சினிமா செய்திகள்

உலகளவில் வசூலில் முத்திரை பதிக்கும் "துரந்தர்"- போஸ்டர் வெளியிட்ட படக்குழு

Published On 2026-01-05 13:29 IST   |   Update On 2026-01-05 13:29:00 IST
2025-ம் ஆண்டு அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை துரந்தர் படைத்துள்ளது.

பாலிவுட் இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில், ரன்வீர் சிங் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5-ம் தேதி வெளியான படம் 'துரந்தர்'. இப்படத்தில் மாதவன், அக்ஷய் கன்னா, அர்ஜுன் ராம்பால், சஞ்சய் தத், சாரா அர்ஜுன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மக்கள் மத்தியில் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.

பாகிஸ்தானில் 'ஆபரேஷன் லியாரி' மற்றும் இந்திய உளவுத்துறை நிறுவனமான 'ரா' மேற்கொண்ட ரகசியப் பணிகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படம், 6 வளைகுடா நாடுகளில் தடை செய்யப்பட்டாலும், வசூலில் சாதனை படைத்து வருகிறது.

படம் வெளியாகி 24 நாளான நிலையில், 'துரந்தர்' திரைப்படம் உலகளவில் ரூ.1100.23 கோடி வசூலை குவித்ததாக, படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது. இதன்மூலம் 2025-ம் ஆண்டு அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை துரந்தர் படைத்துள்ளது.

இந்நிலையில், படம் வெளியாகி இன்றுடன் 30 நாட்கள் ஆன நிலையில், துரந்தர் திரைப்படம் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது. அதன்படி, துரந்தர் இன்றுடன் உலகளவில் ரூ.1240 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

மேலும், இந்தியளவில் ரூ.968 கோடியும், மற்ற நாடுகளில் ரூ.272 கோடியும் வசூலாகியுள்ளது.

Tags:    

Similar News