search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் சகாப்தம் தொடங்கிய நாள் இன்று
    X

    சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் சகாப்தம் தொடங்கிய நாள் இன்று

    கிரிக்கெட் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் இன்று தான் முதல் போட்டியில் அறிமுகமானார்.

    புதுடெல்லி:
     
    கிரிக்கெட் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் இன்று தான் முதல் போட்டியில் அறிமுகமானார்.

    இந்தியா மட்டுமல்லாது உலகின் அனைத்து நாடுகளில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மனதிலும் நீங்காத இடம்பிடித்த கிரிக்கெட் ஜாம்பவான், சச்சின் டெண்டுல்கர். இவர், இந்தியாவின் மராட்டிய மாநில தலைநகர் மும்பையில் 1973-ம் ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி பிறந்தார். அவருக்கு பெற்றோர் வைத்த பெயர் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர். சிறு வயதில் இருந்தே கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் விளையாட தொடங்கினார். அதன் பயனாக 16 வயதில் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து சாதனை படைத்தார்.



    1989-ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. 15-ம் தேதி தொடங்கிய முதல் போட்டி கராச்சியில் நடைபெற்றது. முதலில் ஆடிய பாகிஸ்தான் 409 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இமாலய இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 41 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

    அந்த சமயத்தில் தான், 16 வயது இளைஞரான சச்சின், இந்திய அணிக்காக தனது இன்னிங்ஸை விளையாட களமிறங்குகினார். முதல் போட்டியில் 24 பந்துகளை சந்தித்து 2 பவுண்டரிகளுடன் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த இளைஞன் பின்னாளில் கிரிகெட்டில் இவ்வளவு பெரிய சாதனை படைப்பார் என்று அப்போது யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அந்த இளைஞன் தான் இன்று இந்திய இளைஞர்களின் கிரிக்கெட் கடவுளாக திகழும் சச்சின் டெண்டுல்கர்.



    வலது கை ஆட்டக்காரரான சச்சின் டெண்டுல்கர் 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 15,921 ரன்கள் எடுத்துள்ளார். 463 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 18,466 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளார். கிரிக்கெட் வராலாற்றில் சர்வதேச டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் 100 சதம் அடித்த ஒரே வீரர், சச்சின்தான். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 30,000 ரனகள் குவித்த வீரர் என்ற பெருமையும் சச்சினையே சேரும். ஒருநாள் போட்டிகளில் முதல் முறையாக இரட்டை சதம் அடித்த விரர், சச்சின்.

    இந்திய அரசின் அர்ஜுனா விருது, ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது, பத்மஸ்ரீ, பத்மவிபூசண் விருதுகளை பெற்றுள்ளார். மராட்டிய மாநில அரசின் உயரிய விருதான பத்மபூஷன் விருதும் பெற்றுள்ளார். இந்திய அரசின் உயரிய விருதான பாரத ரத்னா விருது பெற்ற ஒரே விளையாட்டு வீரர் சச்சின்தான். இந்த சாதனைகளை படைத்த சச்சின், 2013-ம் ஆண்டு நவம்பர் 13-ம் தேதி அனைத்து விதமான கிரிக்கெட் போட்டியில் இருந்தும் ஓய்வு பெற்றார்.


    Next Story
    ×