என் மலர்
தொழில்நுட்பம்
போக்கோ நிறுவனத்தின் எக்ஸ் சீரிஸ் ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்தபோது வெடித்து சிதறியது.
போக்கோ நிறுவனத்தின் எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போன் பிரீமியம் மிட்-ரேன்ஜ் பிரிவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 860 பிராசஸர் கொண்டிருக்கும் எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போன் பிளாக்ஷிப் தர செயல்பாட்டை வழங்குகிறது.

சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கும் போக்கோ எக்ஸ்3 ப்ரோ இந்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் விற்பனைக்கு வந்தது. இந்த நிலையில், தனது போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போன் வெடித்து சிதறியதாக வாடிக்கையாளர் குற்றம் சாட்டியுள்ளார்.
I just bought the phone 2 month ago and look at this phone got blast firstly charging 100% than i remove charger than 5 min later blast .shame on uh poco. SIR HELP @POCOGlobal@IndiaPOCO@MiIndiaSupport@MiIndiaFCpic.twitter.com/2VEUL7eYhS
— Ammybhardwaj (@Ammybhardwaj13) September 4, 2021
ஜூன் 15 ஆம் தேதி வாங்கிய புதிய போக்கோ எக்ஸ்3 ப்ரோ செப்டம்பர் 4 ஆம் தேதி வெடித்ததாக அவர் தெரிவித்தார். ஸ்மார்ட்போன் சார்ஜரில் இணைத்த 5-வது நிமிடம் ஸ்மார்ட்போன் வெடித்து சிதறியதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இத்துடன் வெடித்த நி்லையில் உள்ள ஸ்மார்ட்போன் மற்றும் அதனை வாங்கிய கட்டண ரசீது உள்ளிட்டவைகளையும் அவர் இணையத்தில் வெளியிட்டார். ஸ்மார்ட்போன் வெடித்த சம்பவத்திற்கு போக்கோ தரப்பில் இதுவரை எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.
சாம்சங் நிறுவனத்தின் புதிய எம் சீரிஸ் 4ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள் அந்நிறுவன வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்22 4ஜி ஸ்மார்ட்போனிற்கான சப்போர்ட் பக்கம் அந்நிறுவனத்தின் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. சாம்சங் மலேசியா, சிங்கப்பூர் மற்றும் ரஷ்யா நாடுகளுக்கான வலைதளங்களில் இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் பட்டியலிடப்பட்டன.
சாம்சங் அதிகாரப்பூர்வ வலைதளத்திலேயே இடம்பெற்று இருக்கும் நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் வெளியீடு விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கலாம். சர்வதேச வெளியீட்டை தொடர்ந்து இதன் இந்திய வெளியீட்டுக்கான அறிவிப்பும் வெளியாகும்.

முந்தைய தகவல்களின்படி சாம்சங் கேலக்ஸி எம்22 4ஜி மாடலில் 25 வாட் பாஸ்ட் சார்ஜிங், டூயல் சிம் ஸ்லாட், பல்வேறு எல்.டி.இ. பேண்ட்களுக்கான வசதி, டூயல் பேண்ட் வைபை, என்.எப்.சி., ப்ளூடூத் 5 போன்ற அம்சங்கள் வழங்கப்படும் என தெரிகிறது.
நுபியாவின் ரெட்மேஜிக் தனது புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனினை சீன சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது.
நுபியா நிறுவனத்தின் ரெட்மேஜிக் பிராண்டு சீன சந்தையில் ரெட்மேஜிக் 6எஸ் ப்ரோ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இதில் 6.8 இன்ச் புல் ஹெச்.டி. பிளஸ் ஆமோலெட் ஸ்கிரீன், 165 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 888 பிளஸ் பிராசஸர், ரெட்மேஜிக் ஓ.எஸ். 4.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 வழங்கப்பட்டு இருக்கிறது.

