search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹசன் ரவுகானி"

    ஈரான் அரசின் அணு உற்பத்தி திட்டங்கள் தொடர வேண்டுமா? என்பது தொடர்பாக மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தப்படலாம் என அதிபர் ஹசன் ரவுகானி தெரிவித்துள்ளார்.
    டெஹ்ரான்:

    அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிகொண்ட அமெரிக்கா, அடுத்தடுத்து ஈரான் அரசின்மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. தனது நேசநாடுகளும் ஈரானை புறக்கணிக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறையின் சார்பில் நிர்பந்திக்கப்படுகிறது.

    அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிய அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முடிவால் உலகளாவிய அளவில் தங்கள் நாட்டின் மீதான நன்மதிப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக அதிபர் ஹசன் ரவுகானி தெரிவித்தார்.

    அமைதியான முறையில் ஆக்கப்பூர்வமான தேவைகளுக்கு யூரேனியத்தை செறிவூட்டும் உரிமை ஈரானுக்கு உள்ளதாகவும் தெரிவித்த ரவுகானி, அமெரிக்காவின் அழுத்தத்துக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம். எங்கள் நாட்டின் சுதந்திரத்தையும், இஸ்லாமிய நன்முறைகளையும் பாதுக்காக்க ஒருநாளும் தவற மாட்டோம் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

    சில இடங்களில் ஈரான் அரசு ரகசியமாக அணு உலைகளை அமைத்து வருவதாக அமெரிக்க உளவுத்துறை குற்றம்சாட்டி வருகிறது. 

    இதற்கிடையில், அமெரிக்காவுடன் நான் செய்த ஒப்பந்தத்தை ஒழுங்கான முறையில் நிறைவேற்ற ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி தவறி விட்டதாக அந்நாட்டின் முதுபெரும் தலைவரான ஹயாத்துல்லா கமேனி சமீபத்தில் குறிப்பிட்டிருந்தார்.

    ஹயாத்துல்லா கமேனி

    இந்நிலையில், தலைநகர் டெஹ்ரானில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி, 'கடந்த 2004-ம் ஆண்டுவாக்கில் அமெரிக்க அரசுடன் அணு ஆயுத பரவல் தடை சட்டத்தில் கையொப்பமிடுவதற்கு முன்னதாகவே இவ்விவகாரம் தொடர்பாக நமது நாட்டு மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என நான் வலியுறுத்தி இருந்தேன். அதற்கு ஹயாத்துல்லா கமேனியும் சம்மதம் தெரிவித்தார்.

    ஆனால், அப்போது பொது வாக்கெடுப்பு நடத்தப்படாவிட்டாலும் இதைப்போன்ற ஒரு பொது வாக்கெடுப்பு என்பது எந்நேரத்திலும் நமக்கு சிறந்த தீர்வை அளிக்கக் கூடியதாக அமையும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
    அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு இல்லை என்று ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி ஷெரீப் தெரிவித்துள்ளார்.
    அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளுடன் 2015-ம் ஆண்டு அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை ஈரான் அரசு செய்து கொண்டது. ஒபாமா காலத்தில் செய்யப்பட்ட இந்த ஒப்பந்தம், அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி டிரம்புக்கு பிடிக்கவில்லை. இதில் அமெரிக்க நலன் கருத்தில் கொள்ளப்படவில்லை என்பது அவரது கருத்து. இதன் காரணமாக கடந்த ஆண்டு திடீரென இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகிக்கொள்வதாக டிரம்ப் அதிரடியாக அறிவித்தார். மேலும் பொருளாதார தடைவிதித்தது.

    இது அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே பிரச்சினையை ஏற்படுத்தியது. ஈரான் படையை கருப்பு பட்டியலில் அமெரிக்கா சேர்த்தது. ஈரானை புதிய ஒப்பந்தம் போட வைக்க வேண்டும், அந்த ஒப்பந்தம் அணு ஆயுதங்கள் மட்டுமின்றி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் கட்டுப்படுத்தும் வகையில் அமைய வேண்டும் என்று அமெரிக்கா கணக்கு போடுகிறது.

