search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CBI"

    • 17 வங்கிகள் இணைந்து 34,000 கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூறப்படும் டி.எச்.எப்.எல். வழக்கை சி.பி.ஐ. பதிவு செய்து விசாரித்து வருகிறது.
    • இது நாட்டிலேயே மிகப்பெரிய வங்கி கடன் மோசடியாகும்.

    திவான் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் (DHFL) நிறுவனத்தின் இயக்குநர் தீரஜ் வதாவன், ₹34,000 கோடி வங்கி கடன் மோசடி வழக்கில் சி.பி.ஐ.யால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

    2022 ஆம் ஆண்டு இந்த வழக்கு தொடர்பாக தீரஜ் வதாவன் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

    17 வங்கிகள் இணைந்து 34,000 கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூறப்படும் டி.எச்.எப்.எல். வழக்கை சி.பி.ஐ. பதிவு செய்து விசாரித்து வருகிறது. இது நாட்டிலேயே மிகப்பெரிய வங்கி கடன் மோசடியாகும்.

    ஏற்கனவே யெஸ் வங்கியின் கடன் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே இருந்த தீரஜ் வதாவனை மீண்டும் சி.பி.ஐ. கைது செய்துள்ளது.

    தீரஜ் வதாவனை நேற்று கைது செய்த சி.பி.ஐ. இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதாகவும் அவருக்கு மே 30 வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • மத்திய அரசுக்கு கர்நாடக மாநில அரசு இ- மெயில் வாயிலாக கடிதம் எழுதியுள்ளது.
    • தேடப்படும் நபராக அறிவித்து அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக்அவுட் நோட்டீஸ்.

    கர்நாடகாவில் பாலியல் புகாரில் சிக்கியுள்ள முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி. நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் ஹாசன் தொகுதியில்பா.ஜனதா கூட்டணி சார்பில் போட்டியிட்டார்.

    தேர்தல் முடிந்ததும் அவர் ஜெர்மனி சென்றுவிட்டார். அவரை கைது செய்ய சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    அவரை தேடப்படும் நபராக அறிவித்து அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

    இந்நிலையில், பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ் அறிவிப்பை வெளியிட வேண்டும் என மத்திய அரசுக்கு கர்நாடக மாநில அரசு இ- மெயில் வாயிலாக கடிதம் எழுதியிருந்தது.

    மேலும் அதில், குற்றவாளி குறித்த தகவல்களை அனைத்து நாடுகளுக்கும் தெரிவிக்கும் வகையில், ப்ளூ கார்னர் நோட்டீஸ் வெளியிட வலியுறுத்தப்பட்டது.

    இந்நிலையில், பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு ப்ளூ கார்னர் நோட்டீஸ் வழங்கியிருப்பதாக சிபிஐ, கர்நாடக சிறப்பு புலனாய்வு அமைப்புக்கு தகவல் தெரிவித்துள்ளது.

    பிரஜ்வால் ரேவண்ணா இருந்தால் தெரிவிக்குமாறு இன்டர்போலில் உள்ள 196 நாடுகளுக்கு தகவல் அனுப்பப்பட்டு இருப்பதாக சிபிஐ தெரிவித்துள்ளது. 

    • ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், டெல்லி நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்பட்டார்.
    • நீதிமன்ற காவல் வருகிற 20-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் தெலுங்கானா மாநில முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கே.கவிதா கைது செய்யப்பட்டுள்ளார். அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரிடம், நீதிமன்ற அனுமதியுடன் சிபிஐ ஜெயிலில் வைத்து விசாரணை மேற்கொண்டது. அதன் தொடர்ச்சியாக சிபிஐ அவரை கைது செய்துள்ளது.

    திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கவிதாவின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், டெல்லி ரோஸ் அவென்யூவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரது நீதிமன்ற காவலை நீதிமன்றம் வருகிற 20-ந்தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

    நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தபோது கே. கவிதா பத்திரிகையாளர்களிடம் "பிரஜ்வல் ரேவண்ணா போன்றோரை விசாரணை அமைப்புகள் விட்டுவிடுகின்றன. எங்களை போன்றோரை கைது செய்கிறது" என ஆவேசமாக தெரிவித்தார்.

