சினிமா

சாமி ஸ்கொயர் படக்குழுவின் அடுத்த அறிவிப்பு

Published On 2018-07-10 02:35 GMT   |   Update On 2018-07-10 02:35 GMT
ஹரி இயக்கத்தில் விக்ரம் - கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் `சாமி ஸ்கொயர்' படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. #SaamySquare #Vikram
ஹரி இயக்கத்தில் `சாமி' படத்தின் இரண்டாவது பாகம் சாமி ஸ்கொயர் என்ற பெயரில் உருவாகி வருகிறது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், ஒரு பாடல் காட்சி மட்டும் படமாக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. 

சமீபத்தில் வெளியாகிய படத்தின் டிரைலருக்கு கலவையான விமர்சங்கள் கிடைத்திருந்த நிலையில், படத்தில் இருந்து சிங்கிள் டிராக் ஒன்றை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த படத்தில் இருந்து `அதிரூபனே' என்று துவங்கும் பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது.
இதில் விக்ரம் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேசும், வில்லனாக பாபி சிம்ஹாவும் நடித்துள்ளனர். பிரபு, ஜான் விஜய், ஓ.கே.சுந்தர், சூரி, சஞ்சீவ், இமான் அண்ணாச்சி, உமா ரியாஸ் கான் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் சிபு தமீன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை ஆயுத பூஜைக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. #SaamySquare #Vikram
Tags:    

Similar News