search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹெலிகாப்டர் சகோதரர்கள்"

    • கடந்த 2020 ஜூலை முதல் 2023 டிசம்பர் வரை 38.6 கிலோ தங்கக் காசுகளை சகோதரர்களான கணேஷ் மற்றும் சுவாமிநாதன் வாங்கியுள்ளனர்
    • மோசடி வழக்குகளில் சிக்கியதால் கணேஷ் மற்றும் சுவாமிநாதன் ஆகியோர் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டனர்

    சென்னை தியாகராயர் நகரில் பிரபல நகைக் கடையில் 28.5 கிலோ தங்கக் காசுகளை வாங்கிவிட்டு ஏமாற்றியாக கும்பகோணம் ஹெலிகாப்டர் சகோதரர்களான கணேஷ் மற்றும் சுவாமிநாதன் மீது நகைக் கடையின் மேலாளர் சந்தோஷ்குமார் போலீசில் புகார் அளித்துள்ளார்.

    அந்த புகாரில், "கடந்த 2020 ஜூலை முதல் 2023 டிசம்பர் வரை 38.6 கிலோ தங்கக் காசுகளை சகோதரர்களான கணேஷ் மற்றும் சுவாமிநாதன் வாங்கியுள்ளனர். 9.47 கிலோ தங்கக் காசுக்கு மட்டும் பணம் கொடுத்த சகோதரர்கள் மீதமுள்ள 28.5 கிலோ தங்கக் காசுக்கு பணம் தராமல் ஏமாற்றியதாக" தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கும்பகோணத்தில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.600 கோடி மோசடி செய்ததாக சகோதரர்கள் கணேஷ் மீது சுவாமிநாதன் மீது வழக்குகள் உள்ளன. மோசடி வழக்குகளில் சிக்கியதால் கணேஷ் மற்றும் சுவாமிநாதன் ஆகியோர் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டனர்.

    நிதி நிறுவனம் நடத்தி சொந்தமாக ஹெலிகாப்டர் வாங்கியதால் இவர்கள் ஹெலிகாப்டர் சகோதரர்கள் என அழைக்கப்படுகின்றனர். 

    • பொதுமக்கள் முதலீடு செய்த சுமார் ரூ. 600 கோடியை சுருட்டி கொண்டு ஹெலிகாப்டர் சகோதரர்கள் தலைமறைவாகினர்.
    • சோமசுந்தரம், கண்ணன் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த ஹெலிகாப்டர் சகோதரர்களான கணேஷ், சாமிநாதன் ஆகியோர் நிதி நிறுவனம் நடத்தி வந்தனர். இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி தொகை தருவதாக கூறினர். இதனை உண்மை என்று நம்பிய பொதுமக்கள் ஏராளமானோர் பணத்தை முதலீடு செய்தனர்.

    ஆனால் பொதுமக்கள் முதலீடு செய்த சுமார் ரூ. 600 கோடியை சுருட்டி கொண்டு ஹெலிகாப்டர் சகோதரர்கள் தலைமறைவாகினர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட ரகுபிரசாந்த், சீனிவாசன் ஆகியோர் தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். மேலும் பாதிக்கப்பட்ட மக்கள் பலரும் புகார் செய்தனர். இதையடுத்து மோசடி செய்த சகோதரர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் உள்ளனர்.

    இதனிடையே கடந்த 2021 ஆம் ஆண்டு கணேஷ் தனது தாயாரின் சிகிச்சைக்காக கோயம்புத்தூரில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்தார் . அப்போது தஞ்சாவூர் மாவட்ட காவல் அலுவலக தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர்ராக பணிபுரிந்த சோமசுந்தரம், தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் ஆகிய 2 பேரும் கோயம்புத்தூரில் இருந்த கணேசிடம், பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.1 கோடி மற்றும் மற்ற முதலீட்டாளர்கள் கொடுக்கும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.5 கோடி என மொத்தம் ரூ.6 கோடி லஞ்சம் தருமாறு கேட்டனர்.

    இதனால் நாம் இந்த வழக்கில் இருந்து தப்பித்தால் போதும் என்று நினைத்த கணேசன் முன்பணமாக ரூ.10 லட்சத்தை தனது ஊழியர் மூலமாக தஞ்சாவூரில் ஒரு ரகசிய இடத்தில் வைத்து கொடுத்துள்ளார். இருப்பினும் இந்த தகவல் வெளியே வர தொடங்கியது. போலீசார் 2 பேர் லஞ்சம் வாங்கிய விவகாரம் பற்றி தஞ்சாவூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு பல்வேறு புகார்கள் சென்றன.

    இதனைத் தொடர்ந்து சோமசுந்தரம், கண்ணன் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இது தொடர்பாக அவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத்துக்கும் பரிந்துரை செய்தனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தங்களது நிதி நிறுவனத்தில் ஒரு லட்சம் முதலீடு செய்தால் அவர்களுக்கு வெறும் ஓரே ஆண்டில் ரூ. 82,000 தரப்படும் என்று அறிவித்தனர்.
    • இருப்பினும், கடந்த சில ஆண்டு முதல் முதலீட்டாளர்களுக்குப் பணத்தைச் சரியான முறையில் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

    கும்பகோணம்:

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஸ்ரீநகர் காலணி தீட்சிதர் தோட்டம் பகுதியைச் சேர்ந்த ஹெலிகாப்டர் சகோதரர்கள்கணேஷ், சாமிநாதன்.

    இருவரும் நிதி நிறுவனம் நடத்தி வந்தனர்.

    இவர்கள், தங்களது நிதி நிறுவனத்தில் ஒரு லட்சம் முதலீடு செய்தால் அவர்களுக்கு வெறும் ஓரே ஆண்டில் ரூ. 82,000 தரப்படும் என்று அறிவித்தனர். இதனால் பலர் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.

    முதலில் சில மாதங்கள் முதலீடு செய்தவர்களுக்குச் சரியாகவே பணத்தைத் திருப்பி அளித்து வந்துள்ளனர்.

    இருப்பினும், கடந்த சில ஆண்டு முதல் முதலீட்டாளர்களுக்குப் பணத்தைச் சரியான முறையில் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

    இவர்கள் மீது பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் 3 பிரிவுகளில் கும்பகோணம் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    பின்னர் புதுக்கோட்டை மாவட்டம் வேந்தன்பட்டியில் உள்ள பண்ணை வீட்டில் பதுங்கியிருந்த கணேஷ், சுவாமிநாதன் ஆகியோரை போலீசார் கைது செய்து கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட னர். இதைத் தொடர்ந்து அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர்.

    இந்த நிலையில் இன்று கணேசன் மற்றும் சாமிநாதன் ஆகியோருக்கு கும்பகோணம் பெசன்ட் சாலையில் ஒரு வங்கியில் உள்ள லாக்கர்களில், இவர்களுக்கு நகை அல்லது பணம் ஏதேனும் பத்திரபதிவு அல்லது வெளிநாட்டில் முதலீடு செய்த சான்றுகள் உள்ளதா என தஞ்சாவூர் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த சோதனையில் டிஎஸ்பி முத்துக்குமார் தலைமையில் 10க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    ×