ரெட்மேஜிக் 6எஸ் ப்ரோ அம்சங்கள்
- 6.8 இன்ச் 2400x1080 பிக்சல் புல் ஹெச்.டி. பிளஸ் ஆமோலெட் டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 888 பிளஸ் பிராசஸர்
- அட்ரினோ 660 ஜி.பி.யு.
- 8 ஜிபி / 12 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
- 12 ஜிபி / 16 ஜிபி / 18 ஜிபி ரேம், 256 ஜிபி / 512 ஜிபி மெமரி
- ஆண்ட்ராய்டு 11 மற்றும் ரெட்மேஜிக் ஓ.எஸ். 4.5
- டூயல் சிம்
- 64 எம்.பி. பிரைமரி கேமரா
- 8 எம்பி 120-டிகிரி அல்ட்ரா வைடு லென்ஸ்
- 2 எம்பி மேக்ரோ கேமரா
- 8 எம்பி செல்பி கேமரா
- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்
- 5ஜி NSA /SA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
- யு.எஸ்.பி. டைப் சி
- 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 120 வாட் பாஸ்ட் சார்ஜிங்
ரெட்மேஜிக் 6எஸ் ப்ரோ பிளாக் மற்றும் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் துவக்க விலை 3,999 யுவான் இந்திய மதிப்பில் ரூ. 45,260 என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை 4,799 யுவான் இந்திய மதிப்பில் ரூ. 54,315 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஒப்போ நிறுவனத்தின் புதிய கலர்ஓ.எஸ். 12 விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
ஆண்ட்ராய்டு 12 ஸ்டேபில் பீட்டா இம்மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் புதிய ஆண்ட்ராய்டு ஓ.எஸ். சார்ந்த தங்களின் ஓ.எஸ்.-ஐ வெளியிடும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
அந்த வரிசையில் ஒப்போ நிறுவனம் தனது கலர்ஓ.எஸ். 12 வெளியீட்டை டீசர் மூலம் தெரியப்படுத்தி இருக்கிறது. புதிய கலர்ஓ.எஸ். வெளியீட்டை அந்நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ வெய்போ அக்கவுண்டில் உறுதிப்படுத்தி இருக்கிறது. இதுபற்றிய கூடுதல் விவரங்கள் நாளை (செப்டம்பர் 7) வெளியாகிறது.

ஒப்போ நிறுவனம் தனது கலர்ஓ.எஸ். 12 வெளியீட்டு தேதியை நாளை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஆண்ட்ராய்டு 11 வெளியீட்டை தொடர்ந்து ஒப்போ பிரத்யேக நிகழ்வில் கலர்ஓ.எஸ். 11 வெர்ஷனை வெளியிட்டது.
ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் ஜிடி சீரிசில் புது ஸ்மார்ட்போனினை வெளியிடும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
ரியல்மி ஜிடி நியோ 2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியாக இருக்கிறது. ரியல்மி ஜிடி நியோ ஸ்மார்ட்போன் விற்பனையில் பத்து லட்சம் யூனிட்களை கடந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. புதிய ஜிடி நியோ 2 பற்றிய விவரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. எனினும், இந்த ஸ்மார்ட்போன் முந்தைய மாடலை விட மேம்பட்ட அம்சங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
முன்னதாக இதே ஸ்மார்ட்போன் விவரங்கள் சீன வலைதளத்தில் இடம்பெற்று இருந்தது. அதன்படி புதிய ரியல்மி ஜிடி நியோ 2 ஸ்மார்ட்போன் ஆர்.எம்.எக்ஸ்.3370 மாடல் நம்பர் கொண்டு உருவாகி வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர், 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 6.62 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்படும் என தெரிகிறது.

சமீபத்தில் வெளியான ரென்டர்களில் ரியல்மி ஜிடி நியோ 2 மாடலின் இடதுபுறத்தில் பன்ச் ஹோல் கட்-அவுட், மேட் பினிஷ் மற்றும் வளைந்த பேனல் கொண்டிருக்கும் என கூறப்பட்டது. ஸ்மார்ட்போனின் பின்புறம் மூன்று கேமரா சென்சார்கள், டூயல்-எல்.இ.டி. பிளாஷ் வழங்கப்படுகிறது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி வைடு 5 ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எப்42 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் பட்ஜெட் பிரிவில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது. புதிய சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போனின் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் இடம்பெற்று இருக்கிறது.
அதன்படி கேலக்ஸி எப்42 5ஜி மாடலில் ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ்., மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், எப்.ஹெச்.டி. பிளஸ் ரெசல்யூஷன் கொண்ட இன்பினிட்டி வி டிஸ்ப்ளே, பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்படும் என தெரிகிறது.