    இதே வழக்கில் அரவிந்த கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் மே 14-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ வழக்கில் ஜாமின் கேட்டு கவிதா மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நேற்று நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மார்ச் 15-ந்தேதி அமலாக்கத்துறை கைது செய்தது. அதன்பின் சிபிஐ ஏப்ரல் 11-ந்தேதி கைது செய்தது.

    • சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகளின் உதவியுடன் பாஜக தங்களை குறிவைப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன
    • டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்

    "சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, தேர்தல் பத்திரம், இந்து - முஸ்லீம், கோயில் - மசூதி ஆகியவை இல்லையென்றால் பாஜக 100 இடங்களை கூட தாண்டாது" என்று ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

    சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்ற விசாரணை அமைப்புகளின் உதவியுடன் பாஜக தங்களை குறிவைப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வருகின்றன.

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகியோர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • தடை செய்யப்பட்ட குட்கா, பான் பொருள்கள் தடையை மீறி விற்பனை செய்ய சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது
    • இந்த வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்து வந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் சிபிஐக்கு மாற்றபட்டது

    தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் பொருள்கள் தடையை மீறி விற்பனை செய்ய சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்து வந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் சிபிஐக்கு மாற்றபட்டது.

    இந்த வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி விஜயபாஸ்கர், பி வி ரமணா மீதான குட்கா வழக்கை மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஏன் இழுத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று சிபிஐக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.

    கவர்னர் ஒப்புதல் அளித்தும் சிபிஐ இன்னும் பரிசீலனை செய்து வருவதாக நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளதால் கோபமடைந்த நீதிபதி வழக்கின் நிலை என்ன என்பது தொடர்பாக அடுத்த விசாரணையின் போது பதில் அளிக்க வேண்டும் என்று சிபிஐக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    • கவிதாவிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. கோர்ட்டு அனுமதி வழங்கியது.
    • இது சி.பி.ஐ. கஸ்டடி இல்லை. பா.ஜ.க. கஸ்டடி.

    புதுடெல்லி:

    டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் தெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரியான சந்திரசேகரராவின் மகளான கவிதா கடந்த மாதம் 15-ந்தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே கவிதாவிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. கோர்ட்டு அனுமதி வழங்கியது. அவரது 3 நாள் சி.பி.ஐ. காவல் இன்றுடன் முடிவடைந்தது. இதைதொடர்ந்து கவிதாவை இன்று கோர்ட்டில் சி.பி.ஐ. ஆஜர்படுத்தியது. அவரது நீதிமன்ற காவலை ஏப்ரல் 23-ந்தேதி வரை நீட்டித்து கோர்ட்டு உத்தரவிட்டது.

    அப்போது கோர்ட்டு வளாகத்தில் கவிதா கூறும்போது, "இது சி.பி.ஐ. கஸ்டடி இல்லை. பா.ஜ.க. கஸ்டடி. பா.ஜனதா வெளியில் என்று போகிறதோ? அதை சி.பி.ஐ. உள்ளே கேட்கிறது. 2 ஆண்டுகளாக மீண்டும், மீண்டும் கேட்கிறது புதிது இல்லை" என்றார்.

    • கவிதா கடந்த மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
    • வழக்கின் விசாரணைக்கு கவிதா ஒத்துழைக்கவில்லை எனவும், கேள்விகளுக்கு பதிலளிக்க மறுப்பதாகவும் சி.பி.ஐ. தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

    புதுடெல்லி:

    டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு விவகாரத்தில் தெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரியும், பாரதிய ராஷ்டிர சமிதி தலைவருமான சந்திரசேகர ராவின் மகள் கவிதா (வயது 46), கடந்த மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்த ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகளும் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். அதன்படி திகார் சிறைக்கு சென்று கவிதாவிடம் விசாரணை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் அவரை கைது செய்தனர்.

