சினிமா

சண்டக்கோழி 2 - பாதி கிணற்றை தாண்டிய வரலட்சுமி

Published On 2018-09-02 06:22 GMT   |   Update On 2018-09-02 06:22 GMT
லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி வரும் `சண்டக்கோழி-2' படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் நடந்து வரும் நிலையில், நடிகை வரலட்சுமி தனது டப்பிங்கில் முதல் பாதியை முடித்துள்ளார். #Sandakozhi2 #VaralakshmiSarathKumar
லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் `சண்டக்கோழி-2' உருவாகி வருகிறது. விஷால் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், வில்லியாக வரலட்சுமி சரத்குமாரும் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த நிலையில், நடிகை வரலட்சுமி படத்தின் முதல் பாதிக்கான தனது டப்பிங்கை முடித்துவிட்டதாக அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதற்கிடையே யுவன் ஷங்கர் ராஜா இசையில் படத்தில் இருந்து கம்பத்து பொண்ணு என்ற பாடல் வரிகள் அடங்கிய வீடியோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விஷாலின் 25-வது படமாக உருவாகும் இந்த படத்தை விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பாக்டரி மூலம் தயாரித்துள்ளார்.

ராஜ்கிரன், சதீஷ், சூரி, ஹரீஷ் பேரடி, அப்பானி சரத், ஹரீஷ் சிவா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படம் ஆயுத பூஜையை முன்னிட்டு தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வருகிற அக்டோபர் 18-ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது. #Sandakozhi2 #Vishal #KeerthySuresh #VaralakshmiSarathKumar

Tags:    

Similar News