கிரிக்கெட்

நான்காம் நாள் ஆட்டம் - உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலியா 201/6

Published On 2023-06-10 11:34 GMT   |   Update On 2023-06-10 11:34 GMT
  • முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 469 ரன்கள் குவித்தது.
  • 2-வது இன்னிங்சில் உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலியா 374 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

லண்டன்:

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 469 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 296 ரன்களில் ஆல் அவுட்டானது. ரகானே 89 ரன்னிலும், ஷர்துல் தாகூர் 51 ரன்னிலும் அவுட்டாகினர். ஜடேஜா 48 ரன்னில் வெளியேறினார்.

ஆஸ்திரேலிய சார்பில் பாட் கம்மின்ஸ் 3 விக்கெட்டும், மிட்செல் ஸ்டார்க், போலண்ட், கிரீன் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. டேவிட் வார்னர் ஒரு ரன்னிலும், உஸ்மான் கவாஜா 13 ரன்னிலும் அவுட்டாகினர்.

லபுசேனுடன் ஸ்மித் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்த நிலையில் ஸ்மித் 34 ரன்னில் வீழ்ந்தார். டிராவிஸ் ஹெட் 18 ரன்னில் ஆட்டமிழந்தார்.

மூன்றாம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுக்கு 123 ரன்கள் எடுத்து, 296 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. கேமரூன் கிரீன் 7 ரன்னுடனும், லபுசேன் 41 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்நிலையில், நான்காவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் புஜாராவிடம் கேட்ச் கொடுத்து லபுசேன் 41 ரன்னில் அவுட்டானார். சிறிது நேரத்தில் ஜடேஜா பந்துவீச்சில் கேமரூன் கிரீன் 25 ரன்னில் போல்டானார். அலெக்ஸ் கேரி நிதானமாக ஆடினார்.

நான்காம் நாள் உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுக்கு 201 ரன்களை எடுத்து 374 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. அலெக்ஸ் கேரி 41 ரன்னுடன் அவுட்டாகாமல் உள்ளார்.

இந்தியா சார்பில் ஜடேஜா 3 விக்கெட்டும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டும், சிராஜ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

Tags:    

Similar News