    இதைத்தொடர்ந்து நேற்று அவர் டெல்லியில உள்ள சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் அவரை 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என சி.பி.ஐ. சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த வழக்கின் விசாரணைக்கு கவிதா ஒத்துழைக்கவில்லை எனவும், கேள்விகளுக்கு பதிலளிக்க மறுப்பதாகவும் சி.பி.ஐ. தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

    சி.பி.ஐ.யின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி காவேரி பவேஜா, கவிதாவை 15-ந்தேதி வரை காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

    முன்னதாக இந்த கைது நடவடிக்கை சட்ட விரோதமானது என கவிதா தரப்பில் ஆஜரான வக்கீல் நிதேஷ் ராணா குற்றம் சாட்டினார்.

    மதுபான கொள்கை முறைகேடு விவகாரத்தில் கவிதா மீது குற்றச்சதி, கணக்குகளை மறைத்தல், அரசு ஊழியர்களுக்கு லஞ்சம் வழங்குதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • டெல்லி மாநில மதுபான கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது.
    • திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள கே. கவிதாவிடம் கடந்த சனிக்கிழமை சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    டெல்லி மாநில மதுபான கொள்கை மோசடியில் ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் சிக்கியுள்ளனர். சமீபத்தில் அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி மாநில முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    மதுபான லைசென்ஸ் பெற 100 கோடி ரூபாய் அளவில் ஆம் ஆத்மி கட்சிக்கு லஞ்சம் கொடுத்ததாக சவுத் குரூப்பின் முக்கிய குற்றவாளியாக சந்திரகேசர ராவின் மகள் கே.கவிதா மீது அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த மாதம் 15-ந்தேதி கைது செய்யப்பட்டார். தற்போது நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    திகார் சிறையில் இருக்கும் அவரிடம் விசாரணை நடத்த நீதிமன்றத்தில் சிபிஐ அனுமதி கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தது. நீதிமன்றமும் அனுமதி அளித்தது. அதனடிப்படையில் கடந்த சனிக்கிழமை சிபிஐ அவரிடம் விசாரணை நடத்தியது. கே.கவிதா உடன் குற்றம் சாட்டப்பட்ட புச்சி பாபுவின் போனில் இருந்து நிலம் தொடர்பாக கைப்பற்றப்பட்ட வாட்ஸ்அப் உரையாடல்கள் மற்றும் ஆவணங்கள் அடிப்படையில் 100 கோடி ரூபாய் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் ஜெயிலுக்குள் இருக்கும் கே.கவிதாவை சிபிஐ அதிகாரிகள் இன்று கைது செய்ததாக தெரிவித்துள்ளனர்.

    சிபிஐ விசாரணை நடத்தியது தொடர்பாக கே.கவிதா நீதிமன்றத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் சிபிஐ-யின் விசாரணை ஊடக விசாரணை. அது என்னுடைய நற்பெயரை பாதிப்பதாகவும், தனியுரிமையை மீறுவதாகவும் தெரிவித்திருந்தார்.

    மேலும், நான் பாதிக்கப்பட்டவர். எனனுடைய தனிப்பட்ட மற்றும் அரசியல் நற்பெயர் குறி வைக்கப்படுகிறது. என்னுடைய டெலிபோன் அனைத்து டி.வி. சேனல்களிலும் காண்பிக்கப்பட்டுள்ளது. இது தன்னுடைய தனியுரிமையை நேரடியாக மீறுவதாகும்.

    நான் ஏஜென்சியின் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்துள்ளேன. வங்கி கணக்கு தொடர்பான அனைத்து தகவல்களையும் கொடுத்துள்ளேன். நான் அழித்துவிட்டதாக அமலாக்கத்துறை கூறும் அனைத்து போன்களையும் ஒப்படைப்பேன்.

    இவ்வாறு கே.கவிதா அதில் தெரிவித்துள்ளார்.

    • பாஜக அரசு சிபிஐ, அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு முகமை, வருமானவரித்துறை உள்ளிட்டவற்றை தவறாக பயன்படுத்தி வருகிறது
    • நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர்களை குறிவைத்து விசாரணை அமைப்புகள் செயல்படுகிறது

    சிபிஐ, அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு முகமை, வருமானவரித்துறை ஆகிய 4 மத்திய அமைப்புகளின் இயக்குநர்களை மாற்ற வேண்டும் எனக்கோரி மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 5 எம்.பிக்கள் உள்ளடக்கிய 10 பேர் கொண்ட குழு தேர்தல் ஆணையத்தின் தலைமையகத்திற்கு வெளியே தர்ணா நடத்தினர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறை கைது செய்துள்ளது.

    திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை தலைவர் டெரெக் ஓ பிரையன் தலைமையில் டோலா சென், சாகரிகா கோஷ், சாகேத் கோகலே, சாந்தனு சென் ஆகிய எம்.பி.க்கள் குழு போராட்டத்தில் ஈடுபட்டது.

    பாஜக அரசு சிபிஐ, அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு முகமை, வருமானவரித்துறை உள்ளிட்டவற்றை தவறாக பயன்படுத்தி வருகிறது என்ற தங்களது புகாரை தேர்தல் ஆணையத்திடம் திரிணாமுல் காங்கிரஸ் அளித்துள்ளது.

    நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர்களை குறிவைத்து விசாரணை அமைப்புகள் செயல்படுகிறது. குறிப்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக மத்திய விசாரணை அமைப்புகளை பாஜக பயன்படுத்துகிறது என்று போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்கள் குற்றம் சாட்டினர்.  

    • 3 பேர் மீதான வழக்குகள் மொத்தமாக முடித்தே வைக்கப்பட்டு விட்டன.
    • ஊழலை ஒழிப்போம் எனக் கூசாமல் புளுகும் பிரதமருக்கு நன்றாகவே பொருந்துகிறது.

    பாஜகவின் 'வாஷிங் மெஷின்' பாணி ஆதாரப்பூர்வமாக தோலுரிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:-

    பா.ஜ.க.வின் 'வாஷிங் மெஷின்' பாணியை ஆதாரப்பூர்வமாகத் தோலுரித்துள்ளது @IndianExpress நாளேடு!

    பா.ஜ.க.வுக்குத் தாவிய எதிர்க்கட்சித் தலைவர்கள் 25 பேரில், 20 பேர் மீதான ஊழல் வழக்குகளில் நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், 3 பேர் மீதான வழக்குகள் மொத்தமாக முடித்தே வைக்கப்பட்டு விட்டன.

    10 ஆண்டு பா.ஜ.க. ஆட்சி என்பது இந்தியாவின் உயர் விசாரணை அமைப்புகளை எவ்வளவு இழிவான நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது என்பதற்கு இதைவிடச் சான்று வேண்டுமா?

    "பேச நா இரண்டுடையாய் போற்றி" எனப் பேரறிஞர் அண்ணா அன்று சொன்னது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ… ஊழல்வாதிகளை எல்லாம் கட்சியில் இணைத்து உத்தமர்களாக்கிவிட்டு, ஊழலை ஒழிப்போம் எனக் கூசாமல் புளுகும் பிரதமருக்கு நன்றாகவே பொருந்துகிறது!

    மோடியின் குடும்பம் என்பது 'E.D – I.T. – C.B.I.'தான்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

    • ஹிமேஷ் என்பவரது வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி விசாரணை செய்து வருகின்றனர்.
    • வங்கி அதிகாரிகளான குருமூர்த்தி வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னையில் வங்கி மோசடி தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் 2 இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    சூளைமேடு பஜனை கோவில் இரண்டாவது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 2-வது தளத்தில் ஹிமேஷ் என்பவரது வீட்டில் 5 சி.பி.ஐ. அதிகாரிகள் காலை 8.30 மணியில் இருந்து சோதனை நடத்தி விசாரணை செய்து வருகின்றனர்.