    ஈரானும் மிரட்டல் விடுத்து வருகிறது. குறிப்பாக ஹார்முஸ் ஜலசந்தியில் தடையை ஏற்படுத்தி விடுவோம் என்கிறது. இது உலகளாவிய எண்ணெய் போக்குவரத்துக்கு பெரும் தடைச்சுவராக அமைந்து விடும். இந்த நிலையில் ஈரான் மீது கண் வைத்து அமெரிக்கா போர்க்கப்பல்களையும், போர் விமானங்களையும், தளவாடங்களையும் நகர்த்துகிறது.

    இதனால் ஒரு பதற்றமான சூழ்நிலை உருவாகி வருகிறது. இதற்கிடையில் ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி அந்த நாட்டுடன் வர்த்தக ரீதியில் தொடர்பு வைத்திருக்கும் நாடுகளுக்கு சென்று வருகிறார்.

     ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி முகமது ஜாவத் ஷரிப், திங்கட்கிழமை இந்தியா வந்திருந்தார். தற்போது ஜப்பான் சென்றுள்ளார். அங்கு ஜப்பான் பத்திரிகைகள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவீர்களா? என்று கேள்வி எழுப்பினர்.

    இதற்கு ஷரிப், ‘‘அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பில்லை’’ என்று கூறியதாக முன்னணி பத்திரிகை கியோடோ செய்தி வெளியிட்டுள்ளன. இதனால் இரு நாடுகளுக்கிடையிலான பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண வாய்ப்பில்லை.
    இஸ்லாமிய புரட்சிகர ராணுவப் படையை பயங்கரவாதிகள் என அமெரிக்கா அறிவித்தால் பதிலடியாக அமெரிக்க ராணுவத்தை பயங்கரவாத அமைப்பாக நாங்களும் அறிவிப்போம் என ஈரான் எச்சரித்துள்ளது. #Iranenlist #USarmy #terroristorganisation #IRGC #HeshmatollahFalahat
    டெஹ்ரான்:

    அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிகொண்ட அமெரிக்கா, அடுத்தடுத்து ஈரான் அரசின்மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. தனது நேசநாடுகளும் ஈரானை புறக்கணிக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறையின் சார்பில் நிர்பந்திக்கப்படுகிறது.

    அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிய அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முடிவால் உலகளாவிய அளவில் தங்கள் நாட்டின் மீதான நன்மதிப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக அதிபர் ஹஸன் ரவுகானி தெரிவித்தார்.

    அமைதியான முறையில் ஆக்கப்பூர்வமான தேவைகளுக்கு யூரேனியத்தை செறிவூட்டும் உரிமை ஈரானுக்கு உள்ளதாகவும் தெரிவித்த ரவுகானி, அமெரிக்காவின் அழுத்தத்துக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம். எங்கள் நாட்டின் சுதந்திரத்தையும், இஸ்லாமிய நன்முறைகளையும் பாதுக்காக்க ஒருநாளும் தவற மாட்டோம் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

    சில இடங்களில் ஈரான் அரசு ரகசியமாக அணு உலைகளை அமைத்து வருவதாக அமெரிக்க உளவுத்துறை குற்றம்சாட்டி வருகிறது. 

    இதற்கிடையில், ஈரான் நாட்டை பாதுகாக்கும் இஸ்லாமிய புரட்சிகர ராணுவப் படையை பயங்கரவாத இயக்கமாக அறிவிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தீர்மானித்துள்ளதாக சமீபத்தில் சில மேற்கத்திய ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின.

    இந்நிலையில்,  நாங்களும் அமெரிக்க ராணுவத்தை பயங்கரவாத அமைப்பாக அறிவிப்போம் என ஈரான் எச்சரித்துள்ளது.

