search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vijayakumar"

    • தன்னைப் பற்றி அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தி தனியார் யூட்யூப் சேனல் ஒன்று வீடியோக்களை பதிவு செய்துள்ளது.
    • இதனால் தனது குடும்பத்தினர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்

    தனது குடும்பத்தை பற்றி தவறான தகவல்களை யூடியூப் சேனலில் பதிவிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் அருண் விஜய் புகார் அளித்துள்ளார்.

    அருண் விஜய் சார்பில் அவரது வழக்கறிஞர் புகார் மனு அளித்துள்ளார்.

    அந்த புகார் மனுவில், "தன்னைப் பற்றியும் தனது தந்தை விஜயகுமாரின் முதல் மனைவி பற்றியும் அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தி தனியார் யூட்யூப் சேனல் ஒன்று வீடியோக்களை பதிவு செய்துள்ளது. இதனால் தனது குடும்பத்தினர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். மேலும் தவறான தகவல்களைப் பதிவிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அவர் கோரிக்கை வைத்துள்ளார். 

    • மர்ம நபர் பைத்தியகாரத் தனமாக சிரித்தது என் காதுகளில் கேட்டுக்கொண்டே இருக்கிறது.
    • வனிதாமீது தாக்குதல் நடத்திய சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை:

    நடிகர் விஜயகுமார் மகளும், நடிகையுமான வனிதா மர்மநபர் ஒருவர் திடீரென தாக்கியதாக வலைதளத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    நான் பிக்பாஸ் நிகழ்ச்சி விமர்சனத்தை முடித்து விட்டு இரவு உணவு சாப்பிட்டுவிட்டு என் காரில் இறங்கி நடந்துசென்று கொண்டிருந்தேன். காரை என்னுடைய சகோதரி சவுமியா வீட்டு அருகே இருட்டான பகுதியில் நிறுத்தினேன்.

    அப்போது எங்கிருந்தோ வந்த ஒரு மர்ம நபர் பிரதீப்புக்கு ரெட்கார்டு கொடுக்கிறீங்களா? என கேட்டார்.

    அதுக்கு நீ வேற சப்போர்ட்டுக்கு வர்றியா? என சொல்லி என் முகத்தில் பலமாக தாக்கிவிட்டு ஓடிவிட்டார். இதனால் காயம் அடைந்து ரத்தம் வழிந்தது. நள்ளிரவு 1 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததால் என் அருகில் யாரும் இல்லை. என் சகோதரியை கீழே வரும்படி அழைத்த நிலையில் அவர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யும் படி தெரிவித்தார்.

    ஆனால் நான் அவளிடம் போலீசில் புகார் தெரிவிப்பதில் நம்பிக்கை இல்லை என தெரிவித்தேன்.

    காயத்திற்காக முதலுதவி செய்துவிட்டு கோபத்துடன் வெளியேறி தாக்கியவரை அடையாளம் காண நினைத்தேன். முடியவில்லை. அந்த மர்ம நபர் பைத்தியகாரத் தனமாக சிரித்தது என் காதுகளில் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

    நான் திரையில் தோன்றும் அளவுக்கு உடல் நலத்துடன் இல்லாததால் ஓய்வு எடுத்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

    வனிதாமீது தாக்குதல் நடத்திய சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பிக்பாஸ்-7 சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக நடிகர் பிரதீப் ஆண்டனி பங்கேற்றார்.

    சவாலான போட்டியாளராக திகழ்ந்த பிரதீப் சக பெண்களின் பாதுகாப்பு பிரச்சினைக்கு காரணமாக இருந்ததாக கூறி ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார்.

    இந்த விவகாரம் வலை தளத்தில் சர்ச்சை பொருளாக பதிவு செய்யப்பட்டு வந்தது.

    பலரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை விமர்சித்து கருத்து தெரிவித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    சுந்தர்.சி-யிடம் இணை இயக்குநராக பணிபுரிந்த கே.வி.கதிர்வேலு இயக்கத்தில் சசிகுமார் - நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகி வரும் படத்திற்கு ராஜ வம்சம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
    `பேட்ட' படத்திற்கு பிறகு சசிகுமார் `நாடோடிகள் 2', கொம்புவச்ச சிங்கம்டா, கென்னடி கிளப் உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்திருக்கிறார். இதில் கென்னடி கிளப் விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சசிகுமார் தற்போது கே.வி.கதிர்வேலு இயக்கத்திலும், என்.வி.நிர்மல்குமார் இயக்கத்திலும் நடித்து வருகிறார். இதில் கே.வி.கதிர்வேலு இயக்கும் படத்திற்கு ராஜ வம்சம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் சசிகுமார் ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார்.



