search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கென்யா, தான்சானியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது வெடிகுண்டு தாக்குதல்- 200 பேர் பலி 7-8-1998
    X

    கென்யா, தான்சானியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது வெடிகுண்டு தாக்குதல்- 200 பேர் பலி 7-8-1998

    தென் கிழக்கு ஆப்பிரிக்கான நாடுகளான தான்சானியா மற்றும் கென்யாவின் தலைநகரங்களில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் ஒரே நேரத்தில் குண்டு வெடித்தது.
    தென் கிழக்கு ஆப்பிரிக்கான நாடுகளான தான்சானியா மற்றும் கென்யாவின் தலைநகரங்களில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் ஒரே நேரத்தில் குண்டு வெடித்தது. இதில் 220-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியானார்கள். டிரக்கில் ஏற்றி வந்த குண்டுகளை தீவிரவாதிகள் வெடிக்க செய்தனர். அமெரிக்க படைகள் சவுதி அரேபியாவிற்கு வந்து 8 ஆண்டுகள் நிறைவடைந்த நாளில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

    இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

    * 1819 - கொலம்பியாவின் பொயாக்கா என்ற இடத்தில் ஸ்பானியர்களுக்கு எதிரான போரில் சிமோன் பொலிவார் பெரு வெற்றி பெற்றான்.

    * 1832 - இலங்கையில் சேமிப்பு வங்கி ஆரம்பிக்கப்பட்டது.

    * 1898 - யாழ்ப்பாணம் மானிப்பாயில் டாக்டர் ஸ்காட் தலைமையில் மானிப்பாய் மருத்துவமனை புதிய கட்டிடத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

    * 1906 - கல்கத்தாவில் வங்காளப் பிரிவினை எதிர்ப்புப் போராட்டத்தின் போது முதல் இந்திய தேசியக் கொடி உருவாக்கப்பட்டு பார்சி பகான் சதுக்கத்தில் ஏற்றப்பட்டது.

    * 1927 - ஒன்டாரியோவுக்கும் நியூயோர்க்கிற்கும் இடையில் அமைதிப் பாலம் அமைக்கப்பட்டது.
    Next Story
    ×