கீக்பென்ச் மட்டுமின்றி இந்த ஸ்மார்ட்போனின் விவரங்கள் கூகுள் பிளே கன்சோலிலும் இடம்பெற்று இருக்கிறது. அதில் கேலக்ஸி வைடு 5 மற்றும் எப்42 5ஜி மாடல்களின் மாடல் நம்பர்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருப்பது தெரியவந்துள்ளது.
அந்த வகையில் கேலக்ஸி வைடு 5 ஸ்மார்ட்போன் பல்வேறு சந்தைகளில் வேறு பெயர்களில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. புதிய கேலக்ஸி எப்42 5ஜி ஸ்மாப்ட்போன் புளூ நிறத்தில் உருவாகி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
பி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கும் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
பி.எஸ்.என்.எல். நிறுவனம் சமீபத்தில் தனது விசேஷ சலுகைகளின் வேலிடிட்டியை குறைத்தது. தற்போது ரூ. 1498 விலையில் புதிய பிரீபெயிட் சலுகையை பி.எஸ்.என்.எல். அறிவித்து இருக்கிறது. இந்த சலுகையின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும்.
ரூ. 1498 மட்டுமின்றி ரூ. 2399 விலையில் மற்றொரு சலுகையை பி.எஸ்.என்.எல். அறிவித்து இருக்கிறது. இந்த சலுகையில் 90 நாட்கள் கூடுதல் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. பி.எஸ்.என்.எல். ரூ. 1,498 சலுகையில் தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. தினசரி 2 ஜிபி டேட்டா தீர்ந்ததும், டேட்டா வேகம் நொடிக்கு 40 கிலோபைட் ஆக குறைக்கப்படும்.

முதற்கட்டமாக சென்னையில் அறிவிக்கப்பட்ட இந்த சலுகை தற்போது நாட்டின் அனைத்து வட்டாரங்களிலும் கிடைக்கிறது. இந்த சலுகையை பெற 123 என்ற எண்ணிற்கு வாடிக்கையாளர்கள் "STVDATA1498" என குறுந்தகவல் அனுப்ப வேண்டும்.
பி.எஸ்.என்.எல். ரூ. 2399 சலுகை 425 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. இந்த சலுகையில் தினமும் 3 ஜிபி டேட்டா, 100 எஸ்.எம்.எஸ்., அன்லிமிடெட் அழைப்புகள் வழங்கப்படுகிறது.
ரூ. 1498 மட்டுமின்றி ரூ. 2399 விலையில் மற்றொரு சலுகையை பி.எஸ்.என்.எல். அறிவித்து இருக்கிறது. இந்த சலுகையில் 90 நாட்கள் கூடுதல் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. பி.எஸ்.என்.எல். ரூ. 1,498 சலுகையில் தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. தினசரி 2 ஜிபி டேட்டா தீர்ந்ததும், டேட்டா வேகம் நொடிக்கு 40 கிலோபைட் ஆக குறைக்கப்படும்.

பி.எஸ்.என்.எல். ரூ. 2399 சலுகை 425 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. இந்த சலுகையில் தினமும் 3 ஜிபி டேட்டா, 100 எஸ்.எம்.எஸ்., அன்லிமிடெட் அழைப்புகள் வழங்கப்படுகிறது.
சாம்சங் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன் 5ஜி கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது.
சாம்சங் நிறுவனம் குறைந்த விலையில் புதிய 5ஜி ஸ்மார்ட்போனினை தனது ஏ சீரிசில் உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி ஏ13 5ஜி எனும் பெயரில் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது.
கேலக்ஸி ஏ13 5ஜி மாடல் கடந்த ஆண்டு சாம்சங் அறிமுகம் செய்த கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வேரியண்ட் ஆகும். இந்த ஸ்மார்ட்போன் எஸ்.எம்.-ஏ136பி எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. இந்திய சந்தையில் புதிய சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி மாடல் விலை ரூ. 13 ஆயிரம் வரை நிர்ணயிக்கப்படலாம்.

புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் மீடியாடெக் அல்லது சாம்சங்கின் எக்சைனோஸ் பிராசஸர், 4 ஜிபி + 64 ஜிபி மெமரி, 4 ஜிபி + 128 ஜிபி மெமரி வேரியண்ட்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. முந்தைய கேலக்ஸி ஏ12 எக்சைனோஸ் மாடல் ரூ. 13,999 விலையில் விற்பனைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
விவோ நிறுவனத்தின் எக்ஸ்70 சீரிஸ் ஸ்மார்ட்போன் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது.
விவோ நிறுவனத்தின் எக்ஸ்70 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அடுத்த வாரம் அறிமுகமாக இருக்கின்றன. விரைவில் அறிமுகமாக இருக்கும் நிலையில், இரண்டு எக்ஸ்70 சீரிஸ் மாடல்களின் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.
அதன்படி இரு ஸ்மார்ட்போன்களும் வி2132ஏ மற்றும் வி2133ஏ எனும் மாடல் நம்பர் கொண்டு உருவாகி இருக்கின்றன. வி2132ஏ மாடலில் நம்பர் கொண்ட ஸ்மார்ட்போன் 2.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் பிராசஸர், வி2133ஏ மாடல் நம்பர் கொண்ட ஸ்மார்ட்போன் 3.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் பிராசஸர் வழங்கப்படுகிறது.

