என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
- நீலகிரி மாவட்டம் சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்குவதால், தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
- நீலகிரி மாவட்டத்தின் சுற்றுலா வளர்ச்சியும் பாதிக்கப்படும் நிலைமை ஏற்பட்டு உள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்துக்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்திருந்து ஊட்டி, குன்னூர், கூடலூர் மற்றும் கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று அங்குள்ள சுற்றுலா மையங்களை கண்டு ரசித்து செல்கின்றனர்.
இந்த மாவட்டத்தில் இயங்கி வரும் நூற்றுக்கணக்கான உணவகங்கள், டீக்கடைகள், பேக்கரிகள் உள்ளிட்டவை பெரும்பாலும் வணிக பயன்பாட்டுக்கான கியாஸ் சிலிண்டர்களை நம்பியே உள்ளன.
இந்நிலையில் அங்குள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக வணிக கியாஸ் சிலிண்டர்கள் போதிய அளவில் கிடைக்காததால், பல உணவகங்களில் சமையல் பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன.
மேலும் ஒருசில இடங்களில் கியாஸ் தட்டுப்பாடு காரணமாக உணவகங்கள் முழுமையாக மூடப்பட்டு உள்ளன. ஏராளமான ஓட்டல்களில் பரிமாறப்படும் உணவுகளின் வகைகள் குறைக்கப்பட்டும் விற்பனை செய்யப்படுகின்றன.
மேலும் காலை மற்றும் மாலை நேரங்களில் பொதுமக்கள் அதிகம் கூடும் டீக்கடைகள், சிற்றுண்டி விடுதிகள் மற்றும் பேக்கரிகளிலும் கியாஸ் தட்டுப்பாடு காரணமாக, அங்கு பணிகள் சீராக நடைபெறவில்லை.
இதனால் அந்த கடைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலையில் உள்ளது.
நீலகிரி மாவட்டம் சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்குவதால், தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்த நிலையில் உணவகங்கள் மற்றும் டீக்கடைகள் மூடப்படுவது தொடர்ந்தால், சுற்றுலா பயணிகளுக்கு உணவு மற்றும் சிற்றுண்டி கிடைப்பதில் சிரமம் ஏற்படும் அபாயம் இருப்பதாக வணிகர்கள் தெரிவித்து உள்ளனர்.
மேலும் நீலகிரி மாவட்டத்தின் சுற்றுலா வளர்ச்சியும் பாதிக்கப்படும் நிலைமை ஏற்பட்டு உள்ளது. எனவே வணிக பயன்பாட்டுக்கான கியாஸ் சிலிண்டர்கள் போதிய அளவில் கிடைக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீலகிரி மாவட்ட உணவக உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- இன்றைய முக்கியச் செய்திகள்.
- இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...
- சிறுவர்கள் இருவரும் முதலமைச்சருடன் ரீல்ஸ் எடுத்துக்கொண்டனர்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகள் தெரிவித்ததுடன் அட்வைஸ் வழங்கினார்.
இன்ஸ்டாகிராம் சமூகவலைத்தளம் மூலம் பிரபலமான பண்ருட்டியைச் சேர்ந்த சிறுவர்கள் தேவா, ஜீவா உடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார்.
அங்கு, சிறுவர்கள் இருவருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகள் தெரிவித்ததுடன் அட்வைஸ் வழங்கினார்.
அப்போது, சிறுவர்கள் இருவரும் முதலமைச்சருடன் ரீல்ஸ் எடுத்துக்கொண்டனர்.
இதுதொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவுடன் கூடிய வீடியோவை பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில்,"படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க.. எனக் கல்வியை முன்னிறுத்தி இன்ஸ்டாவில் கலக்கும் சிறுவர்கள்.
தேவா, ஜீவா உடன் உங்கள் ஸ்டாலின்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
- தங்கம் விலை கிராமுக்கு ரூ.140 குறைந்து ரூ.14,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது.
