search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை"

    • மேம்பால பணிகள் 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
    • பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை.

    சென்னை-திருவள்ளூர் மாவட்டத்தை இணைக்கும் வகையில் ஆவடியை அடுத்த பட்டாபிராமில் ரெயிவே கேட் உள்ளது. இதன் வழியாக சென்னையில் இருந்து பட்டாபிராம் சைடிங் செல்லும் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் 45 நிமிடங்களுக்கு ஒருமுறை ரெயில்வேகேட் மூடப்படுவதால் நெடுஞ்சாலையில் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இதற்கு தீர்வு காணும் வகையில் அப்பகுதியில் கடந்த 2010-11ம் ஆண்டில் 4 வழிச்சாலை ரெயில்வே மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது.பின்னர் சென்னை-திருச்சி 6 வழி நெடுஞ்சாலையாக விரிவாக்கம் செய்ய அரசு முடிவு செய்து. திட்ட மதிப்பீடும் ரூ.52.11 கோடியாக உயர்த்தப்பட்டது. 6 வழிச்சாலை மேம்பால பணிகள் 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

    ஆனால் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக கட்டுமான பணிகள் தாமதப்பட்டன. பின்னர் நிலம் கையகப்படுத்தப்பட்டு பணிகள் தொடர்ந்து நடந்து வந்தது.

    இந்த நிலையில் பணிகள் தாமதமாக நடந்து வருவதால் அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்து வருகிறார்கள.

    மேலும் மேம்பாலப்பணி காரணமாக சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. சென்னை, அம்பத்தூர், ஆவடியில் இருந்து திருநின்றவூர், திருவள்ளூர், திருத்தணி, பெரியபாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது. இதனால் வாகனங்கள் சுமார் 7 கி.மீட்டர் சுற்றி சென்று வருகின்றன.

    இதன்படி சென்னையில் இருந்து அம்பத்தூர் ஆவடி, பட்டாபிராம் வழியாக திருவள்ளூர், திருத்தணி, திருப்பதிக்கு இயக்கப்படும் வாகனங்கள் தற்போது மாற்றுப் பாதையில் இயக்கப்படுகின்றன.

    பட்டாபிராம் போலீஸ் நிலையம் அருகே தண்டுரை, அன்னம்பேடு வழியாக மீஞ்சூர்-வண்டலூர் வெளிவட்டச் சாலை வழியாக சென்று அங்கிருந்து நெமிலிச்சேரி ரவுண்டானாவை கடந்து சென்னை- திருத்தணி நெடுஞ்சாலையில் செல்ல வேண்டும். இதனால், வாகனங்கள் சுமார் 6 முதல் 10 கிமீ தூரம் வரை மாற்றுப் பாதையில் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    வாகனங்கள் சுற்றிச் செல்வதால் எரிபொருள் விரயம் ஆவதோடு பயண நேரமும் அதிகரிக்கிறது.

    மேலும் சர்வீஸ் ரோட்டை நம்பி செல்லும் கார், மோட்டார் சைக்கிள், வேன் போன்ற தனியார் வாகனங்கள், ரெயில்வே கேட் மூடப்படும் போது, 10 நிமிடம் முதல் 15 நிமிடம் தாமதமாக செல்கின்றன.

    மேலும் சர்வீஸ் சாலையில் திருமண மண்டபங்கள் ஆஸ்பத்திரி, வணிக வளாகங்கள் நிறைந்துள்ளதால் அப்பகுதியில் மேலும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இதனால் ஒவ்வொரு நாளும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். ஆம்புலன்ஸ்கள் சிக்கிக் கொள்கின்றன.

    மேம்பால பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால் இன்னும் முடிவடையாமல் உள்ளது. 80 சதவீத பணிகள் முடிந்து உள்ள நிலையில் ரெயில்வே பகுதியில் மட்டும் சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு மேம்பாலபணி நடக்க வேண்டியுள்ளது. அந்த பணியும் முடிந்தால் மேம்பாலம் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வந்து விடும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இதற்கிடையே தற்போது சென்னை-திருவள்ளூர் மார்க்கத்தில் மேம்பாலத்தின் இருபுறமும் ஏற்ற, இறக்க பகுதி, சரிவு பாதையில் மண்கொட்டப்படுகிறது. எனவே இந்த மாத இறுதிக்குள் மேம்பாலத்தில் ஒருவழிப்பாதையை முழுமையாக முடிக்க நெடுஞ்சாலைதுறை முடிவு செய்து உள்ளது.

