சென்னையில் வள்ளுவர் கோட்டம் திறக்கப்பட்ட நாள்: ஏப்.15- 1976

வள்ளுவர் கோட்டம், திருவள்ளுவருக்காகக் கட்டப்பட்டுள்ள ஒரு நினைவகம் ஆகும். இது சென்னையில், கோடம்பாக்கம் பெருந்தெரு, வில்லேஜ் தெருக்கள் சந்திப்புக்கு அண்மையில் அமைந்துள்ளது.
டைட்டானிக் கப்பல் அட்லாண்டிக் கடல் பனிப்பாறையில் மோதிய நாள்: ஏப்ரல் 14, 1912

ஆர்எம்எஸ் டைட்டானிக் என்பது ஒரு ஆடம்பர பயணிகள் கப்பல் ஆகும். இது வடஅயர்லாந்தில் பெல்பாஸ்ட் நகரில் உருவானது. 1912 இல் முதன் முதலாகச் சேவைக்கு விடப்பட்டபோது
இந்தியாவின் சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள்: ஏப்ரல் 14, 1891

பாபா சாகேப் என்றழைக்கப்படும் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் 1891-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் மத்திய பிரதேச மாநிலம் அம்பாவாதே என்னும் கிராமத்தில் ராம்ஜி மாலோஜி சக்பால் - பீமாபாய் ஆகியோரின் 14-வது குழந்தையாகப் பிறந்தார்.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்த தினம்: ஏப்.13-1930

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஒரு சிறந்த தமிழ் அறிஞர், சிந்தனையாளர், பாடலாசிரியர் ஆவார்.
காமராஜர் தமிழ்நாடு முதல்வரான நாள்: ஏப்.13- 1954

காமராஜர் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர்களுள் ஒருவர் ஆவார். 1954-ம் ஆண்டு முதலமைச்சர் ஆனார். இவர் 9 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்தார்.
மனித விண்வெளிப் பயணத்துக்கான சர்வதேச நாள்: ஏப்.12

மனித விண்வெளிப் பயணத்துக்கான சர்வதேச நாள் (International Day of Human Space Flight) ஆண்டுதோறும் ஏப்ரல் 12-ம் நாள் கொண்டாடப்படுகிறது.
வீதியோரச் சிறுவர்களுக்கான சர்வதேச நாள்- ஏப்ரல்- 12

வீதியோரச் சிறுவர்களுக்கான சர்வதேச நாள் (International Day for Street Children) என்பது உலகெங்கும் கோடிக்கணக்கில் உள்ள வீதியோரச் சிறுவரின் நல்வாழ்வுக்கும் அவர்களின் உரிமைகளுக்காகவும் குரல்கொடுக்கும் சர்வதேச நாளாகும்.
மகாத்மா காந்தி மனைவி கஸ்தூரிபா பிறந்த தினம்: ஏப்.11- 1869

கஸ்தூரிபாய், மகாத்மா காந்தியின் வாழ்க்கைத் துணைவியார். கணவர் ஏற்ற தேசிய விரதத்திற்காக தானும் உடன் உழைத்தவர்.
விளையாட்டு வர்ணனை வானொலியில் ஒலிபரப்பான நாள்: ஏப். 11- 1921

விளையாட்டை நேரில் கண்டறிய முடியாதவர்களுக்கு வானொலி மூலம் அதன் வர்ணனையை கேட்கும் வகையில் 1921-ம் ஆண்டு ஏப்ரல் 11ந்தேதி முதன்முறையாக வானொலி வர்ணனை செய்யப்பட்டது
128 பயணிகளுடன் அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் மாயமான நாள்: ஏப்.10- 1963

ஐக்கிய அமெரிக்காவின் த்ரெஷர் என்ற நீர்மூழ்கி கப்பல் 1963-ம் ஆண்டு இதே தேதியில் 128 பயணிகளுடன் மாயமானது.
டைட்டானிக் கப்பல் பயணம் செய்த நாள்: ஏப். 10- 1912

டைட்டானிக் கப்பல் அண்டார்டிக் கடலில் பனிப்பாறையில் சிக்கி மூழ்கியது. இதில் பயணம் செய்த அனைவரும் இறந்தனர். இந்த கப்பல் 1912-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10-ந்தேதி தனது பயணத்தை ஆரம்பித்தது.
வார்னர் பிரதர்சின் முதல் 3டி படம் வெளியான நாள்: ஏப்.9- 1953

வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் முதல் முப்பரிமாண (3டி) திரைப்படம் ஹவுஸ் ஆப் வக்ஸ் என்ற படத்தை 1953-ம் ஆண்டு ஏப்.9-ந்தேதி வெளியிட்டது.
போயிங் 737 ரக விமானம் பறந்த நாள்: ஏப்.9- 1967

அமெரிக்காவின் முன்னணி விமான தயாரிப்பு நிறுவனமான போயிங், தனது 737 ரக விமானத்தை முதன்முதலாக 1967-ம் ஆண்டு ஏப்ரல் 9-ந்தேதி சேவைக்கு விட்டது.
முதல் மரண தண்டனை பெற்ற முதற்பெண்: ஏப்ரல் 8- 1899

மார்த்தா பிளேஸ் என்ற பெண்மணிக்கு 1899-ம் ஆண்டு ஏப்ரல் 9-ந்தேதி மின்இருக்கையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
கோபி அன்னான் பிறந்த தினம்: ஏப்ரல் 8 1938

கோபி அன்னான் கானாவைச் சேர்ந்தவர். ஐக்கிய நாடுகள் அவையின் ஏழாவது செயலாளராக இருந்தவர்.
உலக சுகாதார நாள்: ஏப்ரல் 7, 1950

உலகின் உள்ள அனைவருக்கும் இயன்றவரை ஆகக் கூடுதலான சுகாதார வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதே உலக சுகாதார அமைப்பின் நோக்கமாகும்.
வால்ட் டிஸ்னி மிக்கி மௌஸின் படத்தை வரைந்த தினம்: ஏப்ரல் 7, 1928

உலகப் புகழ் பெற்ற ஓவியரும், மிக முக்கியமான கார்ட்டூன் ஓவியரும் வால்ட் டிஸ்னி தன்னுடைய கற்பனை கதாபாத்திரமான மிக்கி மௌஸ் படத்தை 1928 ஆண்டு இதே நாளில் வரைந்தார்.
மீனாட்சி சுந்தரம் பிள்ளை பிறந்த தினம்: ஏப்.6, 1815

மீனாட்சி சுந்தரம் பிள்ளை 1815-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6-ந்தேதி பிறந்தார்.
திரைப்பட நடிகை சுஜாதா இறந்த தினம்: ஏப்.6-2011

சுஜாதா, 1952-ம் ஆண்டில், டிசம்பர் 10-ந் தேதி, இலங்கையில் பிறந்தார். அவருடைய சொந்த ஊர், கேரள மாநிலம். அங்குள்ள பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்தார்.