    சதீஷ், யோகி பாபு, ராதாரவி, தம்பி ராமையா, விஜயகுமார் மற்றும் சிங்கம்புலி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் 

    நடிக்கின்றனர். 49 நடிகர், நடிகைகளுடன் உருவாகும் ராஜவம்சம், தலைப்புக்கு ஏற்றார்போல் பேமிலி என்டர்டெயின்மென்ட் படமாக தயாராகிறது. சென்னை மற்றும் பொள்ளாச்சியில் முதல்கட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

    விஜயகுமாருக்கு சொந்தமான வீட்டுக்குள் வனிதா நுழைந்த விவகாரத்தில், கருத்து தெரிவித்த விஜயகுமார், தப்பு செய்தவர்கள் பலனை அனுபவிப்பார்கள் என்றார். #Vanitha #Vijayakumar
    நடிகர் விஜயகுமாருக்கு சொந்தமாக சென்னை ஆலப்பாக்கத்தில் பங்களா ஒன்று உள்ளது. இதை அவர் படப்பிடிப்புக்கு வாடகைக்கு விட்டு வருகிறார்.

    சில நாட்களுக்கு முன் அந்த வீட்டில் படப்பிடிப்பு நடத்துவதற்காக வந்த மகள் வனிதா அந்த வீட்டை விட்டு வெளியேற மறுத்தார். இதுபற்றி விஜயகுமார் காவல் துறையில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து, வனிதாவையும் அவருடைய நண்பர்களையும் காவல்துறை அந்த வீட்டை விட்டு வெளியேற்றியது.

    வனிதா தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், அதனால் தனக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்று, உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் வனிதாவுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டது.



    நேற்று வனிதா திரும்பவும் ஆலப்பாக்கம் பங்களாவுக்குள் நுழைந்தார். உடனே போலீசார் அவரை வெளியேற்றினார்கள். இதனால் வனிதா முதல்-அமைச்சரை சந்திக்க முயன்று திரும்பினார். இதுபற்றி விஜயகுமாரை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறியதாவது:-

    ‘‘தப்புப் பண்றவங்க அதுக்கான பலனை அனுபவிப்பாங்க. நான் வேற என்ன சொல்றது? சட்டப்படி என்ன செய்யணுமோ, அதைச் செஞ்சுக்கிட்டிருக்கேன். இதுக்கு மேலே இதைப் பத்தி பேட்டியெல்லாம் கொடுக்க எனக்கு விருப்பம் இல்லைங்க’’ இவ்வாறு வருத்தமாகச் சொன்னார். வனிதாவிடம் அவர் தரப்பு கருத்தைக் கேட்பதற்காக முயற்சி செய்தபோது, அவரது போன் சுவிட்ச் ஆப் நிலையிலேயே இருந்தது. #Vanitha #Vijayakumar

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து இன்று காலை விஜயகுமார் வீட்டிற்குள் தனது மகள் உடன் நடிகை வனிதா சென்றுள்ளார். #vanitha #vijayakumar

    சென்னை:

    ஆலப்பாக்கம் அஷ்டலட்சுமி நகர் 19-வது தெருவில் நடிகர் விஜயகுமாருக்கு சொந்தமான பங்களா வீடு உள்ளது. இந்த பங்களா வீட்டை விஜயகுமார் சினிமா ஷூட்டிங் எடுக்க வாடகைக்கு கொடுத்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் இயக்கும் டாடி என்கிற சினிமா படப்பிடிப்பிற்காக இரண்டு நாட்கள் வீட்டை வாடகைக்கு எடுத்த விஜயகுமார் மகள் வனிதா வீட்டை திரும்ப ஒப்படைக்காமல் வீட்டை விட்டு வெளியேறாமல் விஜயகுமாரிடம் தகராறில் ஈடுபட்டார்.