    ரெயில்வே இடத்தில் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்து உளளனர்.

    • விளம்பர பேனர்கள் அமைப்பதில் லட்சக்கணக்கில் பணம் புரள்கிறது.
    • கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தடுக்க முடியும்.

    சென்னை:

    விளம்பர பேனர்களால் ஏற்படும் உயிரிழப்புகள் தடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நாடுமுழுவதும் எழுந்துள்ளது. மும்பையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விளம்பர பேனர் விழுந்த தில் 14 பேர் உயிரிழந்தது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னையிலும் கடந்த 2019-ம் ஆண்டு விளம்பர பேனர் விழுந்ததில் சுபஸ்ரீ என்ற இளம் பெண் பரிதாபமாக இறந்தார். அந்த சம்பவத்தால் விளம்பர பேனர்கள் வைப்பவர்கள் மீது நடவ டிக்கை எடுக்கப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டும் தடை விதித்ததுடன் தீவிரமாக கண்காணிக்கும் படியும் உத்தரவிட்டது.

    இதனால் கொஞ்சம் குறைந்த விளம்பர பேனர்கள் மீண்டும் அதிக ரித்து விட்டன. இது நல்ல வருமானம் கொழிக்கும் தொழிலாக இருப்பதால் பலர் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள். அவர்களுக்கு அதிகார மட்டத்திலும், அரசியல் மட்டத்திலும் செல்வாக்கு இருப்பதால் அவர்கள் எதையும் கண்டு கொள்வதில்லை.

    ெசன்ைன மற்றும் புறநகர் பகுதிகளில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராட்சத விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த பேனர்கள எதுவும் முறை யான அனுமதி பெறவில்லை.

    மும்பை சம்பவத்தை தொடர்ந்து சென்னையிலும் அனுமதி இல்லாத விளம்பர பேனர்களை அகற்றும்படி சென்னை மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ராதாகிருஷ்ணன் உத்தர விட்டுள்ளார்.

    விளம்பர பேனர் வைக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள பெயர் வெளியிட விரும்பாத ஒருவர் கூறியதாவது:-

    விளம்பர பேனர்கள் அமைப்பதில் லட்சக்கணக்கில் பணம் புரள்கிறது. எவ்வொரு ஏரியாவை பொறுத்தும் வியூவை பொறுத்தும் விளம்பர பேனர் கட்டணங்கள் மாறும். வீடு மற்றும் கட்டட உரிமையாளர்களிடம் பேனர் வைப்பதற்கு அனுமதி பெறுவர்கள் அதற்ேக அட்வான்ஸ் ரூ.5 லட்சம் வரை கொடுக்கி றார்கள்.

    இதுதவிர மாதாந்திர கட்டணமும் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது.

    விளம்பரம் செய்ய முன் வரும் நிறுவனங்களிடம் 10 நாள், 15 நாள் ஒரு மாதம் என்ற அடிப்படையில் கட்டணம் பெறுவார்கள்.

    சில இடங்களில் இருபக்கமும் பேனர் வைப்பார்கள். ஆனால் ஒரு பக்கத்துக்கு மட்டும் அனுமதி வாங்கி இருப்பார்கள். கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதை தடுக்க முடியும் என்றார்.

    • நியாயமான விளக்கம் தமிழ்நாடு அரசின் சார்பில் தேசிய மருத்துவ ஆணையத்திற்கு அளிக்கப்படவில்லை
    • மருத்துவர்கள் நியமிக்கப்பட வில்லை என்பதும் தெளிவாகிறது.

    சென்னை:

    முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் உள்ள பல மருத்துவக் கல்லூரிகளுக்கு மூன்று லட்சம் ரூபாய் அபராதத்தை தேசிய மருத்துவ ஆணையம் விதித்துள்ளது.

    இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநர், மருத்துவக் கல்லூரி வளாகங்களில் 75 விழுக்காட்டிற்கும் குறைவாக மருத்துவப் பேராசிரியர்கள் இல்லை என்றால் விளக்கம் கேட்டு அறிவிப்புகள் பெறப்படும் என்றும், இதன் அடிப்படையில், தேசிய மருத்துவ ஆணையத்திடமிருந்து அறிவிப்புகள் பெறப்பட்டுள்ளன என்றும், தேர்வுப் பணி, ஆய்வுப் பணி போன்ற காரணங்களால் பயோ மெட்ரிக் வருகைப் பதிவேட்டில் மருத்துவப் பேராசிரியர்கள் கையெழுத்திடவில்லை என்று தெரிவிக்கப்பட்டாலும், அதனை தேசிய மருத்துவ ஆணையம் கணக்கில் எடுத்துக் கொள்ள வில்லை என்றும் கூறி இருக்கிறார்.

    அதே சமயத்தில், இதுபோன்ற அபராதம் விதிக்கப்படுவதற்கு முன்பு தொடர்புடைய மருத்துவக் கல்லூரிகளுக்கு இரண்டு முறை விளக்கம் கேட்டு அறிவிப்புகள் அனுப்பப்படும் என்றும், விளக்கங்கள் திருப்தி அளிக்காத பட்சத்தில், கல்லூரி நிர்வாகத்தினருக்கு நேரில் வந்து விளக்கம் அளிக்க வாய்ப்பு அளிக்கப்படும் என்றும், அதற்கு பின்பே அபராதம் விதிக்கப்படும் என்றும் தேசிய மருத்துவ ஆணையத்தின் மருத்துவக் கல்வி வாரியத் தலைவர் தெரிவித்து உள்ளார்.

    தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநரின் கூற்றையும், தேசிய மருத்துவ ஆணைய அதிகாரியின் கூற்றையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, முறையான, நியாயமான விளக்கம் தமிழ்நாடு அரசின் சார்பில் தேசிய மருத்துவ ஆணையத்திற்கு அளிக்கப்படவில்லை என்பதும், போதுமானமருத்துவர்கள் நியமிக்கப்பட வில்லை என்பதும் தெளிவாகிறது.

    மாணவ, மாணவியரின் நலனைக் கருத்தில் கொண்டு, முதல்-அமைச்சர் இதில் தனிக் கவனம் செலுத்தி, தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகளுக்கேற்ப தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள மருத்துவ ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்பவும், இனி வருங்காலங்களில், அங்கீகாரம் ரத்தாகும் நிலை, அபராதம் விதிக்கும் நிலை போன்றவற்றிற்கு மருத்துவக் கல்லூரிகள் தள்ளப்படாது இருப்பதை உறுதி செய்யவும் நட வடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நாடுமுழுவதும் தேர்வெழுதிய 12 ஆம் வகுப்பு மாணவர்களில் 87.99 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    • நாடுமுழுவதும் தேர்வெழுதிய 10 ஆம் வகுப்பு மாணவர்களில் 93.60 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    புதுடெல்லி:

    சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.

    நாடுமுழுவதும் தேர்வெழுதிய 12 ஆம் வகுப்பு மாணவர்களில் 87.99 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    அதில், மண்டல வாரியாக 99.91 சதவீத தேர்ச்சியுடன் திருவனந்தபுரம் முதலிடத்திலும், 99.04 சதவீதத்துடன் விஜயவாடா மண்டலம் 2-ம் இடத்திலும், 98.47 சதவீதத்துடன் சென்னை 3-ம் இடத்திலும், 96.95 சதவீதத்துடன் பெங்களூரு 4-ம் இடமும் பிடித்துள்ளது.

    12 ஆம் வகுப்பு தேர்ச்சியில் முதல் 4 இடங்களையும் தென் இந்திய மாநிலங்களே பெற்றுள்ளது.

    உத்திர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் (78.25%) , நொய்டா (80.27%) மண்டலங்கள் கடைசி இடங்களையே பிடித்துள்ளது.

    நாடுமுழுவதும் தேர்வெழுதிய 10 ஆம் வகுப்பு மாணவர்களில் 93.60 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    அதில், மண்டல வாரியாக, 99.75 சதவீத தேர்ச்சியுடன் திருவனந்தபுரம் முதலிடத்திலும், 99.60 சதவீதத்துடன் விஜயவாடா மண்டலம் 2-ம் இடத்திலும், 99.30 சதவீதத்துடன் சென்னை 3-ம் இடத்திலும், 99.26 சதவீதத்துடன் பெங்களூரு 4-ம் இடமும் பிடித்துள்ளது.