    கீழ்ப்பாக்கம் ஆஸ்பிரின் கார்டன் இரண்டாவது குறுக்கு தெருவில் உள்ள வாடகை வீட்டில் 6 மாதங்களாக வசித்து வரும் வங்கி அதிகாரிகளான குருமூர்த்தி அவரது மனைவி உமா சங்கரி வீட்டில் சி.பி.ஐ. 6 அதிகாரிகள் பலர் காலை 8.30 மணி முதல் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    • போலீஸ் நிலையத்தில் எவ்வாறு ‘வயர்லெஸ்’ சத்தங்கள் கேட்குமோ? அதே போன்று தண்டபாணிக்கு போனில் கேட்டது.
    • தண்டபாணியை முழுமையாக நம்ப வைத்த அந்த நபர் பின்னர் அதே நபர் தண்டபாணியை “ஸ்கைப் காலில்” பேசசொன்னார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி உழவர்கரை பா.ஜனதா மாவட்ட தலைவர் தண்டபாணி. இவர் லாஸ்பேட்டை அவ்வை நகரில் வசித்து வருகிறார். இவர் ஓட்டல் உள்ளிட்ட தொழில்களையும் நடத்தி வருகிறார்.

    நேற்று காலை 8.13 மணிக்கு கர்நாடக மாநில பதிவு பெயர் கொண்ட தொலைபேசி எண்ணில் இருந்து தண்டபாணிக்கு போன் வந்தது.

    எதிர் முனையில் பேசியவர் நீங்கள் பெட்எக்ஸ் கொரியர் மூலம் அனுப்பிய போதை பொருளை மும்பையில் கைப்பற்றி சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது. உங்களுக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    கடத்தல் மூலம் நீங்கள் எவ்வளவு பணம் பரிமாற்றம் செய்துள்ளீர்கள் என்பது எங்களுக்கு பட்டியல் வந்துள்ளது.

    எனவே நாங்கள் சொல்வது நீங்கள் கேட்டால் உங்களை வழக்கில் இருந்து விடுவிப்போம் என பேசினார். இதைக் கேட்ட பா.ஜனதா பிரமுகர் தண்டபாணி அதிர்ச்சியில் உறைந்து போனார்.

    எதிர்முனையில் பேசிய நபர் உடனே தண்டபாணியின் செல்போனுக்கு வாட்ஸ்-அப்பில் சி.பி.ஐ. எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளது போல் ஒரு கடிதத்தை அனுப்பினார்.

    அந்த எப். ஐ. ஆரில் சி.பி.ஐ. எப்படி வழக்கு பதிவு செய்திருக்குமோ அதே போல் இருந்தது.

    தொடர்ந்து மற்றொருவர் சி.பி.ஐ. அலுவலகத்தில் இருந்து அதிகாரி பேசுவதாக பேசினார்.

    அப்போது போலீஸ் நிலையத்தில் எவ்வாறு 'வயர்லெஸ்' சத்தங்கள் கேட்குமோ? அதே போன்று தண்டபாணிக்கு போனில் கேட்டது. தண்டபாணியை முழுமையாக நம்ப வைத்த அந்த நபர் பின்னர் அதே நபர் தண்டபாணியை "ஸ்கைப் காலில்" பேசசொன்னார்.

    எதிரே பேசியவரின் உருவம் ஸ்கைப் காலில் தெரியாததால் சந்தேகம் அடைந்த தண்டபாணி சுதாரித்து பதில் தர ஆரம்பித்தார். அடுத்தடுத்து சுமார் ஒன்றரை மணி நேரம் விடாமல் பேசிய அந்த நபர் தண்டபாணியின் வங்கி கணக்கு எண் அவருடைய பண பரிமாற்றம் உள்ளிட்டவையை கூறி மோசடியில் ஈடுபட முயற்சித்தார்.

    பின்னர் சுதாரித்துக்கொண்ட தண்டபாணி போனை துண்டித்து இதுகுறித்து கோரிமேட்டில் உள்ள சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சி.பி.ஐ. அதிகாரி என பேசிய போலி நபரின் விவரங்களை சேகரித்து வருகின்றனர். புதுவையில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பிரமுகர்களை குறி வைத்து அமலாக்கத்துறை அதிகாரி, சி.பி.ஐ. அதிகாரி என கூறி போலி ஆசாமிகள் தொடர்ந்து மிரட்டி வருவதால் பா.ஜனதாவினர் கலக்கத்தில் உள்ளனர்.

    ஏற்கனவே அமலாக்கத்துறை அதிகாரி என கூறி கல்யாணசுந்தரம், சிவசங்கர் எம்.எல்.ஏ.விடம் சிக்கிய போலி அமலாக்கத்துறை அதிகாரியை போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×