    இதுதொடர்பாக இஸ்தான்புல் நகரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஈரான் பாராளுமன்றத்தின் தேசிய பாதுகாப்புத்துறை தலைவர் ஹெஷ்மட்டொல்லாஹ் ஃபலாஹட் பிஷே, ‘எங்கள் படைகளை அமெரிக்கா பயங்கரவாத அமைப்பாக அறிவித்தால் நாங்களும் அமெரிக்க ராணுவத்தை பயங்கரவாத அமைப்பாக அறிவிப்போம்’ என்று குறிப்பிட்டுள்ளார். #Iranenlist #USarmy #terroristorganisation #IRGC #HeshmatollahFalahat 
    அமெரிக்கா விதித்துள்ள தடைகள் பொருளாதார பயங்கரவாதம் என்றும், இதனை சகித்துக்கொள்ள முடியாது என்றும் ஈரான் அதிபர் கூறியுள்ளார். #USSanctions #Rouhani #EconomicTerrorism
    தெஹ்ரான்:

    ஈரானுடன் செய்து கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா கடந்த மே மாதம் விலகியதுடன், ஈரான் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்தது. இந்த பொருளாதார தடைக்கு ஒத்துழைக்காத நாடுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரித்தது. குறிப்பாக ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை உலக நாடுகள் முற்றிலுமாக குறைக்க வேண்டும் என்றும் அமெரிக்கா வலியுறுத்தியது.

    இந்நிலையில் ஈரானில் நடைபெற்ற தீவிரவாத எதிர்ப்பு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு மாநாட்டில் ஈரான் அதிபர் ஹசன் ருகானி பேசியதாவது:-

    கவுரவமான ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா விதித்துள்ள அநியாயமான மற்றும் சட்டவிரோத பொருளாதார தடைகளானது, எங்கள் நாட்டை இலக்காகக் கொண்டுள்ள பயங்கரவாதம் ஆகும். எங்கள் சுதந்திரம் மற்றும் அடையாளத்திற்கு அச்சுறுத்தல் மட்டுமல்லாமல், நமது நீண்டகால உறவுகளை முறித்துக்கொள்ளும் வகையிலான முழுமையான தாக்குதலை எதிர்கொண்டுள்ளோம். 

    சீனாவின் வர்த்தகத்தில் அவர்கள் அழுத்தம் கொடுக்கும்போது, நாம் அனைவரும் பாதிக்கப்படுகிறோம். துருக்கி மீது நடவடிக்கை எடுத்தால் நாம் அனைவரும் பாதிக்கப்படுகிறோம். அவர்கள் ரஷ்யாவை எந்த நேரத்திலும் அச்சுறுத்தலாம். அப்போது நாமும் நமது பாதுகாப்புக்கு பங்கம் ஏற்பட்டிருப்பதை கருத்தில் கொள்ள வேண்டும். 

    அவர்கள் ஈரான் மீது தடைகள் விதிக்கும்போது, நம் அனைவருக்குமான சர்வதேச வர்த்தக பலன்கள், ஆற்றல் பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சியை தடுக்கிறார்கள். உண்மையை சொல்லப்போனால், அவர்கள் ஒவ்வொரு நாட்டின் மீதும் தடைகளை விதிக்கிறார்கள். இதுபோன்ற ஆணவமான போக்கை நாம் சகித்துக்கொள்ளக்கூடாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த மாநாட்டில் ஆப்கானிஸ்தான், சீனா, பாகிஸ்தான், ரஷ்யா மற்றும் துருக்கி நாடுகளின் பாராளுமன்ற சபாநாயகர்கள் பங்கேற்றனர்.  #USSanctions #Rouhani #EconomicTerrorism
    ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள அத்தனை பொருளாதார தடைகளையும் தகர்த்து பெருமையுடன் முன்னேறி வருவோம் என ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி சூளுரைத்துள்ளார். #Iransanctions #USsanctions #Rouhani
    டெஹ்ரான்:

    அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ரஷியா உள்ளிட்ட நாடுகள் கடந்த 2015-ம் ஆண்டில் ஈரானுடன் அணு ஆயுத தடை ஒப்பந்தம் செய்து இருந்தன. அதில் இருந்து மீறிவிட்டதாக புகார் கூறிய அமெரிக்கா கடந்த மே மாதம் இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகியது.