    10 ஆம் வகுப்பு தேர்ச்சியிலும் முதல் 4 இடங்களை தென் இந்திய மாநிலங்களே பெற்றுள்ளது.

    அசாம் மாநிலத்தின் கவுகாத்தி ( 77.94%) , உத்தரபிரதேசத்தில் நொய்டா (90.46%) மண்டலங்கள் கடைசி இடங்களை பிடித்துள்ளது.

    • தென் மாவட்டங்களில் நாளை முதல் நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளது.
    • டெல்டா மாவட்டங்களிலும் 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் கோடை வெயில் வறுத்து எடுத்து வருகிற நிலையில் மழையும் ஆங்காங்கே சில இடங்களில் பெய்து வருகிறது.

    தமிழக வட மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகமாக உள்ளது. ஈரோடு, கரூர், வேலூர், திருச்சி உள்ளிட்ட சில மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது.

    இந்த நிலையில் வளி மண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடுவதால் தமிழகத்தில் மேலும் 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும்.

    தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியதாவது:-

    தென் மாவட்டங்களில் நாளை முதல் நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளது. சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, கோவை, நீலகிரி, திருப்பூர், பொள்ளாச்சி, கொடைக்கானல் மலை மாவட்டங்களில் கன மழை பெய்யும்.

    குமரிக்கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி உருவாகிறது. இதனால் டெல்டா மாவட்டங்களிலும் 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னையில் 15-ந்தேதி முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 16,17 தேதிகளில் பலத்த மழை பெய்யும். திருவள்ளூர் மாவட்டத்திலும் மழை பெய்யக்கூடும். கோடை மழை பல மாவட்டங்களில் பெய்ய தொடங்கி உள்ளதால், வெயிலின் தாக்கம் இயல்பான அளவை விட குறைவாக இருக்கும். உள் மாவட்டங்களில் வெப்ப நிலை சற்று அதிகமாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 2.75 ஏக்கர் பரப்பளவில் கூவம் ஆற்றின் முகத்துவாரத்தில் அமைக்க திட்டம்.
    • தமிழக வீரர்கள் 4 பேர் டோக்கியோ ஒலிம்பிக் பாய்மர படகு போட்டி.

    சென்னை மெரினா கடற்கரையில் பாய்மர படகு விளையாட்டு அகாடமி ரூ. 7 கோடி செலவில் அமைக்கப்படவுள்ளதாக தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

    கடற்கரை ஒழுங்குமுறை ஆணைய அனுமதி பெற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் விண்ணப்பித்தது.

    2.75 ஏக்கர் பரப்பளவில் கூவம் ஆற்றின் முகத்துவாரத்தில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    கீழ் தளத்தில் பயிற்சி அறை, வீடியோ நூலக அறை, வரவேற்பு அறை, பயிற்சியாளர்கள் அறை, அலுவலக அறை, படகு நிறுத்தும் இடம், திறந்தவெளி இடம் மற்றும் நீச்சல் குளம் அமைக்கப்பட உள்ளது.

    இதேபோல், முதல் தளத்தில் திறந்தவெளி வகுப்பறை, யோகா அறை, நூலக அறை, ஜிம், விளையாட்டு அறிவியல் பயிற்சி அறை வரவேற்பு அறை அமைக்கப்படுகிறது,.

    இந்தத் திட்டத்தை கடந்த 2016ம் ஆண்டு முதலமைச்சராக இருந்த மறைந்த ஜெயலலிதா சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்தார்.

    கடந்த அரசு பல்வேறு முயற்சி மேற்கொண்டும் இந்த திட்டத்தை செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

    இதற்கிடையே, தமிழக வீரர்கள் 4 பேர் டோக்கியோ ஒலிம்பிக் பாய்மர படகு போட்டியில் கலந்து கொண்டனர்.

    இந்த நிலையில், பாய்மர படகு விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் இந்த திட்டத்தை மீண்டும் செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

    • சென்னை உள்பட உலகின் பல்வேறு பகுதிகளிலில் இருந்தும் விண்வெளி மையத்தை பார்க்கலாம்.
    • சென்னையில் இருந்தே இந்த நிகழ்வு தெரியும் என்பதால் மக்கள் காண ஆர்வம்.