தங்கம் விலை கடந்த 10, 11-ந்தேதிகளில் விலை உயர்ந்து வந்த நிலையில், 12, 13-ந்தேதிகளில் விலை குறைந்து காணப்பட்டது.
நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 970-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்து 760-க்கும், நேற்று கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.14,900-க்கும், சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.1,19,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,120 குறைந்து ரூ.1,18,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.140 குறைந்து ரூ.14,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை ரூ.10 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.280-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.1,19,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.14,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.290-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:
13-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,200
12-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,760
11-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,20,960
10-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,20,400
09-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,600
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:
13-03-2026- ஒரு கிராம் ரூ.290
12-03-2026- ஒரு கிராம் ரூ.290
11-03-2026- ஒரு கிராம் ரூ.300
10-03-2026- ஒரு கிராம் ரூ.300
09-03-2026- ஒரு கிராம் ரூ.290
- பெட்ரோல், டீசலின் விலை அதிரடியாக உயர வாய்ப்புள்ளது என்றும் திடீரென வதந்தி பரவியது.
- தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் பெட்ரோல் பங்க்குகளில் வாகன ஓட்டிகள் அலைமோதி வருகிறார்கள்.
அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஈரான் மீது தொடுத்துள்ள போர் காரணமாக வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக ஓட்டல்களுக்கு வழங்கப்படும் வணிக சிலிண்டர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
கியாஸ் சிலிண்டரை போன்று பெட்ரோல்-டீசலுக்கும் தட்டுப்பாடு ஏற்பட போவதாகவும், இதனால் பெட்ரோல், டீசலின் விலை அதிரடியாக உயர வாய்ப்புள்ளது என்றும் திடீரென வதந்தி பரவியது.
இதன் காரணமாக வாகன ஓட்டிகள் பெட்ரோல் பங்க்குகளுக்கு படையெடுத்தனர். தங்களது வாகனங்களுக்கு பெட்ரோல் போட்டது போக, கேன் மற்றும் பாட்டில்களிலும் பெட்ரோல் மற்றும் டீசலை பிடித்து சென்றனர்.
இதனை தொடர்ந்து எண்ணெய் நிறுவனங்கள் சார்பிலும் பெட்ரோல்-டீசல் பங்க் உரிமையாளர்கள் சங்கத்தினரும் தமிழகத்தில் பெட்ரோல், டீசல் வினியோகத்தில் எந்தவித தட்டுப்பாடும் இல்லை. எனவே பொதுமக்கள் அது தொடர்பாக பீதியடைந்து பெட்ரோல் பங்க்குகளில் மொத்தமாக குவிய வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தனர்.
இருப்பினும் பல இடங்களில் பெட்ரோல் பங்க்குகளில் கூட்டம் அலைமோதியது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் பெட்ரோல் பங்க்குகளில் வாகன ஓட்டிகள் அலைமோதி வருகிறார்கள்.
இதனை கருத்தில் கொண்டு பெட்ரோல் பங்க்குளில் கேன் மற்றும் பாட்டில்களில் பெட்ரோல்-டீசல் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் முரளி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கூறும்போது, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படவில்லை. வாகனங்களுக்கு தேவைப்படும் அளவுக்கு பெட்ரோல்-டீசல் இருப்பு உள்ளது. எனவே, வாகனங்களுக்கு மட்டும் பெட்ரோல் போடுவதற்கு முடிவு செய்துள்ளோம். பொதுமக்கள் கேன்களை தூக்கிக் கொண்டு பெட்ரோல் பங்க்குகளுக்கு வர வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் பெட்ரோல் பங்க்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கக்கோரி டிஜிபிக்கு தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் கடிதம் எழுதி உள்ளது. பெட்ரோல் பங்க்குகளில் நிலவும் செயற்கை தட்டுப்பாடு, கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். நகர்ப்புறங்களில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் தலா ஒரு காவலரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.