    மேலும், ஈரான் மீது விலக்கி இருந்த பொருளாதார தடையை மீண்டும் விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் அறிவித்தார்.  அமெரிக்காவின் பொருளாதார தடை இன்று முதல் அமலுக்கு வந்தது.

    அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் ஆட்சிக் காலத்தில் படிப்படியாக விலக்கப்பட்ட அனைத்து தடைகளையும் ஈரான் மீது தற்போது டிரம்ப் ஒருசேர திணித்துள்ளார். இதனால் அந்நாட்டின் பொருளாதாரம் மிகப்பெரிய பின்னடைவை சந்திக்க நேரிடும் என சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.


    இந்நிலையில், ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள அத்தனை பொருளாதார தடைகளையும் தகர்த்து பெருமையுடன் முன்னேறி வருவோம் என ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி இன்று சூளுரைத்துள்ளார்.

    ஈரான் மக்களிடையே இன்று தொலைக்காட்சி மூலம் உரையாற்றிய ரவுகானி, 'சர்வதேச நெறிமுறைகளை மீறி எங்கள் மீது உங்களால் (அமெரிக்கா) திணிக்கப்பட்டுள்ள சட்டமீறலான அத்தனை தடைகளையும் தகர்த்து நாங்கள் பெருமையுடன் முன்னேறி வருவோம் என்பதை தெரிவித்து கொள்கிறேன்’ என குறிப்பிட்டார். #Iransanctions #USsanctions #Rouhani
    ஈரானிடம் இருந்து பிற நாடுகள் பெட்ரோல் கொள்முதல் செய்ய அமெரிக்கா தடை விதித்ததற்கு ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    டெஹ்ரான் :

    மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரான் கடந்த 2015-ம் ஆண்டு அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய வல்லரசு நாடுகளுடன் வரலாற்று சிறப்பு வாய்ந்த அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டது.

    ஆனால், ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை விட்டு அமெரிக்கா வெளியேறுவதாக சில மாதங்களுக்கு முன் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார். மேலும், ஈரான் மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் அமெரிக்கா விதித்தது.

    இந்நிலையில், ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா, சீனா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் வரும் நவம்பர் மாதம் 4-ம் தேதிக்குள் இறக்குமதியை முற்றிலுமாக நிறுத்திக்கொள்ள வேண்டும், இல்லையேல் பொருளாதார தடை விதிக்கப்படும் என அமெரிக்கா மிரட்டல் விடுத்து இருந்தது.

     ஈரானிடம் பெட்ரோல் கொள்முதல் செய்ய தடை விதித்தால், வளைகுடா முழுதும் பெட்ரோல் கொள்முதல் செய்யப்படுவது பாதிப்பை ஏற்படுத்தும் என ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி தெரிவித்துள்ளார்.

    அரசு முறை பயணமாக சுவிட்சர்லாந்து சென்றுள்ள ஹசன் ரௌகானி, செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘ஈரானிடம் இருந்து பிற நாடுகள் பெட்ரோல் கொள்முதல் செய்வதை முற்றிலும் நிறுத்த அமெரிக்க முடிவு செய்துள்ளது. ஆனால், அவர்கள் கூறியதன் அர்த்தம் அவர்களுக்கே புரியவில்லை. ஈரான் நாட்டின் பெட்ரோல் கொள்முதல் தடை செய்யப்பட்டால் வளைகுடா நாடுகளின் பெட்ரோல் கொள்முதலிலும் அது பாதிப்பை ஏற்படுத்தும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
    ×