சினிமா
தர்பார் படத்தில் என்கவுண்டர் போலீசாக ரஜினி
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் - நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் தர்பார் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், படத்தில் ரஜினி என்கவுண்டர் போலீசாக நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் தர்பார். மும்பையில் நடைபெற்ற முதல்கட்ட படப்பிடிப்பில் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை முடித்துவிட்டு ரஜினி சென்னை திரும்பி உள்ளார்.
படத்தில் ரஜினி போலீசாக நடிப்பது போஸ்டர் மூலம் வெளியான நிலையில் அவர் என்கவுண்டர் சிறப்பு போலீசாக நடிப்பது தெரியவந்துள்ளது. படப்பிடிப்பு நடந்த கல்லூரியிலேயே குற்றவாளிகளை விசாரிக்கும் சிறப்பு அறையை செட் போட்டு படம்பிடித்துள்ளனர்.
ரஜினி குற்றவாளியை விசாரிப்பது போன்ற காட்சியை எடுத்துள்ளார்கள். படப்பிடிப்பில் ரஜினி மற்ற தொழிலாளர்களுடன் ஒரே மேஜையில் அமர்ந்து சாப்பிட்டு ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார். மேலும் ரம்ஜான் விரதம் அனுசரிக்கப்படுவதால் படப்பிடிப்பில் கலந்துகொண்ட இசுலாமிய பணியாளர்களுக்கு சிறப்பு இப்தார் விருந்து அளித்தும் சிறப்பித்து இருக்கிறார்.