    பின்னர் மதுரவாயல் போலீஸ் மூலம் வனிதா வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். வீட்டில் இருந்த வனிதா ஆதரவாளர்களை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே வனிதா பூந்தமல்லி நீதிமன்றம் மூலம் முன்ஜாமீன் பெற்றார். வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் இன்று காலை தனது வழக்கறிஞர்கள் உடன் விஜயகுமார் வீட்டிற்குள் தனது மகள் உடன் நுழைந்த நடிகை வனிதா பேட்டியளித்தார். அப்போது கூறியதாவது:-

    கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு என் அம்மா பெயரில் உள்ள இந்த வீட்டை விட்டு நான் போலீசாரால் வலுகட்டாயமாக வெளியேற்றப்பட்டேன். நான் நடித்து சம்பாதிக்கும் போது வாங்கிய வீடு.

    இதில் நான் உள்பட என்னுடன் பிறந்த இரண்டு சகோதரிகளுக்கும் இந்த வீட்டில் பங்கு உண்டு. நான் நியாயம் கேட்டு உச்சநீதி மன்றம் சென்று ரிட் மனு தாக்கல் செய்தேன்.

    அங்கு எனக்கு பாத்தியப்பட்ட இந்த வீட்டில் இருப்பதற்கு யாரும் எந்தவித இடையூறும் செய்யக் கூடாது என்றும் தேவைப்பட்டால் காவல் துறை உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. இந்த உத்தரவு நகல்களை காவல் துறை தலைவர் கமி‌ஷனர் மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோருக்கு அனுப்பி உள்ளேன்.

    இவ்வாறு கூறினார். #vanitha #vijayakumar

    தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் நடிகை வனிதா மனுதாக்கல் செய்த நிலையில், அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #Vanitha #VijayaKumar #ArunVijay
    நடிகர் விஜய்குமாருக்கு சென்னை மதுரவாயலை அடுத்த ஆலப்பாக்கம் அஷ்டலட்சுமி நகரில் சொந்தமாக பங்களா ஒன்று உள்ளது. விஜயகுமாரின் மகள் வனிதா விஜயகுமார் சில மாதங்களுக்கு முன் அந்த பங்களாவில் படப்பிடிப்பு நடத்தினார்.

    வனிதா விஜயகுமாரின் 2வது மனைவி மஞ்சுளாவுக்கு மகளாக பிறந்தவர். விஜயகுமாரின் முதல் மனைவி முத்துக்கண்ணு. இவர்களுக்கு நடிகர் அருண் விஜய் உள்பட 3 வாரிசுகள். வனிதாவின் தாயார் மஞ்சுளாவுக்கு வனிதா, பிரீதா, ஸ்ரீதேவி என 3 மகள்கள். பிரீதா இயக்குனர் ஹரியை திருமணம் செய்து கொண்டார். ஸ்ரீதேவி ஆந்திராவில் திருமணம் செய்து செட்டில் ஆகிவிட்டார்.

    வனிதா படப்பிடிப்புக்கு பிறகும் அந்த வீட்டை காலி செய்யாததால் விஜயகுமார் மதுரவாயல் போலீசிலும், போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்திலும் புகார் செய்தார். போலீசார் தலையிட்டு, நடிகை வனிதா மற்றும் அவரது நண்பர்களை அந்த வீட்டில் இருந்து வெளியேற்றினர்.



    அப்போது வனிதாவின் நண்பர்கள் தகராறில் ஈடுபட்டதால், போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். வனிதாவும் தனது தாயார் மறைவிற்கு பிறகு அவருக்கு சொந்தமான சொத்துக்களை விஜயகுமாரும், அவரது முதல் மனைவி மற்றும் மகன் அருண்விஜய் ஆகியோர் அபகரித்துக்கொண்டதாக புகார் தெரிவித்து இருந்தார்.

    இதனை நடிகர் விஜயகுமார், நடிகர் அருண் விஜய் ஆகியோர் மறுத்தனர். இந்தநிலையில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால், பாதுகாப்பு வேண்டும் என்று கேட்டு உச்சநீதிமன்றத்தில் வனிதா மனு தாக்கல் செய்தார்.

    அதனை விசாரித்த உச்சநீதிமன்றம் வனிதாவுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டது. #Vanitha #VijayaKumar #ArunVijay


    வீட்டை அபகரித்ததாக மகள் மீது நடிகர் விஜயகுமார் புகார் அளித்த நிலையில், நடிகை வனிதா அந்த வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதுடன், அவர் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. #VijayaKumar #Vanitha
    பிரபல நடிகர் விஜயகுமாருக்கு சொந்தமான பிரம்மாண்டமான பங்களா வீடு மதுரவாயலை அடுத்த ஆலப்பாக்கம் அஷ்ட லட்சுமி நகர் 19-வது தெருவில் உள்ளது. இதனை அவர் படப்பிடிப்புக்காக வாடகைக்கு விட்டு வந்தார்.