    சர்வதேச விண்வெளி மையம் குறிப்பிட்ட பகுதியில் விண்ணில் தெரியும் நேரம் பற்றிய தகவல்களை நாசா வெளியிட்டு வருகிறது.

    பொதுவாக அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் வான்வெளி தெளிவாக இருக்கும்போது மட்டும் சிறய ஒளி புள்ளியாக விண்வெளி ஆய்வு மையத்தை காண முடியும்.

    அந்த வகையில், சென்னை உள்பட உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை இன்று இரவு வெறும் கண்களால் பார்க்கலாம் என நாசா அறிவித்தது.

    அதன்படி, சென்னையில் இன்றிரவு, 7.09 மணியில் இருந்து 7 நிமிடங்கள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் தென்படும் என நாசா அறிவித்தது.

    இந்நிலையில், சென்னையில் இருந்து விண்ணில் சர்வதேச விண்வெளி மையம் வெறும் கண்ணில் தென்பட்டது.

    நாசா அறிவித்தது போல், சென்னையில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் தென்பட்டது.

    சென்னையில் இருந்தே இந்த நிகழ்வு தெரிந்ததால், மக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

    • சென்னை உள்பட உலகின் பல்வேறு பகுதிகளிலில் இருந்தும் விண்வெளி மையத்தை பார்க்கலாம்.
    • சென்னையில் இருந்தே இந்த நிகழ்வு தெரியும் என்பதால் மக்கள் காண ஆர்வம்.

    சர்வதேச விண்வெளி மையம் குறிப்பிட்ட பகுதியில் வானிலை தெரியும் நேரம் பற்றிய தகவல்களை நாசா வெளியிட்டு வருகிறது.

    பொதுவாக அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் வான்வெளி தெளிவாக இருக்கும்போது மட்டும் சிறிய ஒளி புள்ளியாக விண்வெளி ஆய்வு மையத்தை காண முடியும்.

    அந்த வகையில், சென்னையில் இருந்து சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை இன்று இரவு வெறும் கண்களால் பார்க்கலாம் என நாசா அறிவித்துள்ளது.

    இதுபோல், சென்னை உள்பட உலகின் பல்வேறு பகுதிகளிலில் இருந்தும் விண்வெளி மையத்தை பார்க்கலாம். சென்னையில் இன்றிரவு, 7.09 மணியில் இருந்து 7 நிமிடங்கள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் தென்படும் என நாசா அறிவித்துள்ளது.

    சென்னையில் இருந்தே இந்த நிகழ்வு தெரியும் என்பதால் மக்கள் காண ஆர்வத்துடன் உள்ளனர்.

    • சென்னையில் இருந்து நெல்லைக்கு தினசரி ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
    • இன்று எழும்பூர் சிறப்பு ரெயில் இரவு 9.30 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் இருந்து நெல்லைக்கு தினசரி ரெயில்கள் இயக்கப்படுகின்றன. அதே போல் நெல்லையில் இருந்தும் சென்னைக்கும் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    தினமும் நெல்லையில் இருந்து சென்னைக்கு வரும் சென்னை எழும்பூர் சிறப்பு ரெயில் மலை 6.45க்கு நெல்லையில் இருந்து புறப்படும்.

    இந்நிலையில், இந்த ரெயில் இன்று 2.45 மணி நேரம் தாமதாக புறப்படும் என்று தென்னிந்திய ரெயில்வே தெரிவித்துள்ளது. ஆகவே இன்று எழும்பூர் சிறப்பு ரெயில் இரவு 9.30 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    நெல்லையில் இருந்து சென்னைக்கு இன்று இரவு பயணம் மேற்கொள்பவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். 

    • சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கடும் அவதி.
    • விமானத்தின் எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டு இருப்பது தெரிந்தது.

    ஆலந்தூர்:

    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவன ஊழியர்களுக்கும் அதன் நிர்வாகத்தினருக்கும் இடையே பிரச்சினை நிலவிவருகிறது.

    இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) இரவு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்கள் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் திடீரென உடல்நிலையை காரணம் காட்டி விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் விமானங்களை இயக்க விமானிகள், என்ஜினீயர்கள், ஊழியர்கள் இல்லாத நிலை ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவன விமானங்களை இயக்குவதில் சிக்கல் உருவாகி நேற்று ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

    இந்த நிலையில் இன்று அந்த விமான நிறுவன ஊழியர்களின் போராட்ம் நீடித்து வருகிறது. ஊழியர்கள் இன்னும் பணிக்கு திரும்பவில்லை. இதனால் இன்றும் 2-வது நாளாக பல்வேறு நகரங்களில் அந்த நிறுவனத்தில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

    சென்னை விமான நிலையத்தில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தின் கேபின் குழு ஊழியர்கள் பலர் திடீர் விடுப்பு எடுத்து உள்ளதால் மொத்தம் 8 விமானங்கள், ரத்து செய்யப்பட்டு உள்ளனர்.

    நேற்று நள்ளிரவு 12 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து சென்னை வரும்விமானம், அதைப்போல் நள்ளிரவு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை வரும் விமானம், இன்று மதியம் 12.30 மணிக்கு கொல்கத்தாவில் இருந்து சென்னை வர வேண்டிய விமானம்,இதேபோல் இன்று இரவு 7:30 மணிக்கு கொல்கத்தாவில் இருந்து சென்னை வரும் விமானம் ஆகிய 4 வருகை விமானங்கள் ரத்து ஆகி உள்ளன.

    இதேபோல் சென்னையில் இருந்து இன்று அதிகாலை திருவனந்தபுரம் புறப்பட்டு செல்லும் விமானம், சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு அதிகாலையில் புறப்பட்டு செல்லும்விமானம், இன்று காலை சென்னையில் இருந்து கொல்கத்தா புறப்பட்டு செல்லும் விமானம், இன்று இரவு சென்னையில் இருந்து கொல்கத்தா புறப்பட்டு செல்ல வேண்டிய விமானம் ஆகிய 4 புறப்பாடு விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

    எந்தவித முன்னறிவிப்பும் இன்றி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    சென்னையில் இருந்து துபாய் செல்லும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று இரவு 10.30 மணிக்கு சென்னைவிமான நிலையத்தில் தயாராக இருந்தது. அதில் 362 பயணிகள் பயணம் செய்ய இருந்தனர். அனைவரும் சோதனைகளையும் முடித்துவிட்டு விமானத்தில் ஏறி அமர்ந்து இருந்தனர்.

    விமானம் புறப்பட தயாராக இருந்த போது விமானத்தின் எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டு இருப்பது தெரிந்தது. நள்ளிரவு வரை இதனை சரிசெய்ய முடியவில்லை. இதைத்தொடர்ந்த அந்த விமானம் ரத்து செய்யப்பட்டது. பயணிகள் அனைவரும் பல்வேறு ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    • கைது செய்யப்பட்ட 3 பேரிடம் இருந்து, 15 போலி ஏடிஎம் கார்டுகள், 3 செல்போன்கள் மற்றும் 15 வங்கி புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • இந்த மோசடியில் வட மாநிலத்தைச் சேர்ந்த கும்பல் ஒன்று மூளையாகச் செயல்பட்டுள்ளனர்.

    ஆன்லைன் வேலை வாங்கித் தருவதாக சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த இளைஞர் அருண் என்பவருக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வந்துள்ளது. அதில் கொடுக்கப்பட்டிருந்த லிங்க்கை க்ளிக் செய்து, அதில் கொடுக்கப்பட்டிருந்த டாஸ்க்-ஐ ஒவ்வொன்றாக அவர் முடித்துள்ளார்.

    இதன் இறுதியில் அவர் வங்கி கணக்கில் இருந்து ₹2.50 லட்சம் வரை பணத்தை இழந்தது அவருக்கு தெரிய வந்துள்ளது.