- திருச்சி செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் 2.15 நிமிடம் தாமதமாக எழும்பூரில் இருந்து காலை 10.15 மணிக்கு புறப்படும்.
- ரெயில்கள் திடீரென மாற்றப்பட்டிருப்பது பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி, எழும்பூரில் இருந்து செங்கோட்டை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-12661) வருகிற 17-ந் தேதி முதல் ஏப்ரல் 6-ந் தேதி வரை எழும்பூருக்கு பதிலாக தாம்பரத்தில் இருந்து புறப்படும். அதே போல, நெல்லையில் இருந்து எழும்பூருக்கு வரும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் (12632) வருகிற 16-ந்தேதி முதல் ஏப்ரல் 5-ந் தேதி வரை எழும்பூருக்கு பதிலாக தாம்பரம் சென்றடையும்.
எழும்பூரில் இருந்து காலை 8 மணிக்கு புறப்பட்டு திருச்சி செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் (22675) வருகிற 16-ந்தேதியில் இருந்து ஏப்ரல் 5-ந்தேதி வரை 2.15 நிமிடம் தாமதமாக எழும்பூரில் இருந்து காலை 10.15 மணிக்கு புறப்படும்.
இவ்வாறு அதில் கூறப்படுகிறது.
தென் மாவட்ட மக்களின் வாழ்வாதார ரெயில்களாக கருதப்படும் இந்த ரெயில்கள் திடீரென மாற்றப்பட்டிருப்பது பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை நகரின் மையப்பகுதியில் இருந்து தாம்பரத்திற்கு செல்வதற்குள் கடும் போக்குவரத்து நெரிசலையும், கூடுதல் செலவுகளையும் சந்திக்க நேரிடும் என பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
- மத்திய பட்ஜெட்டில் 471 கோடி ரூபாய் நிதி இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளது.
- வருகிற அக்டோபர் மாதத்தில் எய்ம்ஸ் கட்டுமான பணிகள் முழுவதும் முடிக்கப்படும் என அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது.
மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் 47 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக. தகவல் அறியும் உரிமை சட்டத்தில் சமூக ஆர்வலர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டு உள்ளது.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பனம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியராஜா. சமூக ஆர்வலரான இவர் மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் குறித்த 8 கேள்விகளை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்திடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி கேட்டிருந்தார்.
அதன்படி அவர்கள் அளித்த பதில் கடிதத்தில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் மொத்த கட்டுமான பணியின் மதிப்பீடு ரூ.2,021.51 கோடி ஆகும். மத்திய பட்ஜெட்டில் 471 கோடி ரூபாய் நிதி இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளது.
47 சதவீத பணிகள் தற்போது நிறைவடைந்துவிட்டது. வருகிற அக்டோபர் மாதத்தில் எய்ம்ஸ் கட்டுமான பணிகள் முழுவதும் முடிக்கப்படும் என அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது.
மார்ச் மாதத்திலேயே சில முடிவுற்ற பணிகளை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார் என சமூக வலைதளங்களில் செய்தி வெளியான நிலையில் முழுமையாக கட்டுமான பணிகளை முடித்த பின்பு தான் எய்ம்ஸ் மருத்துவமனையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
எனவே கட்டுமான பணிகளை தரத்துடனும், ஜப்பான் நாட்டில் இருந்து வாங்க வேண்டிய நிதியை முறையாக வாங்கி விரைந்து பணிகளை முடித்து திறப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- முன்னுரிமை அடிப்படையில் வணிக ரீதியான சிலிண்டர்களை வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
- ஆலோசனை கூட்டம் முடிந்த பின் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகும் என என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் சிலிண்டர் தேவை மற்றும் கையிருப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் தலைமைச் செயலாளர், நிதித்துறை செயலாளர் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். முன்னுரிமை அடிப்படையில் வணிக ரீதியான சிலிண்டர்களை வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த ஆலோசனை கூட்டம் முடிந்த பின் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகும் என என எதிர்பார்க்கப்படுகிறது.
- ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அவர் கட்சி தொடங்க நினைத்தது உண்மை.
- தமிழகத்தில், தி.மு.க. தலைமையிலான கூட்டணி மிகுந்த வலிமையோடு உள்ளது.
மதுரைக்கு விமானத்தில் வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரக்கூடாது என தி.மு.க. மிரட்டியதாக, த.வெ.க. நிர்வாகி ஆதவ் அர்ஜுனா கூறியது கற்பனை என நினைக்கிறேன். ரஜினிகாந்த் அரசியல், அதிகாரம், ஆட்சி போன்றவற்றில் ஆர்வம் காட்டக்கூடியவரோ, மயங்கக்கூடியவரோ அல்ல. அவர் அந்த நிலையில் இருந்தெல்லாம், வெளியேறிவிட்டார், விலகி நிற்கிறார். அவரை யாரும் ஆசைக்காட்டி மயக்கி அரசியலுக்குள் இழுக்க முடியாது. அச்சுறுத்தி அவரை வெளியேற்றவும் முடியாது என்ற நிலையை அவர் எட்டிவிட்டார்.
ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அவர் கட்சி தொடங்க நினைத்தது உண்மை. ஆனால், இந்த அரசியலில் வலதுசாரிகள், சங்பரிவார்களின் தலையீடு, ஆதிக்கம் மேலோங்கி வரும் நிலையில் அது தனக்கு உகந்த தல்ல என கருதினார். அரசியல் விஷயத்தில் தீர்க்கதரிசியாக முன்பே உணர்ந்து அதனை அவர் கைவிட்டுவிட்டார் என்பதே உண்மை.
அவரை நேரில் சந்தித்து உரையாடியதன் அடிப்படையில், அவரை புரிந்து நான் கூறும் கருத்து இது. அவரை தி.மு.க. அச்சுறுத்தியது என கூறுவது கற்பனை. அதற்காக அவர் அச்சப்பட்டு பின்வாங்கினார் என்பதும் கற்பனை. இது ரஜினியின் ஆளுமையை கொச்சைப்படுத்தும் விமர்சனமாக பார்க்கிறேன்.
தமிழகத்தில், தி.மு.க. தலைமையிலான கூட்டணி மிகுந்த வலிமையோடு உள்ளது. தி.மு.க. கூட்டணியை எதிர்க்கக்கூடிய, வலிமையுள்ள கூட்டணியை இன்னும் உருவாக்கவில்லை. எத்தனை தொகுதியில் போட்டியிடுகிறோம் என்பதை, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடித்த பிறகு முறைப்படி அறிவிப்பு செய்யப்படும்.
சசிகலா கட்சியின் பெயரை அறிவித்துள்ள நிலையில், அரசியல் ரீதியாக என்ன முடிவெடுக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
மானாமதுரையை சேர்ந்த ஆகாஷ் படுகொலையில் தொடர்புடைய போலீசார் யாராக இருந்தாலும், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆகாஷ் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு தொகை வழங்குவதோடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
தூத்துக்குடி அருகே பள்ளி மாணவி பாலியலுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இதில் சம்பந்தப்பட்டவரை உடனடியாக கைது செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி அவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும். அரசு சார்பில் மாணவியின் குடும்பத்தினருக்கு இழப் பீடு தொகை வழங்க வேண்டும். அரசு வேலையும் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சன்பிளவர் ஆயில் முன்பு ஒரு லிட்டர் ரூ.155-க்கு விற்கப்பட்ட சூழலில் இப்போது ரூ.170-க்கு விற்கப்படுகிறது.
- சன்பிளவர் மற்றும் பாமாயில் எண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை கடந்த 2 வாரத்தில் மட்டும் உயர்ந்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தொடர் தாக்குதலை அரங்கேற்றி வருகின்றன.