வி2132ஏ மாடலில் எக்சைனோஸ் பிராசஸர் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. விவோ நிறுவனத்தின் புதிய எக்ஸ்70 சீரிசில் - எக்ஸ்70, எக்ஸ்70 ப்ரோ மற்றும் எக்ஸ்70 ப்ரோ பிளஸ் என மூன்று மாடல்கள் அறிமுகமாகும் என தெரிகிறது.
அம்சங்களை பொருத்தவரை விவோ எக்ஸ்70 மாடலில் 6.58 இன்ச் ஆமோலெட் டிஸ்ப்ளே, இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 4320 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 44 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. வி2132ஏ மாடல் 6 ஜிபி / 8 ஜிபி / 12 ஜிபி ரேம் ஆப்ஷன்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 பிராசஸர் கொண்ட புது நோக்கியா ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருகிறது.
நோக்கியா ஜி50 ஸ்மார்ட்போன் சமீபத்தில் சீன வலைதளத்தில் சான்று பெற்றது. இந்த நிலையில், இதே ஸ்மார்ட்போன் விவரங்கள் தற்போது கீக்பென்ச் வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது. இதில் ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் சில விவரங்கள் இடம்பெற்றுள்ளது.
கீக்பென்ச் விவரங்களின்படி நோக்கியா ஜி50 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ்., குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 பிராசஸர், 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. ஏரற்கனவே வெளியான தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் 2 ஜிபி, 6 ஜிபி மற்றும் 8 ஜிபி வேரியண்ட்களில் கிடைக்கும் என கூறப்பட்டது.

புதிய நோக்கியா ஜி50 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை 288 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 21,022 என நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6.82 இன்ச் ஹெச்.டி. பிளஸ் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே வழங்கப்படலாம்.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன் இரண்டு வேரியண்ட், நான்குவித நிறங்களில் கிடைக்கிறது.
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ52 ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்தது. இந்தியாவில் விற்பனைக்கு வந்து ஐந்து மாதங்கள் ஆகி விட்ட நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் விலை தற்போது உயர்த்தப்பட்டு இருக்கிறது.
இந்தியாவில் கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி மாடல் வெளியீட்டை தொடர்ந்து கேலக்ஸி ஏ52 விலை ரூ. 1,000 உயர்த்தப்பட்டுள்ளது. கேலக்ஸி ஏ52 மாடலின் புதிய விலை அந்நிறுவன வலைதளத்தில் ஏற்கனவே மாற்றப்பட்டு விட்டது.

சாம்சங் கேலக்ஸி ஏ52 புது விலை விவரம்
கேலக்ஸி ஏ52 - 6 ஜிபி + 128 ஜிபி ரூ. 27,499
கேலக்ஸி ஏ52 - 8 ஜிபி + 128 ஜிபி ரூ. 28,999
அம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி ஏ52 மாடலில் 6.5 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் இன்பினிட்டி ஒ சூப்பர் ஆமோலெட் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர், 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
சியோமியின் ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், நான்கு கேமரா சென்சார்களை கொண்டிருக்கிறது.
இந்தியாவில் ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ரெட்மி 10 பிரைம் மாடலில் 6.5 இன்ச் புல் ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. ஸ்கிரீன், அடாப்டிவ் சின்க் 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ ஜி88 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 50 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார் மற்றும் 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.

இத்துடன் டூயல் சிம் ஸ்லாட், ஆண்ட்ராய்டு 11 மற்றும் எம்.ஐ.யு.ஐ. 12.5, பக்கவாட்டில் கைரேகை சென்சார், 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங், 9 வாட் ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் உள்ளது.
ரெட்மி 10 பிரைம் மாடல் பேண்டம் பிளாக், ஆஸ்ட்ரல் வைட் மற்றும் பை-பிராஸ்ட் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி + 64 ஜிபி விலை ரூ. 12,499 என்றும் 6 ஜிபி + 128 ஜிபி விலை ரூ. 14,499 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை அமேசான், எம்.ஐ. வலைதளம், எம்.ஐ. ஹோம் ஸ்டோர்களில் செப்டம்பர் 7 ஆம் தேதி துவங்குகிறது.