    இதனையடுத்து, அரும்பாக்கம் காவல் நிலையத்தில் இது தொடர்பாக அவர் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் அருண் செலுத்திய வங்கிக் கணக்கு எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

    அதில், செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த நல்லம்பட்டி தேஜா (22), அண்ணாநகர் சாந்தோம் காலனியைச் சேர்ந்த விஜய் (24), ஹைதராபாத்தைச் சேர்ந்த சரஸ்வதி (23) ஆகியோர் இந்த குற்றச் செயலில் ஈடுபட்டது தெரியவந்ததை அடுத்து மூவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

    இதனை அடுத்து, கைது செய்யப்பட்ட 3 பேரிடம் இருந்து, 15 போலி ஏடிஎம் கார்டுகள், 3 செல்போன்கள் மற்றும் 15 வங்கி புத்தகங்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது, இவர்கள் கமிஷனுக்காக போலி வங்கிக் கணக்கு தொடங்கி அதன் மூலம் பணத்தைப் பெற்று, மோசடியில் ஈடுபட்ட வேறொரு கும்பலுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது .

    இந்த மோசடியில் வட மாநிலத்தைச் சேர்ந்த கும்பல் ஒன்று மூளையாகச் செயல்பட்டதும், மேலும் வடமாநில கும்பல் இவர்களது வங்கி கணக்கில் பணத்தைப் பெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

    மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய வடமாநில கும்பலை காவல்துறை தேடி வருகிறது.

    • மாநகராட்சியில் விண்ணப்பித்து உரிய உரிமத்தை பெற வேண்டும்.
    • மூன்றே நாளில் 1000 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

    சென்னை:

    சென்னை நுங்கம்பாக்கத்தில் 2 வளர்ப்பு நாய்கள் சுரக்ஷா என்ற சிறுமியை கடித்து குதறிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    தலையின் மேல்பகுதி சதையுடன் பிய்ந்து தொங்கிய நிலையில் சிறுமிக்கு சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஆபரேஷன் செய்யப்பட உள்ளது. இதன் தொடர்ச்சியாக மேலும் 2 இடங்களிலும் நாய்கள் கடித்ததில் சிறுவர்கள் காயம் அடைந்துள்ளனர்.

    சென்னை மாநகரில் வெளிநாட்டு நாய்களை வீடுகளில் வளர்ப்பவர்கள் தற்போது அதனை தெரு நாய்களை போல வெளியில் சுற்றவிட்டு வருகிறார்கள்.

    இது பல்வேறு இடங்க ளில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த நிலையில் நுங்கம்பாக்கத்தில் சிறுமியை வளர்ப்பு நாய்கள் கடித்து குதறின.

     இதை தொடர்ந்து நாய்களை வீடுகளில் வளர்ப்பவர்கள் அதற்கான உரிய விதிமுறை களை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். இது தொடர்பாக அவர்கள் அதிரடி நடவ டிக்கைகளை மேற்கொள்ள தொடங்கி இருக்கிறார்கள்.

    சென்னையில் வீடுகளில் நாய்களை வளர்ப்பவர்கள் மாநகராட்சியில் விண்ணப்பித்து உரிய உரிமத்தை பெற வேண்டும். இல்லையென்றால் அவர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது.

    இதனை முழுமையாக கடைபிடிக்க மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

    இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும் போது, சென்னையில் நாய்களை வளர்க்கும் அனைவரும் உரிய உரிமம் பெற வேண்டும். இல்லையென்றால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும். நாய் வளர்ப்பவர்களில் பெரும்பாலானவர்கள் உரிய உரிமத்தை பெறுவதில்லை. கடந்த ஆண்டு 1500 பேர் மட்டுமே உரிமம் பெற்றுள்ளனர்.

    இந்த ஆண்டு இதுவரை 300 பேர் மட்டுமே உரிமம் கேட்டு முதலில் விண்ணப்பித்து இருந்தனர். நுங்கம்பாக்கத்தில் சிறுமியை நாய் கடித்த சம்பவத்துக்கு பிறகு மூன்றே நாட்களில் 1000 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்றார்.

    சென்னை மாநகராட்சியின் அதிரடி நடவடிக்கை யால் சிறுமியை நாய்கள் கடித்த சம்பவம் ஏற்படுத்திய பரபரப்பு காரணமாகவும் வீடுகளில் நாய்களை வளர்ப்போர் அச்சம் அடைந்துள்ளனர். வளர்ப்பு நாய்களை முறையாக பரா மரிக்கவும், விதிமுறைகளை முறையாக கடைபிடிக்கவும் தொடங்கி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    ×