இந்நிலையில் போர் சூழல் காரணமாக சமையல் எண்ணெய் விலையும் 'கிடுகிடு'வென உயர்ந்திருப்பதாக மொத்த வியாபாரி கொளத்தூர் சாலை வியாபாரி முன்னேற்ற சங்க பொருளாளர் அமிர்தராஜ் தெரிவித்தார்.
குறிப்பாக, வீட்டில் பெரும்பாலானோர் பயன்படுத்தக் கூடிய சூரிய காந்தி எண்ணெய் (சன்பிளவர் ஆயில்) முன்பு ஒரு லிட்டர் ரூ.155-க்கு விற்கப்பட்ட சூழலில், இப்போது ரூ.170-க்கு விற்கப்படுகிறது. சில்லரை கடைகளில் இதன் விலை ரூ.175 வரை விற்கப்படுகிறது.
இதேபோல், பாமாயில் கடந்த 2 வாரத்துக்கு முன்பு ஒரு லிட்டர் ரூ.110-க்கு விற்கப்பட்ட சூழலில், இப்போது ரூ.122 வரை மொத்த விற்பனை கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை கடைகளில் இதைவிட லிட்டருக்கு ரூ.5 முதல் ரூ.6 வரை அதிகரித்து விற்கப்பட்டு வருவதை பார்க்க முடிகிறது. அந்தவகையில் சன்பிளவர் மற்றும் பாமாயில் எண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை கடந்த 2 வாரத்தில் மட்டும் உயர்ந்துள்ளது.
இதுதவிர, நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் போன்றவற்றின் விலையும் லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.4 வரை உயர்த்தப்பட்டு விற்கப்படுகிறது.
- பாஜக கூட்டணியில் விஜய் இணையலாம் என அடுத்தடுத்து தகவல்கள் வெளியாகி வருகிறது.
- தவெக தலைவர் விஜய், பாஜக தலைவர்களை சந்திக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கரூர் விவகாரம் தொடர்பான சிபிஐ விசாரணைக்காக இன்று மாலை 3 மணிக்கு தவெக தலைவர் விஜய் சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்படுகிறார்.
கரூர் பெருந்துயரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்காக தவெக தலைவர் விஜய் நாளை ஆஜராகும் நிலையில் இன்று புறப்படுகிறார்.
ஏற்கனவே 2 முறை டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரான நிலையில் விஜய் மீண்டும் நாளை விசாரணைக்கு ஆஜராகிகறார்.
இதற்கிடையே, விஜய் டெல்லி செல்லும் விஜய் பாஜக தலைவர்களை சந்தித்து கூட்டணி தொடர்பாக பேசுவாரா என எதிர்பாரக்கப்படுகிறது.
பாஜக கூட்டணியில் விஜய் இணையலாம் என அடுத்தடுத்து தகவல்கள் வெளியாகி வருகிறது. கூட்டணி செய்தி உண்மை எனில் தவெக தலைவர் விஜய், பாஜக தலைவர்களை சந்திக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கூட்டணி குறித்த செய்திகள் வெளியாகி வரும் நிலையில், விஜய் டெல்லி பயணம் செய்வதால் இது முக்கியத்துவம் பெறுகிறது.
- 43 ஜோடி ரெயில் சேவை பரங்கிமலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
- பறக்கும் ரெயில் நீட்டிப்புத் தடத்தில் ரெயில் சேவை தொடங்கியது.
சென்னை வேளச்சேரி- பரங்கிமலை இடையே பறக்கும் ரெயில் நீட்டிப்புத் தடத்தில் ரெயில் சேவை தொடங்கியது.
அதன்படி, சென்னை கடற்கரை- வேளச்சேரிக்கு இடையிலான 43 ஜோடி ரெயில் சேவை பரங்கிமலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக நீட்டித்து வந்த பணிகள் நிறைவடைந்ததை அடுத்து ரெயில்கள் இயக்கப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதன்மூலம், தென்சென்னை மக்கள் நகரின் எந்தப் பகுதிக்கும் எளிதாக பயணம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.