    இவரது மூத்த மகள் நடிகை வனிதா புதிய படம் ஒன்றை தயாரித்து வருகிறார். இதற்காக படப்பிடிப்பு நடத்த அவர் கடந்த வாரம் தந்தை விஜயகுமாரிடம் பங்களா வீட்டை வாடகைக்கு எடுத்தார்.

    படப்பிடிப்பு முடிந்தும் வனிதா அந்த வீட்டை காலி செய்ய மறுத்துவிட்டார். மேலும் வீட்டில் தனக்கும் பங்கு உள்ளது என்று கூறியதாக தெரிகிறது.

    இதனால் விஜயகுமாருக்கும், மகள் வனிதாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து விஜயகுமார் மதுரவாயல் போலீசில் வனிதா மீது புகார் அளித்தார்.

    நேற்று மாலை சென்னை போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதனையும் சந்தித்து புகார் மனு அளித்தார். அப்போது வீடு தொடர்பான சொத்து ஆவணங்களையும் கொடுத்தார்.

    இது தொடர்பாக உதவி கமி‌ஷனர் ஜான்சுந்தர், இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ் ஆகியோர் விசாரணை நடத்தினர். வனிதாவிடம் வீடு தொடர்பான ஆவணங்களை கொடுக்கும்படி தெரிவித்தனர். ஆனால் அவர் போலீசாரிடம் எந்த ஆவணத்தையும் கொடுக்கவில்லை.



    இதையடுத்து நேற்று இரவு போலீசார் அதிரடியாக சர்ச்சைக்குரிய பங்கா வீட்டுக்குள் புகுந்தனர். அப்போது அங்கிருந்த நடிகை வனிதாவை போலீசார் வலுக் கட்டாயமாக வெளியேற்றினர்.

    மேலும் வீட்டில் அத்துமீறி தங்கியிருந்த கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்த நரேந்திரன், ஆண்ட்ரூஸ், வடபழனியை சேர்ந்த ஜோசப் மனோஜ், திருவேங்காடு பாலா, சைதாப்பேட்டை சத்திய சீலன், நெற்குன்றம் தியாகராஜன், காஞ்சீபுரம் மணிவர்மா ஆகிய 7 பேரை கைது செய்தனர்.

    அனைவரையும் வெளியேற்றிய பின்னர் பங்களா வீட்டை போலீசார் பூட்டு போட்டு பூட்டினர். அதன் சாவியை நடிகர் விஜயகுமாரிடம் ஒப்படைத்தனர்.

    வனிதா மீது கொலை மிரட்டல், அத்துமீறி நுழைந்து வீட்டை சேதப்படுத்தியது உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    நடிகர் விஜயகுமார் - மகள் வனிதாவுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதல் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #VijayaKumar #Vanitha

    திமுக தலைவர் கருணாநிதி சமாதியில் அஞ்சலி செலுத்திய பிறகு பேட்டியளித்த நடிகர் விஜயகுமார், கலைஞர் உழைப்பால் உயர்ந்தவர், அவருக்கு தெரியாத விஷயமே இல்லை என்றார். #Karunanidhi #Vijayakumar
    மெரினா கடற்கரையில் அண்ணா சமாதிக்கு அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு பொதுமக்கள், கட்சித் தொண்டர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். திரையுலகப் பிரபலங்கள் பலரும் கருணாநிதி சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

    3-வது நாளாக மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்தினர். வெளியூர்களில் இருந்தும் பலர் அஞ்சலி செலுத்த மெரினா கடற்கரைக்கு வந்த வண்ணமாக உள்ளனர். 

    முன்னதாக நடிகர் கார்த்தி நேற்று கருணாநிதி சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தினார். இந்த நிலையில், இன்று காலை நடிகை ஜெயசித்ரா கருணாநிதிக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். 


    நடிகர் விஜயகுமார், இயக்குநர் ஹரி மற்றும் அவர்களது குடும்பத்தினரும் இன்று காலை கருணாநிதி சமாதியில் அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி செலுத்திய பிறகு நடிகர் விஜயகுமார் பேசியபோது, கலைஞர் உழைப்பால் உயர்ந்தவர், அவருக்கு தெரியாத விஷயமே இல்லை என்றார். #Karunanidhi #Vijayakumar #JeyaChitra

    ×