கிரிக்கெட்

சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே: வாழ்த்து தெரிவித்த மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம்- கவுதம் கம்பீர்

Published On 2023-05-30 07:10 GMT   |   Update On 2023-05-30 07:10 GMT
  • ஐ.பி.எல். கோப்பையை சென்னை அணி வெல்வது இது 5-வது முறையாகும்.
  • சென்னை அணிக்கு கிரிக்கெட் பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அகமதாபாத்:

டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5-வது முறையாக ஐ.பி.எல். கோப்பையை வென்று முத்திரை பதித்தது. அகமதாபாத்தில் நள்ளிரவில் முடிந்த இறுதிப் போட்டியில் அந்த அணி கடைசி பந்தில் குஜராத் டைட்டன்சை தோற்கடித்தது.

ஐ.பி.எல். கோப்பையை சென்னை அணி வெல்வது இது 5-வது முறையாகும். இதன் மூலம் அதிகபட்சமாக 5 முறை கோப்பையை வென்ற மும்பை இந்தியன்சின் சாதனையை சமன் செய்தது. ஐபிஎல் கோப்பையை வென்ற சென்னை அணிக்கு கிரிக்கெட் பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை அணிக்கு முன்னாள் இந்திய வீரர் கவுதம் கம்பீர் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், சிஎஸ்கே அணிக்கு வாழ்த்துக்கள். ! 1 ஐபிஎல் கோப்பையை வெல்வது கடினம். 5 கோப்பையை வெல்வது நம்பமுடியாதது. என தெரிவித்துள்ளார்.

மேலும் மும்பை இந்தியன்ஸ் டுவிட்டரில் வாழ்த்துக்களை தெரிவித்தது. அதில் சென்னை அணி கோப்பையை வென்றது முற்றிலும் தகுதியானது என அந்த அணி கூறியுள்ளது.

Tags:    

Similar News