ராஜஸ்தான்- ஐதராபாத் அணிகள் நாளை மோதுகின்றன.

இந்நிலையில், எலிமினேட்டர் சுற்றில் ஆர்சிபி அணி தோல்வியடைந்து பிளே ஆஃப்பில் இருந்து வெளியோறியதை தொடர்ந்து, அந்த அணியின் வீரர் தினேஷ் கார்த்திக் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

தினேஷ் கார்த்திக் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாகத் தெரிவித்துள்ளதை அடுத்து, சக வீரர்கள், ரசிகர்கள் அனைவரும் அவரைக் கவுரவித்து வழியனுப்பினர்.

ஆர்சிபி அணியின் கோப்பை கனவை அடையாமல் ஐபிஎல்-ல் இருந்து தினேஷ் கார்த்திக் ஓய்வை அறிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News